ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொதுக்குழு கூட்டம் இன்று மாலை கிளை தலைவர் தோழர் L தங்கதுரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர் தோழர் சமுத்திரம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது . ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாட்டை ஒரு குடும்ப விழாவாகவும், மூத்த தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவாகவும் நடத்திட முடிவு செய்யப்பட்டது .அவ் விழாவிற்கு நமது அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் செல்லப்பா மற்றும் தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழியர் மல்லிகா அவர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டது .மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை சங்க செயலர்கள் பெரும் திரளில் ஊழியர்களை திரட்ட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .




No comments:
Post a Comment