Friday, October 31, 2014

சர்தார் படேல் இஸ்லாமியருக்கு எதிரியா?


1949-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்தார் படேல் தெளிவாகச் சொன்னார்: “இந்து நாடு என்பது ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை. இந்தியர்கள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அந்த எண்ணமே இந்தியாவின் ஆன்மாவை அழித்துவிடும்.
தி ஹிந்து செய்தி படிக்க :-Click Here

ஆர்ப்பாட்டம்

     கேபிள் பகுதியில் டெண்டர் எடுத்துள்ள INNOVATIVE  நிறுவனம் கடந்த 4 மாதங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு 20 தேதிக்கு மேல் சம்பளம் போடுவதையும் , EPF மற்றும் ESI சலுகைகளை வழங்காமலும் மற்றும் போனஸ் வழங்க மறுப்பதையும்  எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கடிதம் கொடுத்தும் , மாநில தலைமை   பொது மேலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் ஒரு முன்னேற்றமும் இல்லாததால்  INNOVATIVE நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்ய வலியுறுத்தி இன்று மாவட்டம் முழுவதும் கவனயிருப்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநில சங்கத்திடம் ஆலோசனை செய்து அடுத்த கட்ட போராட்டம் நவம்பர் மாதம் 17 தேதி  நடைபெறும் .விருதுநகரில் இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தை தோழர் சந்திரசேகரன் தலைமை தாங்கி நடத்தினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் போராட்டத்திற்கான அவசியத்தை விளக்கி பேசினார் .தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட பொருளர் மாரிமுத்து நன்றி நவின்றார் .
             அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கிருஷ்ணசாமி மற்றும் தோழர் பெத்தணன் இருவரும் கூட்டுத் தலைமையேற்றனர். போராட்டத்தின் நோக்கங்களை வலியுறுத்தி தோழர் சோலை, தோழர் அஸ்ரப்தீன் ஆகியோர் பேசினர். தோழர் ஜெயக்குமார் கோஷங்களை முன்வைத்தார். தோழர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.
            இராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் அனவரதன் தலைமை தாங்கினார். தோழர் முத்துராமலிங்கம் மற்றும் தோழர் வேல்ச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார்கள். தோழர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
          மாவட்டம் முழுவதும் மொத்தம் 72 ஒப்பந்த ஊழியர்களும் 85 BSNLEU உறுப்பினர்களுமாக மொத்தம்157பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 









Wednesday, October 29, 2014

JAC கூட்ட முடிவுகள்

27.11.2014 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்- தமிழக JAC முடிவு படிக்க :-Click Here

BSNL புத்தாக்கத்திற்காக 03.02.2015 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்-FORUMமுடிவு படிக்க :-Click Here

Saturday, October 25, 2014

ஏன் இந்த தனியார் மோகம்?

         நிலக்கரித் துறையில் சமீப காலமாக நிலவிவந்த அசாதாரணச் சூழலில், பல்வேறு விமர்சனங்களுக்கிடையில், மத்திய அரசு துரித நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.நிலக்கரி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக 214 நிலக்கரி உரிமங்களை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிலக்கரித் துறையே ஸ்தம்பித்துப்போயிருந்த நிலையில் மத்திய அரசு சுறுசுறுப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், யாருக்காக இந்தச் சுறுசுறுப்பு என்று பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.ரத்துசெய்யப்பட்ட ஒதுக்கீடுகளெல்லாம் இணையத்தின் மூலம் ஏலம் விடப்படவிருக்கின்றன. ஏலத்துக்குப் பின், பழைய உரிமையாளர்களிட மிருந்து புதிய உரிமையாளர்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்களைக் கைமாற்றிவிடுவதற்கேற்ப அவசரச் சட்டமொன்றும் அமல்படுத்தப் படவிருக்கிறது. நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப் பதற்காகத்தான் எல்லா ஏற்பாடுகளும் என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், “இந்தியாவின் நிலக்கரித்துறையின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்று அருண் ஜேட்லி சொல்லியிருப்பதுதான் இதில் வேடிக்கை. தனியாரின் கைகளில் தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்று நிதியமைச்சர் நம்புகிறார் போலும். எனினும், தேவையானபோது தனது அதிகாரத்தை அரசு பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு அவசரச் சட்டத்தில் இடம் இருப்பது சற்று ஆறுதலான விஷயம்.உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கதிதான் நிலக்கரித் துறைக்கு இன்று ஏற்பட்டிருக்கிறது. இதன் உள்ளார்ந்த நோக்கமே அரசுத் துறையால் எதையும் செய்ய முடியாது, தனியார் துறையே திறம்படச் செயலாற்றும் என்று நம்பவைப்பதுதான். தகவல்தொடர்புத் துறையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். உலகத்திலேயே இல்லாத வகையில் பிரம்மாண்டமான தகவல்தொடர்புக் கட்டமைப்பைக் கொண்டது இந்தியா. ஆனால், களத்தில் தனியார் துறைக்கு வழிவிட்டு வேண்டுமென்றே பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது அரசுத் துறை. நிலக்கரித் துறையும் இன்று இந்த இடத்தை நோக்கித் தள்ளப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.ஒருபுறம், அரசுத் துறை சரியாகச் செயல்படவில்லை என்றால், மறுபுறம் தனியார் நிறுவனங்கள் அதீதமாகச் செயல்பட்டு லாப வேட்டையை நிகழ்த்துகின்றன. அதற்கு வழி விடவே அரசுத் துறை நிறுவனங்கள் படிப்படியாகச் செயலிழக்கச் செய்யப்படுகின்றன. அரசு மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும். ஆனால், அரசு மந்தமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியாருடைய ஒரே நோக்கம் லாபம் என்பதால் தனியார்மயமாக்குவதில் முதல் பலி மக்கள் நலன்தான். இந்த உண்மை திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டும் அரசு சளைக்காமல் தனியாரை நோக்கியே நகர்வது எதற்காக?
                                 <நன்றி :- தி ஹிந்து >

முதலாளிகள் நலத் துறை!

          தொழிலாளர் நலச் சட்டங்களை சீர்திருத்த வேண்டும் என்று கருதும் பிரதமர் நரேந்திர மோடி, ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாய உழைப்பே வெல்லும்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார்.ஏனைய அரசியல் கட்சிகள், மத்திய தொழிற்சங்கங்கள் யாரையும் ஆலோசனை கலந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து டிசம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.புதிய நடைமுறையின்படி தொழில் நிறுவனங்களே தங்களுடைய ஆலையில் உள்ள தொழிலாளர்கள் நிலைமை குறித்து, எளிமைப் படுத்தப்பட்ட விண்ணப்பங்களில் தகவல்களை நிரப்பி, தாங்களே ஆய்வுசெய்து அந்த அறிக்கையை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கலாம். அதேசமயம், தொழிற்சாலை ஆய்வாளர்கள் இனி எந்த ஆலைக்கு ஆய்வுக்குச் செல்வதாக இருந்தாலும் அதை எழுத்துபூர்வமாக முன்கூட்டியே தங்கள் அலுவலகங்களில் பதிவுசெய்ய வேண்டும். ஆலையில் ஆய்வுகளை முடித்த பிறகு, ஆய்வறிக்கையை 72 மணி நேரத்துக்குள் கணினியில் பதிவுசெய்துவிட வேண்டும். அதன் பிறகு அதில் மாறுதல்கள் எதையும் செய்ய முடியாது. அந்தப் பதிவை அந்தத் துறையின் அதிகாரிகள், ஆலையின் நிர்வாகம், தொழிலாளர்கள் தரப்பு என்று அனைவரும் பார்க்க முடியும். அரசின் இந்த முடிவைத் தொழில் துறையும் முதலாளிகளும் வரவேற்கின்றனர்; தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்க்கின்றனர்.ஆய்வாளர் பணி என்பதன் இலக்கணம் என்ன? ஒரு அமைப்பில் விதிகளுக்கு உட்பட்டு எல்லோரும் இயங்குகின்றனரா என்று எப்போது வேண்டுமானாலும், பரிசோதித்துப் பார்ப்பதுதானே? இந்திய அமைப்பில் தொழிற்சாலைகள் எந்த அளவுக்கு விதிகளை மதிக்கின்றன; இங்கே ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதையெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முப்பதாண்டுகள் ஆகும் நிலையிலும், போபால் விஷவாயுக் கசிவின் அழிவுகள் இன்னும் மறக்கவிடாமல் துரத்துகிறதே... எல்லா விதிகளையும் வளைக்கும் தொழில் துறையின் பண அரசியல்தானே போபால் அழிவுக்குக் காரணம்? ஏற்கெனவே ஊழல் புற்றாகப் பரவிக் கிடக்கும் அதிகார அமைப்பில், சீர்திருத்தம் என்ற பெயரில் இன்னும் நூறு ஓட்டைகளைப் போட்டால் என்னவாகும்?ஒரு தொழில்சாலையை நடத்த தொழிலதிபர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிலம், மின்சாரம், தண்ணீர், மூலதனக் கடன் என எதையெல்லாம் சலுகையில் பெற முடியுமோ, அதையெல்லாம் சலுகையில் பெறுகின்றனர்; புதிய நிறுவனங்களாக இருந்தால் முதலீட்டு மானியமும் பெறுகின்றனர்; முன்னுரிமை பெற்ற ஏற்றுமதித் துறையாக இருந்தால் ஏற்றுமதி மானியமும் பெறுகின்றனர். நாடு வாரிக் கொடுக்கிறது. ஆனால், தொழில் அதிபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இப்படியெல்லாம் காட்டப்படும் சலுகையிலும், பரிவிலும் நூறில் ஒரு பங்குகூடத் தொழிலாளர்களுக்குக் காட்டப்படுவதில்லை. அவர்கள் வசம் மிச்சசொச்சம் இருக்கும் உரிமைகளையும் பறிக்க அரசே துணை போகும் என்றால், தொழிலாளர் நலத் துறையின் பெயரை முதலாளிகள் நலத் துறை என்று மாற்றிவிட்டு பகிரங்கமாக அதைச் செய்யட்டும்!
                       <நன்றி :- தி ஹிந்து >

CMD மற்றும் DOT செயலருடன் பேட்டி

         24-10-2014 அன்று தோழர் நம்பூதிரி  அவர்கள் நமது நிறுவன CMD மற்றும் DOT செயலர் அவர்களை சந்தித்து BSNL  நிறுவன புத்தாக்கம் பற்றி பேசியுள்ளார்.பேட்டியின் போது கருவிகள்  வாங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் மத்திய  அரசு நமது BSNL நிறுவனத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்  45 மில்லியன் மொபைல் டெண்டரை ரத்து செய்ததால் தான் BSNL வளர்ச்சி குறைந்தற்கு காரணம் என்பதையும் , ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்த கட்டணமான ரூபாய் 6000 கோடியையும் , USO fund ரூபாய் 1250 கோடியையும் அரசாங்கம் BSNL நிறுவனத்திற்கு  தராமல் உள்ளதையும் தோழர் நம்பூதிரி அவர்கள் DOT செயலர் அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் . BSNL புத்தாக்கதிற்கு அரசு தேவையான உதவிகளை   செய்திடும் என  DOT செயலர் பேட்டியின் போது கூறியுள்ளார் .சிறந்த சேவையையும் , நல்ல லாபத்தையும் ஈட்டிய கேரள மாநில BSNL ஊழியர்களை பாராட்டிய DOT செயலர் சேவையில் ஏற்படும் குறைபாடுகளை பற்றிய புகார்களை கூறி சேவையை    மேம்படுத்தவேண்டிய அவசியத்தை தனக்கு டெல்லி மற்றும் UP இல் ஏற்பட்ட அனுபவங்களை கூறினார் .FORUM சார்பாக சேவையை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தோழர் நம்பூதிரி அவர்கள் விரிவாக விளக்கினார் . பென்சனருக்கு 78.2% IDA இணைப்பு வழங்கப்படாமல் காலதாமதம் ஆவதையும் DOT செயலரிடம் தோழர் நம்பூதிரி சுட்டி காட்டி உடனடியாக இப் பிரச்சனையை தீர்க்க கோரினார் .M/s Deloittee Committee பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் சங்கங்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என நமது CMD அவர்களிடம் வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் இது விசயமாக எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்கவும் அவர் கேட்டு கொண்டார் . தொழிலாளர் நல சட்டங்கள்  ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள்  மத்தியில் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் CMD அவர்களிடம் தோழர் நம்பூதிரி அவர்கள்  சுட்டி காட்டினார் . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு தேவையான உதவிகள்  செய்திடவும் அவர் வலியுறுத்தி உள்ளார் .

இந்தியா, சீனா உட்பட 21 நாடுகள் இணைந்து தொடங்கின ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி!

    உலக வங்கியைப் போல ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான வங்கி ஒன்றை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உட்பட 21 நாடுகள் இன்று கையெழுத்திட்டுள்ளன.சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இன்று 21 ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சீனா அதிபர் ஜின்பிங் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார்.இதன் பின்னர் ஆசிய நாடுகளுக்கான உள்கட்டமைப்புக்கான முதலீட்டு வங்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தில் ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.வங்கதேசம், புருனே, கம்போடியா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், குவைத், லாவோஸ், மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கத்தார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திட்டன.போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஆசியாவின் பின்தங்கிய நாடுகளுக்கு இந்த வங்கி வழங்கும். ஆனால் இத்தகைய முயற்சிக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.இதனால் அமெரிக்காவின் நேச சக்திகளான தென்கொரியா மற்றும் ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
                   <நன்றி :- ஒன் இந்தியா >

Friday, October 24, 2014

ERP அமலாக்கம்

ERP அமலாக்கம் குறித்து மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

Saturday, October 18, 2014

Reception Committee meeting of the 7th All India Conference held at Kolkata.


Deloittee குழுவின் பரிந்துரை

      பி எஸ் என் எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் Deloittee குழுவின் பரிந்துரைகளை மகாராஷ்டிர மாநிலத்தில் தன்னிச்சை போக்கில் அமல்படுத்தி உள்ளது . நிர்வாகம் ஊழியர் சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை கலந்து ஆலோசிக்காது Deloittee குழுவின் பரிந்துரைகளை நடைமுறை படுத்துவதை எதிர்த்து மகாராஷ்டிர மாநில அனைத்து சங்கங்களும் வரும் 20-10-2014 அன்று கூடி போராட்ட திட்டம் வகுக்க உள்ளன .

சபாஷ் ! ஆந்திரா மாநில BSNL ஊழியர்கள்

       ஹூத் ஹூத் புயலால் ஆந்திரா மாநில கடற்கரையோர பகுதிகளில் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.இது தொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, என்று கடிந்து கொண்டார்.இதே நேரத்தில் அரசுத்துறை நிறுவனமான BSNL நிறுவனம் தனது 85% நெட்வொர்க் ஐ சரிசெய்து உள்ளதை ஆந்திரா மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு சந்திரபாபு நாயுடு அவர்கள் பாராட்டி நமது ஆந்திரா மாநில தலைமை பொதுமேலாளர் உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களிடம் நமது சேவையை பாராட்டி உள்ளார் .நமது தொலை தொடர்பு சேவை விரைந்து சரி செய்யப்பட்டதால் மாநிலத்தில் நிவாரண பணிகளும் ,புனரமைப்பு பணிகளும் விரைந்து செயல்பட உதவி புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஊடகங்களும் நமது பணியை பாராட்டி உள்ளன.நாமும் பாராட்டுவோம் ஆந்திர மாநில BSNL ஊழியர்களை !.இது விசயமாக நமது ஆந்திரா மாநில செயலருக்கு அம் மாநில தலைமை பொது மேலாளர் அனுப்பிய குறுந்தகவல் படிக்க :-Click Here

7வது அனைத்திந்திய மாநாடு


சார்பாளர்கள் கவனத்திற்கு
1. Accommodation will be available from 5th to          10th November(Morning)
2. Transport has been arranged from Sealdah and      Howrah Rly. Stn. Such arrangement can be made  from Shalimar,Kolkata Rly Stn. and Dumdum       Airport if so intimated.
3. Kitchen will be opened at Conference Venue from 5th (Dinner) to 9th (Dinner) November'2014.
4. Delegate fee for the 7th AIC has been fixed to Rs.800/- including Rs100 as CHQ levy .
5.The Conference will be inaugurated at 10 AM sharp on 6th November`14.

District Secretaries are requested to go through the Bulletin No:-2 and intimate to the Reception Committee immediately.Bulletin No:-2 பார்க்க :-Click Here

Thursday, October 16, 2014

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள்

மாநில சங்கத்தின் அறைகூவலின்படி போராடும் நெய்வேலி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நோக்கியோ ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சிகள் 










தமிழ் மாநில தலைவர் மற்றும் செயலருடன் நம் மாவட்ட பிரதிநிதிகள்

 தமிழ் மாநில தலைவர் மற்றும் செயலருடன் நம் மாவட்ட பிரதிநிதிகள் 



Wednesday, October 15, 2014

Broadband subscribers up 4.95 per cent during Aug

     The number of broadband subscribers increased to 74.31 million at the end of August 2014 from 70.81 million at the end of July, registering a monthly growth rate of 4.95 per cent. Wired subscribers grew 0.06 per cent to 15.05 million subscribers. Mobile devices users (phones and dongles) increased 6.29 per cent to 58.82 million. Mobile devices users (phones and dongles) grew 2.75 per cent to 0.44 million. As on 31 August, the top five wired broadband service providers were BSNL (9.97million), Bharti Airtel (1.39 million), MTNL (1.13 million), Beam Telecom (0.40 million) and YOU Broadband (0.41 million). Top five service providers constituted 85.94 per cent market share of total broadband subscribers at the end of August. These service providers were BSNL (18.32 million), Bharti Airtel (16.53 million), Vodafone (12.52 million), Idea Cellular (9.86 million) and Reliance Communications Group (6.64 million). Wireless subscribers with less than 1 MB data usage in a month have not been considered as internet/broadband subscribers by Reliance Communication Group and Idea Cellular. As on 31 August, the top five wireless broadband service providers were Bharti Airtel (15.14 million), Vodafone (12.51 million), Idea Cellular (9.85 million), BSNL (8.35 million) and Reliance Communications Group (6.53 million).

               <courtesy :-TelevisionPost>

கார்போரேட் அலுவலகத்தை நோக்கி பேரணி

நமது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி உட்பட 6 தோழர்கள் பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர் .
புகைப்படம் பார்க்க :-Click Here
ஒப்பந்த ஊழியர்களின் டெல்லி பேரணி மாநில சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...