Thursday, December 20, 2018

BSNLEU புதிய நிர்வாகிகள்

நடந்து முடிந்த அகில இந்திய மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

புதிய நிர்வாகக்குழுவிற்கு விருதுநகர் மாவட்ட BSNLEU’வின் வாழ்த்துகள்.

Thursday, December 13, 2018

Tuesday, December 11, 2018

ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த ஊழியர்களுக்கு அக்டோபர்  மற்றும் நவம்பர் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி இன்று மாவட்டத்தில் அனைத்து  கிளைகளிலும் கருப்பு துணியால் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
Image may contain: 2 people, people standing, tree and outdoor
Image may contain: 4 people, people smiling, people standing, tree and outdoor
Image may contain: 3 people, people standing
Image may contain: 1 person, standing
Image may contain: 3 people, including Chellappa Chandrasekar, people standing and outdoor
Image may contain: 4 people, including Chellappa Chandrasekar, people standing
Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: 2 people, people standing and outdoor

Tuesday, December 4, 2018

பேச்சுவார்த்தையின் சாராம்சங்கள்

03/12/2018 அன்று நடந்த நமது இலாக்கா அமைச்சருடன் 
அனைத்து சங்க கூட்டமைப்பு பேச்சுவார்த்தை முடிவுகள்.
நமது கோரிக்கைகளில் கீழ்க்கண்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
4G அலைக்கற்றை ஒதுக்கீடு
----------------------------------------------
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு
சம்பந்தமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் விரைவில் பெறப்படும்.
இதற்கான பணியை செய்து முடிக்க
DOTயின் மூத்த அதிகாரி ஒருவர்
சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
ய்வூதிய மாற்றம்
-------------------------------
ஓய்வூதிய மாற்றம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
ஊதியமாற்றத்திற்கும் ஓய்வூதிய மாற்றத்திற்கும்
இனி யாதொரு சம்பந்தமில்லை.
ஓய்வூதியமாற்றம் ஊதியமாற்றத்தோடு இணைக்கப்படாது.
ஓய்வூதியப்பங்களிப்பு
-------------------------------------
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில்
ஓய்வூதியப்பங்களிப்பு என்ற மத்திய அரசு உத்திரவு
BSNLலிலும் இனி அமுல்படுத்தப்படும்.
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
--------------------------------------------------------
கூடுதல் ஓய்வூதியப்பங்களிப்பு
-----------------------------------
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு
மார்ச் 2019 முதல் கூடுதலாக
3 சத ஓய்வூதியப்பங்களிப்பு செய்யப்படும்.
நாளடைவில் மீதமுள்ள 4 சத பங்களிப்பும் வழங்கப்படும்.
புதிய சம்பள விகிதங்களுக்கு ஒப்புதல்..
---------------------------------------------------------------
BSNL பரிந்துரைத்துள்ள புதிய சம்பள விகிதங்களுக்கு ‘
உரிய ஒப்புதல் வழங்கிட நடவடிக்கை எடுத்திட.
DOT அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார்.
3வது ஊதிய மாற்றம்
---------------------------------
BSNL ஊழியர்களின் முக்கியக் கோரிக்கையான
3வது ஊதிய மாற்றம் அமுல்படுத்துவது பற்றி
BSNL மற்றும் DOT இடையே ஒருமித்த கருத்து
உருவாவதற்கு கூடுதல்
கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே ஊதியமாற்றத்தில்
நல்லதொரு முடிவினை எட்டிட…
BSNL மற்றும் DOTக்கு
கூடுதல் அவகாசம் வழங்க வேண்டிய
அவசியம் இருப்பதால்
டிசம்பர் 10 அன்று நடத்தவிருந்த
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்தை
மறு அறிவிப்பு வரும்வரை ஒத்தி வைத்திட
அனைத்து சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
தோழர்களே…
நாடு முழுவதும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு
காலவரையரையற்ற வேலைநிறுத்தத்திற்கு
முழுமுனைப்புடன் ஊழியர்களையும் அதிகாரிகளையும் தயார்படுத்தியது.
மிகச் சில தோழர்களும்
மிகச்சிறிய அமைப்புகளும் மட்டுமே…
போராட்டத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
மிகப்பெரும்பகுதி தோழர்கள் போராட்ட உணர்வோடு
களம் காண கடமை உணர்வோடு காத்திருந்தனர்.
உரிமை உணர்வு மிக்க தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்….
அனைத்துக் கருத்து வேற்றுமைகளையும் மறந்து….
ஒன்றுபட்ட அமைப்பாக இன்றுவரை திகழ்ந்து…
இன்றைய சூழலைக் கணக்கில் கொண்டு….
போராட்டம் இல்லாமலேயே…
ஊதியமாற்றம் இல்லாமல் ஓய்வூதிய மாற்றம்
என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தி…
அலைக்கற்றை ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவந்து..
இழுத்தடிக்கப்பட்ட
ஓய்வூதியப்பங்களிப்பை முறைப்படுத்தி..
நேரடி ஊழியர்களுக்கு
ஓய்வூதியப்பங்களிப்பைக் கூடுதலாக்கி…
மிகப்பெரும் சாதனைகளை…
கத்தியின்றி இரத்தமின்றி…
போராட்ட அறைகூவல் மூலமே சாதித்த…
நமது தலைவர்களுக்கும்
AUAB கூட்டமைப்புக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்….
இனி… ஊதியமாற்றம் என்ற
நமது ஒற்றைக்கோரிக்கை மட்டுமே
நம் முன்னே எதிர்நிற்கின்றது…
அதையும் நாம் வென்றாக வேண்டும்

உரிமைகள் மறுக்கப்படுமாயின்…
போராட்டம் என்ற போர்வாள்…
உயிர்த்தெழும்… உயர்ந்தெழும்….
இதுவே நமது பாரம்பரியம்.

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...