Monday, November 30, 2015

IDA

01/01/2016 முதல் IDA உயர்வு 3.5% இல் இருந்து 5% வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,   

மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி

ஒப்பந்த ஊழியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற  கோரி மாவட்ட தலைமை அலுவலகங்களில் மாவட்ட பொது மேலாளர் அவர்களிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சியும் ,பெரும் திரள் ஆர்ப்பட்டமும் இன்று மாலை GM அலுவலகத்தில் நடைபெற்றது .இன் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோழர் இளமாறன் தலைமை வகித்தார் .BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,TNTCWU மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .மாவட்ட உதவி தலைவர் தோழர் K .R .கிருஷ்ணகுமார் போராட்டத்தை வாழ்த்தி பேசினார் .போராட்டத்தில் 15 பெண் தோழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .











Thursday, November 26, 2015

ஒப்பந்த ஊழியர் சங்க முதல் செயற்குழு கூட்டம்

ஒப்பந்த ஊழியர் சங்க முதல் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் தோழர் இளமாறன் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .EPF நிலுவை தொகை விசயமாக மாநில சங்கத்தின் வழிகாட்டல் மூலம் உரிய கடிதம் கொடுப்பது .ESI கார்டு வழங்கப்படாத அனைவருக்கும் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  விருதுநகரில்  வைத்து புகைப்படம் எடுக்கும் பணியை நிறைவேற்றுவது விசயமாக ஒப்பந்ததாரரிடம் பேசுவது .மாவட்ட சங்கத்தின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதை சரி செய்ய மாவட்ட சங்கம் அனைத்து நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் வரும் டிசம்பர் மாதம் தலா ரூபாய் 20/- வசூல் செய்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் மாவட்ட சங்கத்திடம் வழங்கி விட வேண்டும் . இரு வேறுபட்ட ஒப்பந்த பணியை ஒருவரே செய்யும் நிலை சரி செய்யப்பட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது . அதில் வரும் பிரச்சனைகளை மாவட்ட சங்கம் ஏற்று கொள்ளாது என முடிவு எடுக்கப்பட்டது .அடுத்த செயற்குழு கூட்டம் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி சிவகாசியில் நடைபெறும் .

7 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

BSNLEU சங்கத்தின் 7 வது மாவட்ட  செயற்குழு கூட்டம் 26/11/2015 அன்று சாத்தூரில்  மிக சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் இளைய தோழர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி உரை  நிகழ்த்த தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார் .மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய் படு பொருள் மீது சிறப்பான விவாதம் நடைபெற்றது . கடந்த மே மாதம் நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்திற்க்கு பின் இது வரை அக் கூட்டம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை என்பதை நமது மாநில சங்கத்தின் மூலமாக மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் ,மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கூடிய லோக்கல் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்த கோரியும் இது விசயமாக கார்போரேட் அலுவலக் உத்தரவை மதியாத மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து   ஒரு பெரும் திரள் முறையீடு போராட்டத்தை மாவட்ட சங்கம் டிசம்பர் மாதம் நடத்தும் .அதற்கான முறையான கடிதம் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கப்படும் . பிரச்சனைகள் பால் ஒரு அலட்சிய போக்கை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்வதை மாவட்ட சங்கம் அனுமதிக்காது .மாவட்ட மாநாடு நன்கொடையை பொறுத்தவரை விருதுநகர் கிளைகள் இதுவரை 33,000/- ரூபாயும் , ராஜபாளையம் கிளை 21,000 ரூபாயும் ,ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை ரூபாய் 20,000/,  அருப்புகோட்டை கிளை ரூபாய் 24,000 மும் வழங்கியுள்ளன .சிவகாசி கிளைகள் இதுவரை 60,000/- வசூல் செய்து உள்ளன .அனைத்து  கிளைகளும் விரைந்து இலக்கை முடிக்க செயற்குழுவில் ஒப்புதல் கொடுத்துள்ளது மிகவும் வரவேற்கதக்க நிகழ்வாகும் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளுக்கு உரிய வழிகாட்டுதல் இச் செயற்குழுவில் எடுக்கப்பட்டது .கடலூர் வெள்ள நிவாரண நிதியை அனைத்து கிளைகளும்  வழங்கி விட்டன .செயற்குழுவின் இறுதி நிகழ்ச்சியாக மூத்த தோழர் கருப்பசாமி ,CTM அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது .தோழரின் அலுவலக பணி  மற்றும் அவரது சங்க பற்று அனைவராலும்  பாராட்ட பட்டது . செப்டம்பர் 2 அகில இந்திய வேலை நிறுத்தம் உட்பட அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று முத்திரை பதித்தவர் தோழர் கருப்பசாமி .அன்னார்க்கு மாவட்ட சங்கம் உரிய முறையில் கௌரவித்தது. தோழர் கருப்பசாமி அவர்கள் அற்புதமாக ஏற்புரை நிகழ்த்தினார் . தோழர் கலையரசன் நன்றியுரை  நிகழ்த்த கூட்டம் இனிதே நிறைவு பெற்றது . 
                         விருதுநகர் கிளை சங்கம் நிதியளிப்பு 
 ராஜபாளையம் கிளையின் முதல் தவணை ரூபாய் 21,000/-



11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...