Saturday, April 30, 2016

மே தின வாழ்த்துக்கள்

    தொழிலாளர் வர்க்கத்தை பிணைத்துள்ள அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதியேற்போம்.130வது மே தினம் வெல்லட்டும்.
 சிகாகோ தியாகிகளின் லட்சியத்தை முன்னெடுப்போம்.மே தினம் 8மணி நேர வேலை, 8மணி நேர பொழுதுபோக்கு, 8மணி நேர உறக்கம் என்ற பொருளாதார கோரிக்கைகளை கொண்டிருந்தாலும் அது அடிப்படையில் சுரண்டலை ஒழிப்பது, அழுகிப்போன முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றுவதை உள்ளடக்கமாக கொண்டிருந்தது. 
இதன் தொடர்ச்சியாக தான் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான மாபெரும் ருஷ்ய புரட்சி ஏற்பட்டது.மே தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் விடுதலை மற்றும் மனிதனை மனிதன் சுரண்டுவதை முடிவுக்கு கொண்டுவருவது, வர்க்கமற்ற சமூகத்தை படைப்பதற்காக கருவை கொண்டிருக்கிறது. அதை வளர்த்தெடுக்க வேண்டும். இதுதான் சிகாகோ தியாகிகளின் உண்மையான வழி மரபை உயர்த்தி பிடிப்பதாகும். மே தினம் வெல்லட்டும். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்கட்டும்.

தோழர் சிவபெருமான் -தோழியர் கீதாஅவர்களின் பணி நிறைவு பாராட்டு

30-04-2016 அன்று பணி நிறைவு செய்த தோழர் சிவபெருமான் -தோழியர் கீதாஅவர்களின்  பாராட்டு விழா புகைப்பட தொகுப்பு 
நமது அனைத்திந்திய உதவி பொது செயலருடன் 


Thursday, April 28, 2016

எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம்

           விருதுநகர் மாவட்ட சங்கம் சார்பாக 125 வது அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தோழர் சிவபெருமான் மற்றும் தோழியர் கீதா அவர்களின் பணி  ஓய்வு பாராட்டு விழா மற்றும் எழுச்சிமிகு தேர்தல் சிறப்பு கூட்டம் 27/04/2016 அன்று சிவகாசியில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில் தேசிய கொடியை தோழியர் கீதா அவர்களும் நமது BSNLEU சங்க கொடியை தோழர் சிவபெருமானும், ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை அதன் கிளை செயலர் தோழர் ராமர் அவர்களும் விண்ணதிரும கோஷங்களுடன் ஏற்றினர்.

          மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி மாவட்ட உதவி செயலர் தோழர் முத்துசாமி அஞ்சலி தீர்மானம் வாசிக்க, மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்க உரை நிகழ்த்தினார்.


          சிறப்புரையாக நமது  மாநில தலைவரும் ,அனைத்திந்திய உதவி செயலருமான தோழர் செல்லப்பா சிறப்புரை நிகழ்த்தினார். கடந்த காலங்களில் NFTE சங்கம் BSNL ஊழியர்களுக்கு செய்த துரோகங்களையும், நமது சங்கம் தொடர்ந்து போராட்டம்   நடத்தியதின் விளைவாக இன்று வரை 1% பங்குகளை கூட விற்கமுடியாமல் 100% பொது துறையாக BSNL திகழ்கிறது என்பதையும், VRS மற்றும்  CRS திட்டங்களை  முறியடித்த சாதனையும், சென்ற  ஊதிய மாற்றத்தின் போது 30% ஊதிய உயர்வுக்கு நாம் 2 நாட்கள்  போராடிய போது, நமது போராட்டத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு கை கோர்த்து கொடுப்பதை கொடு நங்கள் வாங்கி கொள்கிறோம் என்று பிச்சைக்காரர்கள் ஆன அவலத்தையும், புன்னகையுடன் சேவை என்ற இயக்கத்தில் தங்களுடைய பங்களிப்பை செய்யாது அலட்சியப்படுத்திய செயலையும்,  சமீபத்திய  PLI உடன்பாட்டில் 2 இலக்க போனுசை ஒத்து கொண்ட கேவலத்தையும் சுட்டி காட்டினார்.


          நமது சங்கத்தோடு இணைந்து SNATTA, BSNLMS இணைந்து செயல்படுவதையும், பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை போன்ற இடங்களில் சேவா மாவட்ட அமைப்புகள்  நம்முடன்  இணைந்து   செயல்படுவதை வரவேற்று பேசினார். இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்ட சேவா சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன், முன்னாள் RJCM உறுப்பினர் தோழர் குருசாமி, தோழர் கேசவன் ஆகியோர் பங்கேற்றனர்.


          மாவட்டம் முழுவதும் பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் கீதா அவர்கள் மாவட்ட சங்கத்தால் கெளரவிக்கப்பட்டனர்.  இக் கூட்டத்திற்கான மண்டப செலவு மற்றும் காலை மற்றும் மதிய உணவு செலவை தோழர் சிவபெருமான் ஏற்று கொண்டதை அரங்கமே ஒட்டு  மொத்த கரவொலி எழுப்பி அவரை பாராட்டியது. நமது சங்கத்தின் மீது கொண்ட அளவறிய பற்றுதல் கொண்டு அளப்பரிய உதவி செய்த சிவபெருமான் - கீதா தம்பதியரை மாவட்ட சங்கம் தன நெஞ்சார வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. அவர்களது பணி நிறைவு காலம் சிறக்க ஒட்டு மொத்த மாவட்ட சங்கம் தன் இதயபூர்வ வாழ்த்துகளை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறது.


          தோழர் சிவபெருமான் அனைத்திந்திய ,மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். நிகழ்வில் நமது முன்னாள் உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் அவர்கள் தனது JTO பதவி உயர்வை முன்னிட்டு அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 1000/ ரூபாய் வீதம் நன்கொடையை நமது அனைத்திந்திய துணை பொது செயலர் தோழர் செல்லப்பாவிடம் வழங்கினார். அதே போல் நமது மாவட்ட அமைப்பு செயலர் தோழர் சிவஞானம்  தனது பணி நிறைவை ஒட்டி அனைத்திந்திய, மாநில மற்றும் மாவட்ட சங்கங்களுக்கு தலா 500/- ரூபாய் வீதம் நன்கொடையை வழங்கினார். அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.




Saturday, April 16, 2016

BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்

BSNL ஊழியர் சங்கத்தின் மீது SEWA BSNL தலைவர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்:- மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Thursday, April 14, 2016

குடும்ப சுற்றுலா

நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் சார்பாக ஒரு குடும்ப சுற்றுலா நடத்திட ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதன் விபரங்கள் பின்வருமாறு :
கர்நாடகா  TOUR

விருதுநகர்  – மைசூர்  –தர்மஸ்தலா  –  சுப்பிரமணியா –கூர்க் -அப்பே பால்ஸ் -காபி எஸ்டேட் -தலைகாவேரி -மைசூர் -விருதுநகர் 


TOURPROGRAMME



TOUR FARE : Rs.3,000/‐PER HEAD+ TRAIN TICKET(Rs ..800/-)  
Day 1
1835 hrs
Starts from Virudunagar to mysore by Mysore Express No. 12321.



Day 2
1010 hrs
Reaches mysore. Transfers to hotel.

1130 hrs
Visiting Chamudi temple, st.philomina church, Ranganna thittu, palace, Gumbaz, Srirangapatna,


Sangam etc., upto 18 hrs.

1830 hrs
Returns to hotel. Overnight stay.



Day 3
0600 hrs
Starts to dharmasthala.

1130 hrs
Reaches dharmtshala. Dharshans upto 15 hrs.

1500 hrs
Starts to Subramania.

1900 hrs
Reaches Subramania. Transfers to hotel. Overnight stay.



Day 4
0830 hrs
Starts to Coorg.

1230 hrs
Reaches Coorg. Transfers to hotel.

1500 hrs
Visiting Abbey falls and coffee estates upto 18 hrs.

1830 hrs
Returns to hotel. Overnight stay.



Day 5
0800 hrs
Visiting Talacavery and returns to hotel.

1200 hrs
After lunch starts to Mysore.

1700 hrs
Reaches mysore.

1800 hrs
Starts to Virudunagar by No.16236, Tuticorin Express .



Day 7
0800 hrs
Reaches Virudhunagar
*TWIN / TRIPLE SHARING NON A/C ACCOMMODATIONS IN DECENT ACCOMODATIONS.

*TRANSPORTATIONS AND SIGHT SEEINGS BY NON A/C BUS .

*VEG.FOOD & GUIDE FACILITIES.

TOUR MANAGER ALONG WITH THE GROUP.

TOUR FARE IS NOT INCLUDING:

*RAIN TICKETS.

*PORTERAGE

*ENTRANCE & DARSHAN CHARGES, AUTO *CHARGES TO TEMPLE

EXTRA HOTEL BILL , ADDITIONAL EXPENSES ON ANY UNFORESEEN EVENT
கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் ரயில் பயணத்திற்கான கட்டணத்தை அந்தந்த கிளை செயலர்கள் வசம் கொடுக்கும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம் .


Wednesday, April 13, 2016

7 வது சரிபார்ப்பு தேர்தலுக்கான சீர் மிகு நெல்லை கூட்டம்

BSNLEU தேர்தல் சிறப்புக் கூட்டம் நெல்லையில் இன்று 13-04-2016 மாலை 0400 மணி அளவில் நெல்லை GM அலுவலகத்தில் தோழர். C. சுவாமிகுருநாதன் தலைமையில் துவங்கியது. மாவட்டச் செயலர் தோழர்.K. சூசை மரிய அந்தோணி வரவேற்றார்.மாநிலச் செயலர் தோழர். A. பாபு ராதாகிருஷ்ணன், அனைத்திந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். S. செல்லப்பா எழுச்சியுரை ஆற்றினர். பிரமாண்டமான கூட்டத்தின் சிறப்புரையாக தோழர் P. அபிமன்யூ உரையாற்றினார்.
.

நினைவு கூற்வோம் , கொண்டாடுவோம் அரசியல் சாசன சிற்பியை




வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.

சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.

முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.

அனைவர்க்கும் விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்



Thursday, April 7, 2016

நாற்பெரும் விழா




 

தர்ணா

BSNL நிர்வாகம் மற்றும் NFTEயின் கூட்டு சதியை முறியடிக்கவும், BSNL ஊழியர்களுக்கு நியாயமான PLI பெறுவதற்காகவும் 07.04.2016 அன்று விருதுநகரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் புகைப்படங்கள்.











Tuesday, April 5, 2016

BSNL 4G services to hit 14 telecom cities, competition to Bharti Airtel, Vodafone

bsnl 4g
BSNL will soon be launching 4G services in 14 telecom circles. Previously, BSNL soft launched 4G services in Chandigarh. With its 20 MHz liberalized spectrum in 2,500 MHz band the Company is exploring the use of either the revenue sharing model or the capex model method for its 4G rollout.However, there are higher chances of using the revenue share model according to aBSNL official who cited that the company will not incur expenditure because the vendor will endure much of the investment required. Besides, the installation of the 4G base tower stations (BTS) will be done in the existing GSM sites.

The capex model is somewhat costly regarding procurement and integration cost.But what about the availability of the device ecosystem for 2,500 MHz band which the company says will enhance the roll out since it does not have licensing hurdles? Well, the justification of availability is that various reputable companies the likes of Apple, Motorola, Lenovo and Nokia are already availed a sufficient number of 4G handsets in the market.BSNL becomes the latest entrant in the 4G space whose active action was previously in the hands of top mobile operators the likes of Bharti Airtel, Vodafone and Idea Cellular. The three are already giving services to various circles. And to intensify the already competitive market, word has it that Reliance Jio Infocomm also has plans to launch its 4G services soon.Nevertheless, BSNL has not revealed its timeline for the launch which seems practicable and commercially remunerative. The company has already paid out a whopping Rs 8,313.80 crore for 2,500 MHz spectrum in all its intended service areas. It is now in its final analysis of decision making before taking a final call on the rollout.But even with the immense consideration of using the revenue share model, BSNL says that the capex model could also be instigated but on an experimental basis and in select cities of one circle.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...