Tuesday, February 16, 2016

மக்களின் பிஎஸ்என்எல் எப்படி வீழ்த்தப்படுகிறது? - டி.கே.ராஜலக்ஷ்மி

ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடு வெறுமனே லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. மக்கள் சேவையே பிரதானம். இன்றைக்கும் 98% கிராமங்களில் பிஎஸ்என்எல் நிறுவனமே சேவை அளித்துவருகிறது.
சென்னைப் பெருமழை வெள்ளத்தில் பிஎஸ்என்எல் மட்டுமே தொடர்ந்து சேவையை வழங்கியது. இதற்காக டீசல் ஜெனரேட்டர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கப்பட்டன. தலைமைப் பொது மேலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை இரவு பகலாக வீட்டை மறந்து வேலை பார்த்து தகவல் தொடர்பு அறுந்துபோகாமல் பார்த்துக்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் நீரில் மூழ்கிய கருவிகளைச் சீரமைத்து தொடர்பை மீண்டும் ஏற்படுத்த அதன் ஊழியர்கள் நீந்திச் சென்று சேவையாற்றினர்.
மழை, வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்குத் தகவல் சொல்ல ஒரு வாரத்துக்குக் கட்டணமில்லா சேவை அளிக்கப்பட்டது. தொலைபேசிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு 2 வாரம் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், தனியார் நிறுவனங்கள் சேவையை நிறுத்திவிட்டன.
அரசு நிர்வாகிகளின் உள்நோக்கம் எப்படி இருந்தாலும் துறையின் 2.5 லட்சம் ஊழியர்கள் தங்களுடைய கடமையை நிறைவாகவே செய்கின்றனர். 2006 வரையில் பிஎஸ்என்எல். ஆண்டுதோறும் ரூ.40,000 கோடி வருவாய் ஈட்டியது. ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை லாபம் கிடைத்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக வருவாய் தொடர்ந்து சரிகிறது. இதற்கான காரணம் உரிய காலத்தில் கருவிகளை வாங்க முடியாதது. அரசு முடிவுகளைத் தாமதமாக எடுப்பது. கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிலவழித் தொலைபேசி மற்றும் செல்பேசி வாடிக்கையாளர்களை இதனாலேயே பிஎஸ்என்எல் இழந்தது.
2007-ல் 450 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை ஐமுகூ அரசு ரத்துசெய்தது. 2010-ல் 930 லட்சம் இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரும் ரத்துசெய்யப்பட்டது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சரிவு அப்போதுதான் தொடங்கியது. 2007 தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய கருவிகளை வாங்க முடியாமல் தடுக்கப்பட்டது. 2008-09 வரையில் அந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதன் பிறகுதான் இந்த இழப்பு ஏற்பட்டது. அடுத்து நஷ்டத்தில் சிக்கியபோது, கேபிள்கள், கருவிகள், வயர்கள், பிராட்பேண்ட் மோடம்கள் வாங்க முடியாமல் பிஎஸ்என்எல் பாதிப்புக்கு உள்ளானது.
இது மட்டும் அல்ல, இப்படி நிறைய. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அது ஒப்படைத்த அலைக்கற்றை வரிசைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. அதற்கு அளித்து வந்த மானியங்களும் நிறுத்தப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளில் 1.5 லட்சம் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். இதே காலத்தில் வெறும் 30,000 பேர் மட்டுமே புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டனர்.
திட்டமிட்டே ஆள் பற்றாக்குறை ஏற்படுத்தப்பட்டது. மற்ற தனியார் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை உயர்த்தியபோதும் பிஎஸ்என்எல் உயர்த்த அனுமதிக்கப்படவில்லை. செல்பேசி சேவையில் பிற நிறுவனங்களுக்கு 1995 முதலே செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்பட்டாலும் பிஎஸ்என்எல் 2 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த உரிமத்தைப் பெற முடிந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் அடுத்த அடி கொடுக்க அரசு தயாராகியிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 75,000 செல்பேசிக் கோபுரங்களில் 61,000-த்தைத் தனியாகப் பிரித்து, சார்புக் கோபுர நிறுவனத்தை அமைக்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இத்துறையின் தொழிற்சங்க அமைப்புகளுக்கே இந்தச் செய்தி ஊடகங்கள் வாயிலாகத்தான் தெரிந்தது. இதற்கு அரசு சொன்ன காரணம் என்ன தெரியுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துகளைச் சிறப்பாகப் பராமரிப்பதற்காக இந்த முடிவை எடுக்கிறார்களாம்.
உண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது செல்பேசிக் கோபுரங்களைத் தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்துகொண்டு அதற்கு வாடகை பெறுகிறது. ஆக, அரசின் புதிய முடிவு அவற்றைத் தனியார் கையில் ஒப்படைக்கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பலவீனப்படுத்தவுமே உதவும். மேலும், படிப்படியாக இந்நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கவும் வழிவகுக்கும்.
பிஎஸ்என்எல் மக்களுக்கான நிறுவனம். மக்களுடைய நிறுவனம். இதை மக்கள் உணர வேண்டும்!
© ஃபிரண்ட்லைன்

நன்றி : தமிழ் இந்து

Sunday, February 14, 2016

விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம்

 விரிவடைந்த மத்திய செயற்குழு கூட்டம் வரும் 19-02-106 முதல் 21-02-2016 வரை  மகாராஷ்டிர மாநிலம் அஹ்மத் நகரில் நடைபெற உள்ளது .

அடுத்த அனைத்திந்திய மாநாடு

chennaiஅடுத்த அனைத்திந்திய மாநாடு சென்னையில் நடைபெறுவதற்கு  நமது தமிழ் மாநில செயற்குழு ஒப்புதல் கொடுத்துவிட்டது . 12-02-16 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவில் மாநில மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைத்திந்திய மகாநாட்டுக்கு தங்கள் பங்களிப்பை உடனடியாக செலுத்தினர் . அங்கேயே ரூபாய் 1 லட்சம் வசூலாகியது . நமது மாவட்ட சங்கத்திற்கு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . 

விரிவடைந்த மாநில செயற்குழு ----வேலூர்

12-02-2016 அன்று மாநில  செயற்குழுவும் , 13-02-106 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும்  வேலூர் மாநகரத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இரண்டு நிகழ்சிகளும் மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி  ஊட்டக்கூடியதாக அமைந்தது .முதல் நாள் நிகழ்ச்சியில் நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்கள் தனது நீண்ட உரையில் நரேந்தர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகள் BSNL நிறுவன புத்தாக்கத்திற்கு நமது BSNLEU சங்கம் செலுத்திய பங்களிப்பையும் , Non executive ஊழியர்களுக்கு நாம் செய்துள்ள பணிகளையும் விரிவாக பேசினார் . நமது மாநில செயலர்  சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து  மாவட்ட செயலர்களும் ,மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் . 2 ஆம் நாள் நடைபெற நிகழ்ச்சியில் 30-04-2016 அன்று பணி ஓய்வு பெற உள்ள மதுரை மாவட்ட செயலர் தோழர் சூரியன் தேசிய கொடியை ஏற்றி வைக்க நமது சங்க கொடியை மாநில  சங்க நிர்வாகி தோழர்  வெங்கட்ராமன் ஏற்றி வைக்க ,தோழர் சுப்ரமணியனின் அஞ்சலி உரையுடன், மாநில செயலரின் வரவேற்பு உரையுடன்  விரிவடைந்த மாநில செயற்குழு தொடங்கியது .தொடக்க உரை  நிகழ்த்திய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் வர   உள்ள 7 வது சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU  சங்கம் மிக பெரிய வெற்றியை பெறும்  என  அறிவித்த போது  கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது . 6 வது சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் , மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் LTC   ஆகியன நிறுத்தப்பட்ட விசயங்களை நமக்கு எதிரான பிரச்சாரங்களாக  மாற்றிய NFTE  சங்கம் 4 % மேற்பட்ட வாக்குகளை இழந்தது . ஆனால்  நமது BSNL ஊழியர் சங்கம் 2.8% வாக்குகளை அதிகரித்து சாதனை வெற்றி பெற்றது . தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் கையாண்டு தீர்வு செய்துள்ள பல்வேறு  பிரச்சனைகள்   மற்றும் நமது நிறுவன புத்தாக்கத்திற்கு செய்துள்ள  நிகழ்வுகள் நம்மை மிக பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என அறுதியிட்டு கூறினார் .மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாக கிளை செயலர்கள் பேசினர் .நமது  மாவட்ட சங்கம் சார்பாக ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் ,TTA  அவர்கள் பேசினார் .அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த வேலூர் தோழர்களுக்கு நன்றி உரித்தாக்குகிறோம்


Thursday, February 11, 2016

விரிவடைந்த மாநில செயற்குழு

மாநில சங்க நோட்டீஸ் படிக்க :-Click Here

ரோடு ஷோ

நமது மாவட்ட சங்கம் சார்பாக தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் ரோடு ஷோகள் நடடிபெற்று வருகின்றன .6 ஆம் தேதி திருச்சுழியில் 345 சிம்கள் விற்கப்பட்டன . 9 ஆம் தேதி  மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 200 சிம்கள் விற்பனை செய்யப்பட்டன .3 MNP பெறப்பட்டது . 10 ஆம் தேதி சிவகாசி அருகில் சித்துராஜபுரம் புகுதியில் 151 சிம்கள் வழங்கப்பட்டன .சென்ற ஜனவரி மாதம் 28, 29 தேதிகளில் காரியாபட்டியில் 675 சிம்கள் விற்கப்பட்டன . இது தவிர கல்லூரிகளில் மார்க்கெட்டிங் விங் சார்பாக நடைபெறும் விநாடி வினா போட்டிகளில் நமது சங்கம் முழுமையாக கலந்து கொண்டு வருகிறது .

Tuesday, February 2, 2016

கெயில் தீர்ப்பும் வந்தே மாதரமும்!


விகடன் செய்திகள் படிக்க :-Click Here

விரிவடைந்த மாவட்ட செயற்குழு

விரிவடைந்த மாவட்ட செயற்குழு  மற்றும் தோழர்கள் T.ராதாகிருஷ்ணன் ,சீனியர் AO  மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம்  அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா  மற்றும் சேவை கருத்தரங்கம் வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி ராஜபாளையம் நகரில் நடைபெற உள்ளது .நமது தமிழ் மாநில செயலர் தோழர் A .பாபு ராதாகிருஷ்ணன் , நமது மாநில உதவி செயலர் தோழர் .M .முருகையா , விருதுநகர் பொது மேலாளர் திருமதி .S .E .ராஜம் ,மற்றும் துணை பொது மேலாளர் திரு .ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் .

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்

7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் அறிவிப்பை BSNL நிர்வாகம் 01/02/2016 அன்று வெளியிட்டுள்ளது. 

தேர்தல் நாள் : 10/05/2016
முடிவு அறிவிக்கும் நாள் : 12/05/2016
சங்கங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01/03/2016.
வாக்காளர் பட்டியல் 01/03/2016க்குள் இறுதி செய்யப்பட வேண்டும்.
30/04/2016 வரை பணி ஓய்வு பெறுவோர்  வாக்காளர் பட்டியலில்இடம்  பெற மாட்டார்கள் .
தேர்தல் அறிவிப்பு செய்துள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை Group C & D ஊழியர்களுக்கு ஊர் விட்டு ஊர் மாற்றல் தடை செய்யப்பட்டு உள்ளது 

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...