Sunday, July 31, 2016

முதல் மாவட்ட செயற்குழு

இன்று( 31/07/2016)விருதுநகர் BSNLEU சங்கத்தின் முதல் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது அருப்புக்கோட்டை கிளை செயலர் தோழர் A .கண்ணன் அவர்கள்  தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரை நிகழ்த்த அனைவரும் 1 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் .பின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மேல் விவாதம் நடைபெற்றது .கீழ் கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டன .
1.செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை விளக்கி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழியர்களை சந்திப்பது .அந்த அடிப்படையில் 19/08/2016 அன்று காலை 10 மணிக்கு ராஜபாளையம் ,அன்று 11.30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ,20/08/2016 அன்று காலை 10 மணிக்கு சிவகாசி ,அன்று காலை 1130 மணிக்கு சாத்தூர் 22/08/2016 அன்று காலை 10 மணிக்கு அருப்புக்கோட்டை 1200 மணிக்கு விருதுநகரில் நுழைவாயில் கூட்டங்களாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது .
2.தோழியர் பகவதி அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவை 31/08/2016 அன்று ஒரு விரிவடைந்த செயற்குழுவாக நடத்துவது என்றும் அதை போராட்ட விளக்க கூட்டமாக மாவட்டம் தழுவிய அளவில் நடத்துவது .
3.அகில இந்திய மாநாட்டு நிதி வசூல் இயக்கத்தை வரும் 01/08/2016 முதல் 20/08/2016 வரை நடத்துவது என்றும் வரும் 31/08/2016 க்குள் .நிதி  திரட்டும் இயக்கத்தை முடித்துவிடவேண்டும்.
Quota :-
1,விருதுநகர் ---------------------------60,000
2.ஸ்ரீவில்லிபுத்தூர் -------------------20,000
3.ராஜபாளையம் ----------------------10,000
4.அருப்புக்கோட்டை ----------------20,000
5.சாத்தூர் ----------------------------------10,000 
4.லோக்கல்  கவுன்சில் உறுப்பினர்களாக தோழர்கள் .S ரவீந்திரன்,Office Superintendent A.சமுத்திரக்கனி ,TT A.கண்ணன் ,JE,A.S.அஸ்ரப்தீன் ,JE,M.முத்துசாமி,JE,N.ராதாகிருஷ்ணன் ,TT ,M.S.இளமாறன்,Office associate ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் .
5.ஒர்க் கமிட்டிக்கு தோழர்கள் R.ஜெயக்குமார் ,JE,U.B.உதயகுமார் , Office Superintendent,கலையரசன் ,TT ஆகியோரும் ,welfare கமிட்டிக்கு தோழர் C .சந்திரசேகரன் அவர்களும்  தேர்ந்து எடுக்கப்பட்டனர் . 
6.FORUM சார்பாக நடைபெற உள்ள ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி ஆகியவற்றை சிறப்பாக செய்வதிற்கு அனைத்து கிளைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
7. வரும் 8,9 தேதிகளில் நடைபெற உள்ள மேளாவில் நமது தோழர்கள் பெரும் எடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது .
8.மாவட்ட சங்க வைப்பு நிதியில் எந்த காரணம் கொண்டும் வர இருக்கும் காலங்களில் பணம் செலவு செய்ய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
9.மாவட்ட உதவி செயலர்கள் மற்றும் மாவட்ட பொருளாளருக்கு வேலை பகிர்வு அடிப்படையில் கீழ் கண்ட கிளைகளில் நடைபெறும் பொதுக்குழு கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது .
1.தங்கதுரை -ராஜை ,திருவில்லிபுத்தூர் ,சிவகாசி 
2.ஜெயக்குமார் -விருதை ,அருப்புக்கோட்டை ,சாத்தூர் 
3.வெங்கடப்பன் -விருதை ,சிவகாசி ,சாத்தூர் 
4.அஸ்ரப் தீன் -அருப்புக்கோட்டை ,சாத்தூர் ,ஸ்ரீவில்லிபுத்தூர் 
5.சந்திரசேகரன் -அருப்புக்கோட்டை,விருதுநகர் ,ராஜை 

Saturday, July 30, 2016

நிகழ்வுகள்

செப்டம்பர் 2 அனைத்திந்திய வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு நிதி திரட்டுவது விஷயமாக 27/07/2016 அன்று சாத்தூரில் ,29/07/2016 அன்று அருப்புக்கோட்டையில் கிளை பொது குழு கூட்டங்கள் நடைபெற்றன .சாத்தூரில் கிளை தலைவர் வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளை செயலர் தோழர் கலையரசன் விவாத பொருளை விளக்கி கூறினார் .கிளையின் அத்துணை உறுப்பினர்களும்  உற்சாகமாக நன்கொடை தொகையை கூறி , வரும் வேலை நிறுத்ததையும் வெற்றிகரமாக்க உறுதி பூண்டனர் .இக் கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் காதர் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி ஜெயச்சந்திரன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர் .தோழர் ஷண்முகவேலு தனது பங்களிப்பாக ரூபாய் 5000/- தருவதாகவும் தோழியர் தனலட்சுமி அவர்கள் ரூபாய் 2000/- தருவதாக கூறியது நமது இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் .
 
29/07/2016 அன்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் , அஷ்ரப் தீன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி , TNTCWU சங்க மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி , கிளை செயலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்  கிளை தலைவர் தோழர் உதயகுமார் தலைமை வகிக்க ,கிளை செயலர் தோழர் A .கண்ணன் ஆய்படு பொருளை சமர்ப்பித்து பேசினார் .ஸ்தல மட்ட பிரச்சனைகள் ,செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. தோழர் சோலை நன்றியுரை கூறி  கூட்டத்தை நிறைவு செய்தார் .
 
28/07/2016 அன்று TNTCWU சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர்  இளமாறன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் சமர்ப்பித்த ஆய்படுபொருள் மீது விவாதம் நடைபெற்றது .சமபள பட்டுவாடா ,போனஸ் ,சம்பள நிலுவை ,EPF ,ESI ஆகிய பிரச்சனைகள் மீது ஒரு நல்ல விவாதம் நடைபெற்றது .மாநில செயலர் தோழர் வினோத்குமார்  , அனைத்திந்திய சங்க நிர்வாகி தோழர் பழனிச்சாமி மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் விரிவாக ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றி பேசினர் .

Tuesday, July 26, 2016

நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சிவகாசி தோழர் கருப்பையா ,TT

 நமது CHQ பாராட்டு 
BSNLEU has received an appeal to contribute 1,000 Euros (around Rs.75,000/-) as donation to the World Federation of Trade Unions. This was mentioned by com. P. Abhimanyu, General Secretary, in his speech made to the Extended Circle Executive committee meeting of BSNLEU, Tamil Nadu circle, held on 10.06.2016, at Tuticorin. On hearing the General Secretary’s speech, com. M. Karuppaiah, Telecom Mechanic, Sivakasi of Virudunagar SSA, announced that he would contribute Rs.3,000/- towards donation to WFTU. This amount of Rs.3,000/- has now been received by the CHQ. It is important to mentioned that com. M. Karuppaiah, TM, has donated this Rs.3,000/-, out of his GPF advance of Rs.7,000/-. Com. M. Karuppaiah, TM, is an example for trade union loyalty and for working class consciousness. CHQ heartily thanks the comrade.

Monday, July 25, 2016

மேளா

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 22,23 தேதிகளில் நடத்தப்பட்ட மேளாவில் நமது BSNLEU சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், நமது உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். நமது மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஏழாயிரம்பண்ணை மற்றும் நென்மேனி பகுதியில் பங்கேற்றார். GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன், மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  பாலவநத்தம் பகுதியில் பங்கேற்றனர்.   பாலவநத்தம் பகுதியில் வசிக்கும் நமது பணி ஒய்வு பெற்ற  தோழர் V சுப்ரமணியன் அவர்களும் மேளாவில் பங்கேற்றதுடன் நமது ஊழியர்களுக்கு உணவு அளித்து விருந்தோம்பல் செய்தது சிறப்புமிக்கதுRR நகரில் தனி ஒருவனாக 100 சிம்களை நமது BSNLEU தோழர் ராஜேந்திரன் விற்பனை செய்துள்ளார். அவருக்கு நமது சிறப்பு பாராட்டுக்கள். அதே போல் சிவகாசியில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேளாவில் தோழர்கள் ராஜமாணிக்கம்,அழகுராஜா,ராஜு, தர்மராஜ, வைரவசாமி, மகாலிங்கம், சுப்ரமணியன், முருகன், M.கருப்பசாமி, முனியாண்டி, காரிசேரி கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர். குரூப்ஸ் பகுதியில் முத்துசாமி, ராஜாராம் மனோகரன்,தங்கமாரி ,ராஜய்யா ஆகியோர்  பங்கேற்றனர் .சிவகாசி பகுதியில் 831 சிம்களை விற்று சாதனை புரிந்த தோழர்களுக்கு நமது சிறப்பு பாராட்டுக்கள் .ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நமது தோழர்கள் சமுத்திரம் ,சுந்தரமஹாலிங்கம் ,தங்கதுரை ,வெங்கடசாமி ஆகியோர் பங்கேற்றனர் .ராஜபாளையம் பகுதியில் நமது கிளை செயலர் முத்துராமலிங்கம் மம்சாபுரம் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் பங்கேற்றார். ராஜை பகுதியில் நமது தோழர்கள் ராதாகிருஷ்ணன், I.முருகன், பொன்னுச்சாமி, தியாகராஜன், ராமசந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மற்றும் நமது தோழர்கள் சாத்தூர் கிளை செயலர் கலையரசன் N.சுப்பையாபுரத்திலும் ,அண்ணாசாமி நென்மேனியிலும்,SNATTA தோழர் சரவணகுமார் ,TTA சாத்தூரிலும்    நமது சேல்ஸ் டீம் பகுதி ஊழியர்கள் தங்கராஜ் ஏழாயிரம்பண்ணை மற்றும் நென்மேனியிலும்  நாகேந்திரன் சிவகாசியிலும்  பங்கேற்றனர். அருப்புக்கோட்டை பகுதியில் தோழர் மதிக்கண்ணன், அஷ்ரஃப்தீன், கணேசன், சோலை, தினகரன், உதயகுமார், கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.  ஒட்டு மொத்தமாக இரண்டு நாட்களும் மொத்தம் 2545 சிம்கள் விற்கப்பட்டு உள்ளது. 01-07-2016 முதல் 18-07-2016 வரை நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சிம்களின் எண்ணிக்கை 2076 மட்டுமே ,ஆனால் நமது சங்க உறுப்பினர்கள் பங்கேற்பில் 2 நாட்களில் 18 நாட்கள் விற்பனையை முறியடித்தது மிகப்  பெரிய சாதனை .மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.  

ஓய்வூதியருக்கு 78.2% IDA இணைப்பு!!! ஓய்வூதியம் வழங்க 60% உச்ச வரம்பு நீக்கம்!!! வெற்றி விழா- 27.07.2016

மாநில சங்க சுற்றறிக்கை எண்:121:-Click Here

மத்திய செயற்குழு முடிவுகள் மற்றும் நிர்வாகத்துடன் சந்திப்பு

மாநில சங்க சுற்றறிக்கை எண்:120 படிக்க :-Click Here

Wednesday, July 20, 2016

Niti Aayog may consider strategic sale in BSNL, MTNL

Niti Aayog, strategic disinvestment, central public sector enterprises, BSNL, MTNL, strategic sale, PSU, public sector undertaking, public sector companies, indian express, business news
Government’s think-tank Niti Aayog may consider state-owned Bharat Sanchar Nigam Ltd (BSNL) and Mahanagar Telephone Nigam Ltd (MTNL) for strategic disinvestment, a senior government official said. The incumbent government, has on several occasions, blamed the previous regime for the financial decline of the two telecom service providers. Former telecom minister Ravi Shankar Prasad had said on prior occasions that in 2004, BSNL was incurring profits of around Rs 10,000 crore and MTNL Rs 900 crore. However, when the NDA government took charge in 2014, the BSNL was suffering a loss of Rs 8,000 crore and MTNL Rs 2,000 crore. The Niti Aayog has submitted a list of 74 sick and loss making public sector undertakings (PSUs) to the government for the purpose of shutting down and restructuring, the official said, adding that discussions were now happening between ministries on finalising the details. The official said that while Air India was a part of the list submitted to the Centre, Niti Aayog has recommended that its restructuring exercise be continued.
In case of BSNL and MTNL, the official said, the companies were not present in the first list of 74 PSUs, despite being loss making, and could be considered by the Aayog for strategic disinvestment. If a strategic divestment of the two telecom companies is made, government would lose majority shareholding in these firms. Niti Aayog has been given the responsibility to identify Central Public Sector Enterprises (CPSEs) where government should exit from management control, to extent they should exit and what should be the mode of divestment.The Niti Aayog will make recommendations on strategic sales to a core group of secretaries, headed by the cabinet secretary. The group of secretaries will make final suggestions to the Cabinet Committee on Economic Affairs on the mode and quantum of strategic disinvestment.Minister of State for Heavy Industries and Public Enterprises Babul Supriyo on Tuesday said in a written reply to the Lok Sabha that an analysis of all the sick and loss making central public sector enterprises (CPSEs) was underway at Niti Aayog in consultation with the ministries and the departments concerned.“78, 70 and 77 CPSEs incurred losses during 2012-13, 2013-14 and 2014-15, respectively,” Supriyo said.Supriyo said the department of PSUs has issued guidelines for streamlining the mechanism for revival ஸ் restructuring of sick/incipient and weak CPSEs. Under these guidelines, the administrative ministries and departments are expected to take measures for revival of loss making CPSEs on a case-to-case basis. 
                                நன்றி :- இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, July 15, 2016

IDA உயர்வு- BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவு வெளியிட்டது

விலை வாசி புள்ளிகள் உயர்ந்துள்ளதை ஒட்டி, BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் IDA, 01.07.2016 முதல் 114.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதற்கான உத்தரவினை கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ளது. BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவு எண்:-14-1/2012-PAT(BSNL) Dated 13.07.2016.

மாநில சங்க சுற்றறிக்கை

மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் CMD BSNL உடன் FORUM தலைவர்கள் சந்திப்பு மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திப்பு

FORUM தலைவர்கள் மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சருடன் சந்திக்கும் புகைப்படங்கள் பார்க்க :-Click Here

மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய சிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா

8 வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய சிவகாசி கிளைகளுக்கு  பாராட்டு விழா கூட்டம் சிவகாசியில் 13/07/2016 அன்று தோழர்கள் ராஜாராம் மனோகரன் ,ராஜையா .செல்லம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி அவர்கள் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரையாற்றினர். மாநாட்டு பணியில்  சிறப்பாக பணியாற்றிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் .மாநாட்டை நடத்திய செலவு மட்டும் அல்லாது அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 90,000 வழங்கிய அற்புதமான சிவகாசி கிளைகளின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது .மாவட்டத்தின் அனைத்து இயக்கங்கள் ,நன்கொடைகள் ,மார்க்கெட்டிங் பணிகள் அனைத்திலும் நம்பர் 1 கிளைகளாக திகழும் சிவகாசி கிளையை பாராட்டி மாவட்ட செயலர் பேசினார் .வர உள்ள செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திலும் சிவகாசி கிளை முத்திரை பதிக்கும் என கூறினார் .அகில இந்திய மாநாட்டுக்கு  நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60% கொடுத்த  முதல் மாவட்டம் நமது மாவட்டம் என்பதில் பெருமை கொள்ள செய்வதில் சிவகாசி கிளைகளின் பங்கு பாராட்ட தக்கது என பாராட்டினார் . மாநாட்டு வரவேற்பு குழுவின் செயல்பாட்டை பாராட்டி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜு ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர் .தோழர் கணேசன் நன்றியுரை கூறி கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார் .மாவட்ட சங்கத்திற்கு இரு கிளைகளும் தங்கள் பங்களிப்பாக தலா 5000/வீதம் ரூபாய் 10,000/- வழங்கினர் .மாவட்ட சங்கம் தன்  நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .மாநாட்டு பணிகளில் தனது முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு நமது சிறப்பு பாராட்டுக்கள் .

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...