Sunday, June 23, 2013

ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு







          ஒப்பந்த ஊழியர் சங்க விருதுநகர் மாவட்ட 5 வது மாநாடு இன்று விருதுநகர் இல் BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் தோழர் செல்வராஜ், மாவட்ட தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது.
          ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை நமது மாவட்ட உதவி செயலர் M .பெருமாள்சாமி ஏற்றி வைக்க,தோழர் சிவஞானம்  கோஷம்  இட BSNLEU மகாநாட்டை தோழர் வேலுசாமி மாவட்ட செயலர் வரவேற்புரையுடன் துவக்கி வைத்தார்.








          BSNLEU  சங்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் துவக்க உரை ஆற்றினார். MAN POWER டெண்டர்  பகுதியில் வேலை செய்பவர்களுக்கு semi-skilled அடிப்படையில் ஊதியம் வழங்கப்படவேண்டும் எனவும், அப்போதுதான்  தேவையான எண்ணிக்கையில் MAN POWER பகுதியில் வேலைக்கு ஊழியர்கள் வருவார்கள் என குறிப்பிட்டார்.
          BSNLEU மாவட்ட செயலர் ரவிந்திரன் பேசுகையில்  நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்னையில் நமது சங்கம் எடுத்துள்ள முயற்சிகளை விரிவாக பேசினார்.






          சிறப்புரையாக மாநில செயலர் தோழர் M.முருகையா அவர்கள் நமது சங்க முயற்சியால் தற்போது மாநில நிர்வாகம் பிரதி மாதம் 10 தேதிக்குள் ஒப்பந்த ஊழிய்ரகளுக்கு ஊதியம் வழக்கப்பட வேண்டும் என உத்தரவு இட்டதை சுட்டி காட்டினார்.




          ஒரு கருத்தோவியமான  ஆண்டு அறிக்கையை தோழர் மதிகண்ணன் வாசிக்க, அருப்புகோட்டை கிளை செயலர் தோழர் R.ஜெயக்குமார் அவர்கள் விக்கிரமாதித்தன் சிம்மாசன கதை சொல்லி நமது சங்கம் செய்துள்ள சாதனைகளை கூறினார்.
          மாநாட்டில் வரும் 30-06-2013 அன்று பணி ஒய்வு பெறும்  மூத்த தோழர் M .பெருமாள்சாமி அவர்கள் சால்வை போற்றி கௌரவிக்கபட்டார். 
          மாநாட்டில் தோழர்  செல்வராஜ், டி.எம். தோழர் முனியசாமி, தோழர் மாரிமுத்து  ஆகியோர் முறையே  தலைவர், செயலர், பொருளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




புதிய மாவட்ட  செயலர் தோழர் முனியசாமிக்கு BSNLEU மாவட்ட சங்கத்தின் புரட்சிகர  நல்வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...