Friday, November 28, 2014

பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம்

 கேபிள் பகுதியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதமாதம் சம்பளம் கொடுப்பதில் Innovative நிறுவனம் கடும் காலதாமதம் செய்வதை கண்டித்தும் அன் நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்ய கோரியும் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் திரள் உண்ணாவிரத போராட்டம் தோழர் சமுத்திரகனி ,தோழர் ஜெயக்குமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது .26-11-2014 நடைபெற்ற லோக்கல் கவுன்சில் கூட்டத்தில் இப் பிரச்சனையை மாவட்ட பொது மேலாளரிடம் சுட்டி காட்டியும் இதுவரை பிரச்னை தீரவில்லை .அந்நிறுவனம் முறையாக EPF பணத்தையும் செலுத்தவில்லை .மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெண்டர் எடுத்துள்ள இந் நிறுவனம் எல்லா இடங்களிலும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதை நமது மாநில சங்கத்திடமும் எடுத்து கூறியுள்ளோம் .இன்று லேபர் அதிகாரியிடம் பிரச்சனையின் தன்மையை இ மெயில் மூலமாக அனுப்பி அந்த அதிகாரியிடம் பேசி மாவட்ட நிர்வாகமே ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தி உள்ளோம் . லேபர் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார் .அந்த அடிப்படையில் வரும் நிகழ்வுகளை பார்த்து அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை மாநில சங்கத்தின் ஆலோசனையுடன் தொடங்கப்படும் நேற்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை அனைவருக்கும் பேச வாய்ப்பு அளித்து ஒரு பயிற்சி பட்டறையாக நடைபெற்றது ஒரு சிறப்பு அம்சமாகும் . போராட்டத்தை வாழ்த்தி CITU சங்க மாநில பொறுப்பாளர் தோழியர் மகாலட்சுமி , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் ராதாகிருஷ்ணன் ,ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் .ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி, BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி , ஒப்பந்த ஊழியர் சங்க மாநில அமைப்பு செயலர்
தோழர் வேல்சாமி ,
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் முத்துசாமி ,அஷ்ரப் தீன் ,மதி கண்ணன் ,அனவரதம் ,இளமாறன் ,சிங்காரவேல்,சந்திரசேகரன் ,வெங்கடப்பன் ஆகியோர் எழுச்சிமிகு உரை நிகழ்த்தினர் .தோழர் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் தோழர் மாரிமுத்து நன்றி கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உண்ணாவிரத போராட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டது சிறப்பு மிக்கது .
    
      

தினகரன் செய்தி

பிஎஸ்என்எல் ஊழியர் உண்ணாவிரதம்

விருதுநகர் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 7ம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்; ஒப்பந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். போனஸ் சட்டப்படி 8.33 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்தில் மாவட்ட தலைவர் சமுத்திரகனி தலைமையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
<தினகரன் செய்தி >படிக்க :-Click Here

Thursday, November 27, 2014

வேலை நிறுத்தம்...

          2014 நவம்பர் 27 வேலை நிறுத்தம்... தமிழகத்தில் 75% ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்று வெற்றிகரமாக்கிய அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துகள்.

பட்டினிப் போராட்டம்

          தொழிலாளர் விரோத  INNOVATIVE நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து நிறுவனத்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி 2014 நவம்பர் 27 ஆம் நாள்  நடைபெற்ற பட்டினிப்போராட்டத்தில் 88 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 26 BSNLEU உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அதன் காட்சிப் பதிவுகள் சில....




















Saturday, November 22, 2014

Friday, November 21, 2014

Broadband subscriber base grew 1.92% to 75.73 million in Q2

செய்தி படிக்க :-Click Here

Total telephone user base rises to 95.76 crore in September, says TRAI

செய்தி படிக்க :-Click Here

எழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணம்

       கடந்த 3 நாட்களாக ஒன்றுபட்ட பிரசார பயணத்தை தொடங்குவதற்கு விருதுநகர் BSNLEU மாவட்ட சங்கம் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காதலால் இன்று முதல் நமது சங்கம் எழுச்சிமிகு வேலைநிறுத்த பிரசார பயணத்தை காலை 1000 அளவில் ராஜபாளையத்தில் தொடங்கியது. பெரும் திரளான ஊழியர்கள் மத்தியில் தோழர் அனவரதம் தலைமை தாங்க கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் தொடக்கஉரை ஆற்ற, நவம்பர் 27 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை எழுச்சிகரமான உரையை தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, முத்துசாமி, வெங்கடேஷ், கண்ணன்(மதி), ஒப்பந்த ஊழியர் சங்க மாநில பொறுப்பாளர் தோழர் வேலுசாமி ஆகியோர் நிகழ்த்தினர். தோழர் சிவஞானம் நன்றியுரை கூறினார்.







          அதன் பின் தளவாய்புரம் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திறகு மூத்த தோழர் பிரபு தலைமை வகிக்க தோழர்கள் ரவீந்திரன், சமுத்திரகனி, அஷ்ரப்தீன் ஆகியோர் பேசினர். இந்த இரண்டு நிகழ்சிகளையும் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த முத்துராமலிங்கம், வெங்கடேஷ், சிவஞானம், முருகன் (சத்திரப்பட்டி) ஆகியோருக்கு மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.


          மதியம் 1.30 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் தங்கதுரை தலைமை தாங்க தோழர் சமுத்திரம் கிளை செயலர் தொடக்க உரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி, தோழியர் பகவதி அவர்கள் உரை நிகழ்த்தினர்பிரசார பயண குழுவிற்கு மதிய உணவு நிதியாக ரூபாய் 1000/- வழங்கிய மாவட்ட சங்க துணை தலைவர் தோழியர் பகவதிக்கு மாவட்ட சங்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.





          மதியம் 330 மணி அளவில் சிவகாசி OCB தொலை பேசி நிலையத்தில் ஊழியர்களை நேருக்கு நேர் சந்தித்து வேலை நிறுத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்கிருத்து சிவகாசி பழைய தொலைபேசி நிலையம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் RSU தொலைபேசி நிலைய ஊழியர்களை சந்தித்து வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இன்றைய பிரசார பயணத்தில் மாவட்ட செயலருடன் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் சமுத்திரகனி, முத்துசாமி, மதிகண்ணன், சந்திரசேகரன், அஸ்ரப்தீன், முனியாண்டி, வெங்கடேஷ், முனீஸ்வரன், ஜெயபாண்டியன், கருப்பசாமி, முத்துராமலிங்கம், சமுத்திரம், L.தங்கதுரை, RGB உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், G.ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.





11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...