Friday, November 30, 2012

தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனம்....






உலகத்தீரே காதல் செய்வீர் என்றான் பாரதி.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகள் திவ்யாவுக்கும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. நாகராஜன் வன்னிய சாதியைச் சேர்ந்தவர். இளங்கோ ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.

இந்தக் காதலினால், பித்தம் தலைக்கேறிய ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் நாய்க்கன் கொட்டாய் பகுதியை அடுத்த நத்தம் காலனி, கொண்டாம்பட்டி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுமார் 300 ஆதிதிராவிடர் வீடுகள் பற்றியெறிந்து சாம்பலாகியுள்ளது.

நத்தம் காலனியில் மட்டும் சுமார் 150 வீடுகள் எரிந்து சாம்பலாகியிருக்கிறது. சுமார் 60 இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு ஓட்டிப் பிழைத்து வந்த டாடா ஏஸ் வாகனங்கள் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா நகரில் சுமார் 50 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இங்கே சுமார் 48 கேஸ் சிலிண்டர்களைத் திருடிச்சென்றுள்ளனர். கொண்டாம்பட்டியில் 90 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

சாதிவெறி தலைக்கேறிய கலவரக்காரர்களால் விளைவிக்கப்பட்ட பொருளாதார சேதத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள் மக்கள். இதில் கோயில் நகைகள் மட்டும் சுமார் 3.5 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

இந்த வெறியாட்டத்தை வர்க்க அரசியலை முன்னிறுத்துவதாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, பாட்டளி மக்கள் கட்சி என பெயர்வைத்துக் கொண்டாலும், (முன்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும்) வன்னியர் சங்சம்தான் நடத்தியது என எல்லா வெகுஜன ஊடகங்களும் அறிவிக்கின்றன. உண்மை அறியும் குழுக்களும் அறிவிக்கின்றன.

இந்த வெறியாட்டத்தை 2012 நவம்பர் 29ம் நாள் நடைபெற்ற மாநில செயற்குழு கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரனத்திற்காக ரூபாய் 1,00,000 அளிப்பதென முடிவு செய்துள்ளது. நமது மாவட்டத்தில் இருந்து ரூபாய் மூவாயிரத்தை நாமும் நிவாரனத்திற்கான நிதிக்காகப் பகிர்ந்து கொள்வோம்.

நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நிவாரனங்கள் தீர்வு அல்ல. மீண்டு வருவதற்கான உதவிதான். தீர்வு என்பது தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்படியான சாதி வெறியாட்டங்களுக்கு எதிராக நாம் நமது பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டுவதற்கு உறுதியேற்பதிலும் அதனைச் செயல்படுத்திலுமே இருக்கிறது. உறுதியேற்போம். செயல்படுத்துவோம்.

மாநில செயற்குழு...

          நமது மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த மாநில செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம், பொதுச் செயலர் கலந்து கொள்வதால், சரிபார்ப்புத் தேர்தலைத் சந்திக்கவிருக்கும் நேரத்தில் மாநிலத்தின் மையப்பபகுதியில் நடத்துவதுதே சரியாக இருக்கும் என நவம்பர் 29ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவு செய்தது. அதன்படி அடுத்த மாநில செயற்குழு ஜனவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும். அதற்கு அடுத்த செயற்குழு, சரிபார்ப்புத் தேர்தல் முடிந்த பின்னர், வெற்றிவிழாக் கூட்டத்தை ஒட்டியதாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும்.

Tuesday, November 27, 2012

மாவட்ட செயற்குழு

மாவட்ட செயற்குழு கூட்டம் 04-12-2012 அன்று விருதுநகர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

ஆய்படு பொருள் :
1.LCM/ Work committee items
2.Circle Executive report
3.Any other items with permission of chair.

போராட்டத்தைத் தீவிரப்படுத்த ஆலோசனைக் கூட்டம்

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சங்க தலைவர்கள் Joint Forum சார்பாக 24.11.2012 அன்று டாக்டர் Kruparani Killi, கம்யூனிகேஷன்ஸ் இணை அமைச்சர் அவர்களை சந்தித்து BSNL க்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளை உடனடியாக திரும்ப அனுப்பக் கோரினர். அதற்கான குறிப்பை அவரிடம் அளித்தனர். ITS அதிகாரிகள் விசயமாக போராட்டத்தை தீவிரபடுத்த Joint Forum முடிவு செய்துள்ளது. இது விசயமாக ஆலோசனை செய்வதற்கு 04-12-2012 அன்று Joint Forum கூடவுள்ளது.

Wednesday, November 21, 2012

பாரளுமன்றம் நோக்கிப் பேரணி

          ITS அதிகாரிகளை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கோரிக்கையை வலியுறுத்தி 2012 நவம்பர் 22 ஆம் நாள் பாராளுமன்றம் நோக்கி பெருந்திரள் பேரணி செல்வது என்ற முடிவை  Joint Forum of BSNL and MTNL unions and associations எடுத்து செயல்படுத்த உள்ளது. இந்தப் பேரணி நடக்கும் நவம்பர் 22 நாள் தேசிய அளவில் பிற தோழமைச் சங்கங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என மாநில, மாவட்ட, கிளைச் சங்கங்களுக்கு BSNLEU அறைகூவல் விடுத்துள்ளது.

JTO கேடருக்கான போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் தொடர்ந்த முயற்சியின் காரணமாக JTO கேடருக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. 31.3.2012 வரை உள்ள காலியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. 2000 முதல் 2012 வரையிலான காலியிடங்களுக்கு ஒரே தேர்வான நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த ஆண்டிற்கான தகுதி அவ்வருடத்தின் ஜூலை முதல் தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். <அனுமதிக் கடித நகல்>

போன் மெக்கானிக் போட்டித் தேர்வு

நமது சங்கத்தின் சீரிய தொடர்ந்த முயற்சியின் காரணமாக 31.3.2012 வரையிலான போன் மெக்கானிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கான அனுமதி கிடைத்துள்ளது. <அனுமதிக் கடித நகல்>

மாநில செயற்குழு

நமது மாநில செயற்குழு 29-11-2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. மாநில அளவில் பேசவேண்டிய விஷயங்கள் ஏதும் இருந்தால் தோழர்கள் கிளைச் செயலர்கள் மூலமாக, மாவட்டச் செயலரிடம் தகவல் கொடுக்கவும்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி... 2

          துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் 20-11-2012 அன்று  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதேஷ் குமார் குப்தா மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை  தோழர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். 06-12-2012 தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்த BSNL CMD மற்றும் டைரக்டர் (HR)  ஆகியோருக்கு  ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். நவம்பர் 20 அன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் .P.அபிமன்யு, தோழர் V.A.N.நம்பூதிரி, தோழர் R.L..மூட்கில், தோழர் அனிமேஷ் மிஸ்ரா, தோழர் சுப்புராமன், TEPU, தோழர் சுரேஷ்குமார், BSNLMS ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 06-12-2012 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் துணை முதன்மை தொழிலாளர் ஆணையர்.

Tuesday, November 20, 2012

அனாமலி

          1-1-2000 இல் CDA Pay scale இல் இருந்து IDA Pay Scaleக்கு மாறும் போது ஏற்பட்ட அனாமலி விசயமாக BSNL நிர்வாகம் எல்லா மாநிலங்களில் இருந்தும் தகவல்களைக் கேட்டுள்ளது. கடித நகல் <click here>

புதிய அங்கீகார விதிகளுக்கான கூட்டம்

          புதிய அங்கீகார விதிகளை விவாதிப்பதற்கு 19-11-2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாகம் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தது. அதனை விவாதிப்பதற்குத் தேவையான கால அவகாசம் பல மாதங்கள் ஆகும். ஆதலால் BSNL ஊழியர் சங்கம் 6 ஆவது சரிபார்பு தேர்தலை பழைய விதிகளின்படி நடத்தவேண்டும் என வலியுறத்தியுள்ளது. ஏனெனில் 13-02-2013 தேதி வரை BSNLEU சங்கத்திற்கு அங்கீகாரம் உள்ளது. புதிய விதிகளை உருவாக்க அதிக காலம் ஆகும் போது 13-02-2013 தேதிக்கு பிறகு எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் இல்லா சூழ்நிலை உருவாகும். இதைத்தான் நிர்வாகம் விரும்புகிறது. நிர்வாகத்தின் இந்தப் போக்கை நம் சங்கம் அனுமதிக்காது. இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு, அனைத்திந்திய தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Monday, November 19, 2012

தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு


          SNEA மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜன் தலைமையில் BSNLEU மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ், மாவட்ட உதவித் தலைவர் தோழர் புழுகாண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் தங்கதுரை, NFTE ராஜபாளையம் கிளைச் செயலர் தோழர் பிள்ளையார், ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் கூடலிங்கம், SEWA BSNL ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் செயலர் தோழர் அழகப்பன் ஆகியோர் முன்னிலையில் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள் தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்களைச் சந்தித்து, ITS அதிகாரிகள் எந்தவித நியாமுமின்றித் தொடரும் Deputation தொடர்பான விஷயங்களை விளக்கி, ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யைக் கொடுத்தனர். பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு லிங்கம் அவர்கள் மனுவின் மீது ஆவன செய்து,பதில் தருவதாக வாக்களித்துள்ளார். 


          நவம்பர் 22ல் கூடவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத் தொடருக்கு முன்னர் ‘பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கை மனுவின் பிரதி’யை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய சங்கம் விடுத்த சுற்றரிக்கையின் தொடர்வினையை குறித்த காலத்தில் முடித்த ராஜபாளையம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தினகரன் நாளிதழில் வந்த செய்தி

Friday, November 16, 2012

புதிய அங்கீகார விதிகளுக்கான சந்திப்பு

             BSNL மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தொழிற்சங்கத்திற்கான புதிய அங்கீகார விதிகளை உருவாக்குவதற்காக இம்மாதம் 19ஆம தேதி நடைபெறவிருக்கும் சந்திப்புக் கூட்டத்திற்கான கார்ப்பரேட் அலுவலகத்தின் கடித நகல்   <<click here>>

78.2% IDA fixation – DoT க்கு BSNL பதில் அனுப்பி உள்ளது

78.2% IDA fixation விசயமாக DOT ன் விசாரனைகளுக்கான பதில் கடிதத்தை BSNL நிர்வாகம் 15-11-2012 அன்று அனுப்பியுள்ளது. விரைவில் தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளில் மத்திய சங்கம் ஈடுபடும்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கையை வலியுறுத்தி...

      இன்று துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காஜியாபாத் பொதுமேலாளர் ஆதேஷ் குமார் குப்தாவின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 20-11-2012 தேதிக்குள்  நேரடி பேச்சுவார்த்தை நடத்த BSNL நிர்வாகத்திற்கு ஆணையர் உத்தரவு இட்டுள்ளார். இன்றைய கூட்டத்தில் BSNLEU சார்பாக தோழர் P.அபிமன்யு, தோழர் R.L.மூட்கில்  SEWA BSNL சார்பாக தோழர் N.D.ராம் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டத்தை 20-11-2012 தேதிக்கு துணை முதன்மை தொழிலாளர் ஆணையர் ஒத்திவைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் கிளைவாரியாக வேலைநிறுத்தத்தில்...

கிளையின் பெயர்    உறுப்பினர் எண்ணிக்கை   வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள்  லீவ்       பணிக்கு வந்தோர்  

அருப்புகோட்டை                         25                                                  17                                            2                        6

ஸ்ரீவில்லிபுத்தூர்                           32                                                  20                                             5                        7  

சாத்தூர்                                                19                                                   19                                          0                       0

துணைகோட்டம் ,விருதை     22                                                  11                                            2                       9 

துணைகோட்டம் , சிவகாசி     40                                                   25                                            5                       10

சிவகாசி ,  OCB                                  35                                                   14                                           10                      11

GM Office, விருதுநகர்                    63                                                    33                                           21                       9 

ராஜபாளையம்                              52                                                    22                                            26                      4      

மொத்த சதவீதம்             =        56.46

வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யப் பாடுபட்ட அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

விருதுநகர் மாவட்டத்தில் 100 விழுக்காடு உறுப்பினர்களை வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வைத்த ஒரே கிளையான சாத்தூர் கிளை - செயலருக்கும், உறுப்பினர்களுக்கும் நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தின் காரணமாக சாத்தூர் CSC மூடப்பட்டது. சாத்தூர் CSC தொலைபேசி நிலைய வளாகத்திற்கு உள்ளே இருப்பதால் சாத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தின் பிரதான வாசல் மூடப்பட்டு இன்று வேலைநிறுத்தம் என எழுதி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் வேலைநிறுத்தத்தின் காரணமாக மூடப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையங்கள்
தூத்துக்குடி SSA       : திருச்செந்தூர்
நாகர் கோயில் SSA    : நாகர் கோயில் 2 மையங்கள்
  கன்னியா குமரி
                          நெய்யூர்
                          கரிங்கால்
நீலகிரி SSA           : அனைத்து மையங்களும்
மதுரை       : மதுரை மத்திய தந்தி அலுவல அனைத்து மையங்களும்
                 TVS நகர்
                 உயர் நீதி மன்ற மையம்
விருதுநகர் SSA        : சாத்தூர்

கடலூர் மற்றும் தர்மபுரி SSAக்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100% வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். வாழ்த்துகள்.
பிற SSAக்களிலும் பெரும்பாண்மையான ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
எந்தச் சூழ்நிலையிலும், வர்க்க உணர்வோடு தோளோடு தோள் நிற்கும் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

தமிழகத்தில் வேலைநிறுத்தம்

விருதுநகர் – 55.74%
மொத்தம்       : 287
வேலை நிறுத்தம்     : 160
விடுப்பு         :  71
பணி            :  56

கடலூர் – 71.92%
மொத்தம்       : 261
வேலை நிறுத்தம்     : 187
விடுப்பு         :  36
பணி            :  38
ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

தர்மபுரி – 96.5%
மொத்தம்       : 320
வேலை நிறுத்தம்     : 309

நீலகிரி – ஒப்பந்தத் தொழிலாளர்கள் 100%

            நாகர்கோயில் மாவட்டத்தில் SEWA உறுப்பினர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாகர்கோயில் தொலைபேசி நிலையத்தின் முன்னால் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75 ஊழியர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
        சூழலைப் பயன்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டு நடத்திய நாகர்கோயில் தோழர்களுக்கு நமது வாழ்த்துகள்.

வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்த தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்

Thursday, November 15, 2012

வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்

         கொலைக் குற்றம் சாட்டப்பட்ட காஜியாபாத் பொது மேலாளர் ஆதேஸ் குமார் குப்தா மீது BSNL நிர்வாகமோ, DOTயோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. BSNL நிர்வாகத்தின் மீதும் DOT மீதும் தங்களைத் தற்காத்துக் கொள்ள ITS தனது அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நாளை வேலை நிறுத்தம் என்று நாம் முன்னரே எடுத்த முடிவில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பே இல்லை.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தன் இன்னுயிரை நீத்த தோழர் சுகேந்தர் பால் சிங் அவர்களுக்கு செவ்வஞ்சலி செலுத்தும் விதமாக வேலை நிறுத்தத்தை வரலாற்று வெற்றி பெற்றதாக மாற்றுவோம்.

வேலை நிறுத்தம் 00:00 மணி முதல் 00:00 மணிவரை

பாராளுமன்ற உறுப்பினரிடம் மனு...

          22-11-2012 ஆம்  தேதி கூடவுள்ள பாராளுமன்ற குளிர் கால  கூட்ட தொடருக்கு முன் கிளை செயலர்கள் தங்கள் பகுதியை உள்ளடக்கிய பாராளுமன்ற உறுப்பினரிடம்   ITS அதிகாரிகள் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக BSNL நிறுவனத்தில் Deputation அடிப்படையில் தொடர்வதை  விளக்கி ஏற்கனவே பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனுவை கொடுக்கவேண்டும்

பிரதமரிடம் சமர்ப்பித்த  கோரிக்கை மனு

மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

BSNL ஊழியர் சங்கம்
& 
தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்
மாநிலச் சங்கங்களின் வேலை நிறுத்தச் சுற்றரிக்கை

Tuesday, November 13, 2012

வேலை நிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் பங்கேற்பார்கள்

          காஜியாபாத் BSNLEU மாவட்டச் செயலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களின் படுகொலையைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் குற்றவாளி ஆதேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் 2012 நவம்பர் 16 ஆம் நாள் UNITED Forum of BSNL சார்பாக நடைபெறும் வேலைநிறுத்தத்தில் ஒப்பந்த ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் பங்கேற்பார்கள் என்று BSNLCCWF அறிவித்துள்ளது.

          BSNLCCWFன் மிகச்சரியான இந்த முடிவிற்கு BSNLEU நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

BSNLEU வின் முன்னணித் தோழர்கள் BSNLCCWF மற்றும் UNITED Forum தலைவர்களுடன் இணைந்து வேலைநிறுத்தத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

காஜியாபாத்தில் பெருந்திரள் பேரணி - இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்தது SSP அலுவலகம்




2012 நவம்பர் 16ல் வேலை நிறுத்தம்

      தோழர் சுகேந்தர் பால்சிங் அவர்களைக் கொலைசெய்ய குற்றவாளிகள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் என் காஸியாபாத் காவல் துறையை வலியுறுத்தியும்

       குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என BSNL நிர்வாகத்தை வலியுறுத்தியும்...

           நவம்பர் 16 ஆம் நாள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதென United Forum முடிவு செய்துள்ளது.

      நவம்பர் 16 வேலை நிறுத்தத்தில் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு அராஜகவாதத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்துத் தோழர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதை

கிளைச் செயலர்கள் உத்திரவாதப்படுத்த வேண்டும்.


Monday, November 12, 2012

காஜியாபாத் பேரணியும் ஆர்ப்பாட்டமும

      BSNL ஊழியர் சங்கத்தின் காசியாபாத் மாவட்டச் செலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங், மாவட்டத்தின் பொதுமேலேளர் ஆதேஷ் குமார் குப்தா மற்றும் அவருடைய அடியாட்கள் நால்வரால் பொதுமேலாளரின் தனியறையில் வைத்துக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். தலையில ஏற்பட்ட பலத்த காயத்தினால் இறப்பு நேர்ந்துள்ளது. பொதுமேலாளர் ஆதேஷ் குமார் மற்றும் அவரது அடியாட்கள் நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 மற்றும் 302 ஆகிய இரண்டு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 9 ஆம் நாள்வரை (19 நாட்களுக்குப் பிறகும்) குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. பொதுமேலாளரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்கள் அன்றாட வேலைகளில் சொகுசாக இருந்து வந்துள்ளனர்.

நமது மத்திய சங்கம் தொலைத் தொடர்புத் துறையையும், CMD BSNL ஆகியோரை மட்டுமல்லாது மான்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. கபில் சிபில் அவர்களிடமும் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றது. BSNLற்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளில் ஒருவரான ஆதேஷ் குமாரை DOTக்கு திரும்ப எடுத்துக் கொள்வதுகூட குறைந்தபட்சமாக நடைபெறவில்லை. தொலைத் தொடர்புத் துறையும் BSNLம் ஆதேஷ் குமாரை குற்றவியல் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சி செய்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இனியும் இதனை அனுமதிக்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும்கூட காஜியாபாத் காவல்துறை இதுவரை ஆதேஷ் குமாரை தொடாததற்கான காரணம் ஒவ்வொருவரும் அறிந்ததே. காஜியாபாத் பொதுமேலாளராக இருந்து முறைகேடான வழிகளில், ஊழலில் ஈட்டிய பணத்தை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர் செலவழித்து வருகிறார்.
காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியும், கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்னர் ஆர்பாட்டமும் செய்வதென்ற BSNLEU வின் முடிவின்படி 2012 நவம்பர் 9ஆம் நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
“உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். காவல் துறைக்கும் குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவிற்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்த வேண்டும். என்ற முழக்கத்தைக் கோரிக்கையாக வைத்து இயக்கம் நடத்தப் பெற்றது.
நமது BSNLEU சங்கத்தின் பொதுச்செலாளர் தோழர் P.அபிமன்யூ, தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி இருவரும் பேரணியை முன்னின்று நடத்தி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.











11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...