Tuesday, June 30, 2015

IDA உயர்வு

01-07-2015 முதல் IDA  2.1% உயர்ந்து உள்ளது .

The AICPIN of the months-
March-2015 : 254
April-2015 :   256
May-2015 :    258

The Average AICPIN: -
S.N.Avg. AICPIN
Projected
IDA (%)IDA Increase (%)
1253.00100.3-0.2
2253.33100.50.0
3253.67100.80.3
4254.00101.10.6
5254.33101.30.8
6254.67101.61.1
7255.00101.91.4
8255.33102.11.6
9255.67102.41.9
10256.00102.62.1

பிபேக் தேப்ராய் கமிட்டி

நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கிய அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினமாக கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்ததை ஆதரித்தும் ரயில்வேயை தனியார் மயத்தை  நோக்கி கொண்டு செல்லும் மத்திய அரசை கண்டித்தும்  டல்ஹௌசி மத்திய செயற்குழு முடிவின்படி மாவட்டத்தில் பல கிளைகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
                            சிவகாசி கிளை 

ராஜபாளையம் கிளை 



Sunday, June 28, 2015

தபால் அட்டை அனுப்பும் இயக்கம்

 
 BSNL புத்தாக்கதிற்கு 2 நாட்கள் வேலை நிறுத்தம்  செய்து 2 மாதங்கள் கடந்து விட்ட பிறகும்   ஓய்வூதியர்க்கு 78.2 IDA இணைப்பை தவிர எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 22 ஆம் தேதிவரை கீழ் கண்ட வாசகங்கள் 
அடங்கிய தபால் அட்டையை அனைத்து ஊழியர்களும் ,அதிகாரிகளும் மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர்க்கு அனுப்ப  வேண்டும் என FORUM கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
" Hon’ble Minister of Communications & IT is requested to immediately settle the demands submitted by the Forum, for the revival of BSNL. "

கலாட்டூன்,

Friday, June 26, 2015

TTAக்களுக்கு ஒரு கூடுதல் ஆண்டு ஊதிய உயர்வும் மற்றும் சில செய்திகளும்….

சுற்றறிக்கை எண்:47 படிக்க :-Click Here 

For landline, we define tariff; for mobile, we follow others, says BSNL chief

ANUPAM SHRIVASTAVA,
Chairman and Managing Director, BSNLசெய்தி படிக்க:-Click Here

Broadband subscriber market share released by TRAI

Broadband service provider market share

கிட்டப் பார்வையா? கெட்ட பார்வையா?


                              நன்றி ;- தி ஹிந்து 

பிரான்சில் தொடரும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

யூபர் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட பதாகையை ஏந்திப் பிடிக்கும் ஓட்டுனர் ஒருவர்.
 பிரான்ஸில் டாக்ஸி ஓட்டுநர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பாரிஸ், தொலூஸ் மற்றும் மஹ்செய் நகரங்களில் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பிரான்ஸில் டாக்ஸி ஓட்டுநர்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பாரிஸ், தொலூஸ் மற்றும் மஹ்செய் நகரங்களில் போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வதற்கான பாதைகளும் முடக்கப்பட்டுள்ளன.அமெரிக்க நிறுவனமான யூபர்பாப் என்ற வாடகைக் கார் சேவைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடந்துவருகிறது.மற்றவர்களுடன் காரைப் பகிரந்துகொள்ளும் வகையில் சேவையை அளித்துவரும் இந்த நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றம் என்று கடந்த அக்டோபர் மாதம் தடைவிதித்தது.அந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்துள்ள யூபர் பாப், தங்களது சேவையையும் தொடர்ந்து வருகிறது.
                     நன்றி :- தி ஹிந்து 

மாவட்ட செயற்குழு

4 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 25-06-2015 அன்று மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் வெங்கடேஷ் , மாவட்ட உதவி செயலர் அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் ஏகமனதாக ஏற்றுகொள்ளபட்டு விவாதம் தொடங்கியது .மாவட்ட செயற்குழுவில் மூத்த தோழர் V சுப்ரமணியன் கௌரவிக்கபட்டார் .மாநில செயற்குழு மற்றும் டல்ஹௌசி   மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி மாநில உதவி செயலர் தோழர் .இந்திரா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.ஒப்பந்த ஊழியர்களின் விருதுநகர் கிளைமகாநாடும்    இன்  நிகழ்ச்சியோடு இணைந்து நடைபெற்றது .
மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
1. மாவட்டத்தில் JCM இல் கொண்டு செல்லப்பட்ட பிரச்சனைகள் தீர்விற்கு  காலதாமதம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ,அருப்புகோட்டை மற்றும் ராஜபாளையம் CSC அதிகாரிகளின் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் மாவட்டம் முழுவதும் ஜூலை 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் , 13 ஆம் தேதி பெரும் திரள் முறையீடு .
2. 9,10,11 ம் தேதிகளில் ஊழியர் சந்திப்பு மற்றும் செப்டம்பர் 2 ஆம் நடைபெற உள்ள அகில இந்திய  வேலை நிறுத்த விளக்க பிரசாரம் நடத்துவது .
3. மேளா மற்றும் Roadshow களில் forum சார்பாக அனைத்து கிளைகளிலும் பங்கேற்பது .
4. JCM பிரச்சனைகளை வரும் 1 ஆம் தேதி நிர்வாகத்திடம் சமர்பிப்பது .
5. ஒப்பந்த ஊழியர் பற்றாக்குறை விசயமாக நிர்வாகத்திடம் பேசுவது .





















Displaying IMG_20150625_181525534.jpg




Displaying IMG_20150625_181722647.jpg

Wednesday, June 24, 2015

கிரெடிட் தான் இருக்கு.. கார்ட் இல்லீங்க!



                                    நன்றி :- தி ஹிந்து 

மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் மட்டன் பிரியாணி ரூ.41, மசால் தோசை ரூ.6 என 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள்


உலகில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் 15 வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்ற கேண்டீனில் பாரளுமன்ற உறுப்பினர்களுக்காக தரமான உணவுகள் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா.தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளதாவது:-
மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற கேன்டீனுக்கு ரூ.60.7 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் மானியத்தை படிப்படியாக குறைத்து வரும் அரசு, நாடாளுமன்ற கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தை மட்டும் குறைக்க முயற்சிக்கவில்லை. ஆண்டு தோறும் மானியம் அதிகரித்தே வருகிறது.
ஒவ்வொரு எம்.பியும் ரூ.1.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, பாராளுமன்றம் நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமளவில் மானியமாக வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. வாயில் நீர் சுரக்கவைக்கும் 76 உணவு வகைகள் அங்கு மிககுறைந்தவிலையில் கிடைக்கிறது.


நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் எம்.பி.க்கள் சாப்பிடும் உணவுகளின் விவரமும் வெளியாகியுள்ளது. 


25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை, 
18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட், 
4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள், 
33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளு மன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக பட்சமாக 150 சதவீதம் வரை மக்களின் வரிப்பணம் மானியமாக செல்கிறது.


நாடாளுமன்ற கேன்டீன் வரலாற்றில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கே உயர்ந்துள்ளது.ரூ.10.4 கோடி, 11.7 கோடி, 11.9 கோடி, 12. 5 கோடி மற்றும் 14 கோடி என 1009-10 2010-11,2012-13,2013-2014 மற்றும் தற்போதைய ஆண்டுக்கு என ரூ 60.7 கோடி மானியம் வழங்கபட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளது.
                              நன்றி :- தின தந்தி 
கருத்துகள்
0

BSNL gets CARE's AAA rating for Rs 8,000 crore long term debt

செய்தி படிக்க :-Click Here

22ஆவது தமிழ் மாநில கவுன்சில் முடிவுகள்

மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

ரயில்வேயில் தனியார் நுழைவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

 railway symbol க்கான பட முடிவு
     நரேந்திரமோடி அரசாங்கம் அமைத்த பிபேக் தேப்ராய் கமிட்டி ரயில்வேயை தனியார் மயமாக்க தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிராக ஜூன் 30ஆம் தேதியை “கருப்பு தினம்” என கடைபிடிப்பது என ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என டல்ஹௌசி மத்திய செயற்குழு அறைகூவல் விட்டுள்ளது. எனவே BSNL ஊழியர் சங்கத்தின் கிளை மற்றும் மாவட்ட சங்கங்கள் ஜூன் 30ஆம் தேதி ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, June 23, 2015

BSNL to offer 5G services to Pushkarams pilgrims


The Bharatiya Sanchar Nigam Limited (BSNL) is going to offer 5G services to the Godavari Pushkarams pilgrims, who will take a holy dip in the river in Rajahmundry, Kovvuru and other areas in East Godavari district.“We have written to our headquarters in New Delhi and made all arrangements for getting the necessary equipment. We are waiting for the nod from our head office,” said L. Anantha Ram, Senior General Manager of East and West Godavari districts and A. Srinivas, Joint General Manager of East Godavari district.“The BSNL is going to be the first operator to offer 5G services than any other private players in India, if our central office gives clearance before July 10.The customer will enjoy a minimum guarantee of 2 mbps bandwidth,” he said, adding that more cellphone towers would be erected in the district to cater to the needs of Pushkarams pilgrims and three such towers would be set up in Rajahmundry.Mr. Anantha Ram said that the national free roaming facility which was first offered by BSNL is getting good response from the customers and large number of customers from other services is asking for mobile number portability to get free roaming facility. He recalled that in 2002, BSNL is the first company to offer free incoming and lowest outgoing calls in the world, when private operators were charging Rs.24 per minute for outgoing calls and Rs.16 per minute for incoming calls.Training programmeSenior DGM V. Ramesh Babu said that the BSNL was offering training programme for engineering and Polytechnic students and those interested can approach nearest BSNL offices in the districts in East and West Godavari districts.
                 நன்றி :- ஹிந்து 

BSNL eyes wi-fi, data to wipe out losses


State-owned BSNL is scaling up capital expenditure in wi-fi, landline and mobile businesses, hiving off tower unit into a subsidiary, monetising land, factory and educational institute assets to generate over Rs 6,000-7,000 crore to dial profit by 2018-19, BSNL chairman and managing director Anupam Srivastava told dna."We have prepared a complete plan, and we project that year-by-year losses due to depreciation will go down by 2018-19, when transition will take place wherein our profits will able to balance the depreciation which is always going to be between Rs 6,000 crore and Rs 7,000 crore," he said.rivastava said the current loss of around Rs 7,000 crore was largely due to depreciation and the public sector undertaking (PSU) needed to generate an equal amount to profit to erase it.To improve the revenue, the government telecom company is aggressively looking at tapping wi-fi and data businesses and will be investing close to Rs 6,000 crore to create hotspots across the country.He said BSNL was looking to increase the number of wi-fi hotspots from the current 200 to 2,500, which will generate an additional revenue of Rs 1,000 crore this fiscal.The PSU chief said the state-owned firm was also considering setting up its own wi-fi hotspots instead of the current revenue-sharing with network companies, wherein its share is 33%..Under the current model, the wi-fi hotspots are being put up, maintained and marketed by private companies, who are awarded the government contract."Most advantageous part is there is someone else putting the money to put up the hotspots, maintaining it and doing its sales and marketing. So, that gives us safe position," he said.However, now that the government had tested the water for wi-fi tech market, it wants to jump headlong into it to cash in."Having gone this far and having seen the interest in people we (BSNL) feel that this particular business has a lot of potential. At this point of time, we are doing revenue-sharing and so have not committed a lot of money, but we are thinking of going for capex model, where we will ourselves buy wi-fi hotspots and install it. For this, we are initially planning to invest Rs 6,000 crore in the next three years for setting up 40,000 wi-fi hotspots countrywide," he said.BSNL expects to earn close to Rs 1,000 crore from its data business, which has lately picked up along with its landline and voice business because of the recently announced innovative schemes."We feel majority of our revenue will come from these businesses (voice, data, landline and wi-fi)," said the BSNL head.These incomes would be supplemented by monetisation of the telco's land, factory, educational institute and tower assets. BSNL was looking to eventually in increase its revenue from tower business to Rs 2,000 crore from Rs 200 crore, at present."When we talk about tower monetisation, the process is on. We earn about Rs 200 crore revenue annually (from renting tower space). So, now we are thinking of giving direction to this business and we are thinking of having a subsidiary unit for the tower, which almost ready to be implemented. I am told the proposal has already gone to the Cabinet," he said.The PSU wants to take its meagre revenue from educational institute to Rs 600-700 crore.
                       நன்றி :- DNA நியூஸ் 

Sunday, June 21, 2015

வரும்... ஆனா வராது..!


                             நன்றி :- தி ஹிந்து 

அப்பாக்கள் அழகானவர்கள்; அற்புதமானவர்கள்!


த்தமில்லாமல் உலகை எளிமையான,போற்றுதல்கள் இல்லாத அன்பால் நிறைத்து விட்டுப்போகும் மாயம் அவர்களுக்கு வரமாகவும்,சாபமாகவும் தொடர்ந்து வந்திருக்கிறது. பல மாமனிதர்கள் தந்தைகளால் ஆக்கப்பட்டு உள்ளார்கள். அதைப்பற்றிய ஒரு சின்னத்தொகுப்பு இதோ
உலகின் எல்லா மூலைகளையும் முற்றுகையிட்ட சிவப்பு சித்தாந்தத்தை தந்த காரல் மார்க்ஸ் அவர்களை அவர் போக்கில் விட்ட,என்ன செய்தாலும் ஏன் என்று கேட்காத அதீத அன்புக்காரர் அவர் தந்தை. "உன் பையன் சீரழிகிறான்.பார்த்துக்கோ !"என ஊரில் உள்ளவர்கள் அவரை உசுப்பேற்றிய பொழுதெல்லாம் மகனுக்கு இன்னம் கொஞ்சம் கூடுதலாக பணம் அனுப்பிய வித்தியாசமான தந்தை அவர். காரல் மார்க்ஸ் இறக்கும் வரை அந்த இணையில்லா தகப்பனின் படம் சட்டைப்பையில் மகனின் துன்பங்களுக்கு நடுவே நம்பிக்கை கீற்றாக மின்னிக்கொண்டு இருந்தது
முழுக்க முழுக்க மேற்கத்திய பாணியில் வாழ்க்கை வாழ்ந்தவர் மோதிலால் நேரு . வீட்டில் அந்த காலத்திலேயே மின்சாரம்,வெள்ளையரைப்போல உணவு பழக்கம்,மகனை பள்ளியில் இருந்து கூட்டு வர எல்லா பள்ளியின் எல்லா வாசல்களிலும் கார்கள்,வீட்டில் நீச்சல் குளம்,புலால் உணவு என ஏகபோக வாழ்க்கை அவருடையது . எதை வேண்டுமானாலும் விடுத்து அவரால் இருக்க முடியும் ; பிள்ளைப்பாசம் என்பதை மட்டும் விட முடியாத ஒரு நபராக அவர் இருந்தார். லட்சங்களில் வருமானம் ஈட்டித்தந்த வக்கீல் தொழிலை மகனுக்காக விட்டு வெளியேறினார். ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார் .
சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் , நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,"அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்.என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார் . வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர் . அரச மாளிகைக்கு ஈடாக கட்டப்பட்ட தன்னுடைய ஆனந்த பவனத்தை நாட்டு விடுதலைப்போருக்கு அர்ப்பணித்தார் மனிதர்
லிங்கன் அப்பா ஓயாமல் உழைத்தவர் ;இதுதான் வேலை என்று என்றைக்கும் வகுத்துக்கொண்டது இல்லை மனிதர் ஓயாத உழைப்பு,யாரையும் ஏமாற்றக்கூடாது . சக மனிதரிடம் அன்பாக இருக்கவேண்டும் என்பது தான் வாழ்க்கையின் நோக்கம் என்று வாழ்ந்த அற்புத ஆத்மா அவர். அதையே வாழ்நாள் முழுக்க லிங்கன் கடைபிடித்தார். தன் அப்பா தனக்கு சேர்த்து வைத்து விட்டுப்போன செல்வங்கள் அவை என ஆனந்த கூத்தாடினார். "உன் தந்தை தைத்த செருப்பு என் கால்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது லிங்கன் " என்று ஒரு செனட்டர் சொன்னபொழுது லிங்கன் புன்னகை மாறாமல் ,"இன்னமும் அந்த செருப்பு பிய்ந்து போகாமல் இருக்கிறது என்றால் அது என் தந்தையின் உழைப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் செருப்பை கொடுங்கள்;தைத்து தருகிறேன். என் தந்தை கற்றுத்தந்த தொழில் அல்லவா அது . எப்பொழுதும் கைவிடாது " என சொன்னார்
விம்பிள்டனை பெடரரிடம் இருந்து நடால் வென்ற பின்னர் வாழ்வின் மிகவும் வலிமிகுந்த கட்டம் நடாலுக்கு காத்திருந்தது. அவருக்கு அடிக்கடி காலில் வலி வர ஆரம்பித்து இருந்தது. இடது காலில் ஒரு சிறிய எலும்பில் சிக்கல் இருந்தது. இளம் வயதிலேயே அந்த குறைபாடு இருந்து அதை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார்கள். அதனால் அதன் சிக்கல் பெரிதாகி டென்னிஸ் வாழ்க்கையே நடாலுக்கு முடியக்கூடும் என்று மருத்துவர் எச்சரித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சுற்றோடு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருந்து வெளியேறுவது நடந்தது. கண்ணீர் விட்டு அழுதார் நடால்.
அதுவரை எப்பொழுதும் பெரும்பாலும் வாயைத்திறந்து பேசாத அவரின் அப்பா பேசினார்,”பார்த்துக்கொள்ளலாம் ! இது இல்லாவிட்டால் என்ன ? கோல்ப் ஆடப்போகலாம் நீ ! உனக்கு நிரம்ப பிடித்தது இல்லையா அது ? மேலும் அப்படி ஆட முடியாமல் போகலாம் என்று தான் மருத்துவர் எச்சரித்து இருக்கிறார். அதுவே நடக்க வேண்டும் என்று அவசியமில்லை !” என்று தந்தை சொல்ல உற்சாகம் ததும்ப மீண்டும் மீண்டு வந்தார் நடால். போட்டிகளில் கலந்து கொண்டார். பெடரரை ஹார்ட் கோர்ட்டில் வென்றதும் நம்பிக்கை பிறந்தது. அப்படியே அடித்து ஆடி நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளையும் இளம் வயதில் வென்றவர் என்கிற சாதனை அவர் வசம் வந்து சேர்ந்தது
பீலே பிரேசிலின் மத்திய பகுதி மாநிலம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். வறுமையான குடும்பம்,அப்பா கால்பந்து ஆடுவதை கண்கள் விரிய பீலே கண்டார். அவரின் அப்பா ஒரே ஒரு போட்டியில் தலையால் மட்டுமே ஐந்து கோல்கள் அடித்ததை பார்த்து இப்படி ஒரே ஒரு முறை சாதனை புரிந்துவிட்டால் போதுமே என்று கால்பந்து மீது வெறிகொண்டு அவர் விளையாட வந்தார். இறுதிவரை தன்னுடைய தந்தையின் சாதனையை அவர் முறியடிக்கவே இல்லை. நான்கு கோல்களை ஒரே போட்டியில் தலையால் தட்டி அடித்த கணம் அவருக்கு வாய்த்தது. "என் தந்தையின் சாதனை என்றைக்கும் அப்படியே இருக்கட்டும் !" என்று உணர்ச்சி பெருக்கோடு விடைபெற்றார் கருப்பு முத்து ! நடுவில் மூன்று உலகக்கோப்பைகள் பிரேசில் வசம் வந்திருந்தன
சச்சின் அப்பா மராத்தி எழுத்தாளர் ; கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. "நான் டென்னிஸ் ஆடப்போகிறேன் !"என்று சச்சின் சொன்னாலும் சரி என்பதே அவரின் பதிலாக இருக்கும் . நான் தேர்வெழுத போவதில்லை போட்டி இருக்கிறது என்றாலும் உன் இஷ்டம் என்பதே அவரின் பதில். கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் என்னவென்று சச்சின் அவரிடம் விளக்கி சொன்னதில்லை,ஆனால்,"உனக்கு பிடித்ததை செய் !"என கைதட்டி கொண்டாடிய அப்பா அவர். மகனை எல்லாரும் புகழ்கிறார்கள் என்று தெரியும் ; பெரும்பாலும் சச்சின் இருக்கும் பொழுது எந்த முகமாற்றமும் காட்ட மாட்டார். ஆனால், மூத்த பெண்ணை மணக்கிறேன் என்று சச்சின் வந்து நின்ற பொழுதும் நோ சொல்லாத மனிதர் . ஆனால்,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்தி சொல்வார் தன் செயல்களின் மூலம் .உலககோப்பை 1999 வருடம் வந்தது ; தந்தைக்கு உடல்நிலை மோசமான பொழுது சச்சின் வெளிநாட்டில் ஆடிக்கொண்டு இருந்தார். உயிர் போகிற தருவாயிலும் ,"செய்கிற கடமையே முக்கியம் ; வரவேண்டாம் . அங்கே அவனை ஆடச்சொல்லுங்கள் !"என்று அவர் சொன்னதை சொல்லித்தான் சிவந்த கண்களோடு சச்சினை வீட்டை விட்டு அனுப்பினார்கள். கென்யாவுடன் நூற்றி நாற்பது ரன்களை அடித்த பொழுது அந்த சதத்தை தலையை தூக்கி தன் அப்பாவுக்கு சமர்பித்தார் சச்சின். இன்று வரை தொடர்கிறது அது. சச்சினின் ஆட்டம் அவர் அப்பாவுக்கு புரியாமல் இருக்கலாம்,அன்பின் மொழி புரிந்திருக்கும்.தன் பிள்ளைகளுக்காக இப்படி உதவிய தந்தைகள் ஒருபுறம் என்றால் வித்தியாசமான தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சொத்தில் தொன்னூறு சதவிகிதத்துக்கு மேல் அறக்காரியங்களுக்கு கொடுத்து விட்டு கைகட்டி நிற்கிறார் பில்கேட்ஸ். முழுதாக கொடுத்துவிட்டு என் மகன் சொந்தக்காலில் நிற்பான் என்கிறார் ஜாக்கிசான்.அப்பாக்கள் வரலாறு முழுக்க நிரம்பிக்கிடக்கிறார்கள் ; வரலாறாகவே இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
                                      நன்றி :- விகடன் 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...