Saturday, October 25, 2014

CMD மற்றும் DOT செயலருடன் பேட்டி

         24-10-2014 அன்று தோழர் நம்பூதிரி  அவர்கள் நமது நிறுவன CMD மற்றும் DOT செயலர் அவர்களை சந்தித்து BSNL  நிறுவன புத்தாக்கம் பற்றி பேசியுள்ளார்.பேட்டியின் போது கருவிகள்  வாங்குவதற்கும், விரிவாக்கத்திற்கும் மத்திய  அரசு நமது BSNL நிறுவனத்திற்கு உடனடியாக நிதி உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்  45 மில்லியன் மொபைல் டெண்டரை ரத்து செய்ததால் தான் BSNL வளர்ச்சி குறைந்தற்கு காரணம் என்பதையும் , ஸ்பெக்ட்ரம் சரண்டர் செய்த கட்டணமான ரூபாய் 6000 கோடியையும் , USO fund ரூபாய் 1250 கோடியையும் அரசாங்கம் BSNL நிறுவனத்திற்கு  தராமல் உள்ளதையும் தோழர் நம்பூதிரி அவர்கள் DOT செயலர் அவர்களிடம் சுட்டி காட்டி உள்ளார் . BSNL புத்தாக்கதிற்கு அரசு தேவையான உதவிகளை   செய்திடும் என  DOT செயலர் பேட்டியின் போது கூறியுள்ளார் .சிறந்த சேவையையும் , நல்ல லாபத்தையும் ஈட்டிய கேரள மாநில BSNL ஊழியர்களை பாராட்டிய DOT செயலர் சேவையில் ஏற்படும் குறைபாடுகளை பற்றிய புகார்களை கூறி சேவையை    மேம்படுத்தவேண்டிய அவசியத்தை தனக்கு டெல்லி மற்றும் UP இல் ஏற்பட்ட அனுபவங்களை கூறினார் .FORUM சார்பாக சேவையை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி தோழர் நம்பூதிரி அவர்கள் விரிவாக விளக்கினார் . பென்சனருக்கு 78.2% IDA இணைப்பு வழங்கப்படாமல் காலதாமதம் ஆவதையும் DOT செயலரிடம் தோழர் நம்பூதிரி சுட்டி காட்டி உடனடியாக இப் பிரச்சனையை தீர்க்க கோரினார் .M/s Deloittee Committee பரிந்துரைகளை அமல்படுத்தும் முன் சங்கங்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என நமது CMD அவர்களிடம் வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தில் இது விசயமாக எடுக்கப்பட்ட முடிவை நிறுத்தி வைக்கவும் அவர் கேட்டு கொண்டார் . தொழிலாளர் நல சட்டங்கள்  ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்கள்  மத்தியில் அமல்படுத்தப்படவில்லை என்பதையும் CMD அவர்களிடம் தோழர் நம்பூதிரி அவர்கள்  சுட்டி காட்டினார் . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு தேவையான உதவிகள்  செய்திடவும் அவர் வலியுறுத்தி உள்ளார் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...