Sunday, March 22, 2015

சிறப்பு மாவட்ட செயற்குழு

     BSNLEU அமைப்பு தினமான இன்று திருவில்லிபுத்தூர் நகரில் நமது பி எஸ்  என் எல்  ஊழியர் சங்கத்தின் சிறப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட தலைவர் தோழர் A சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் R முனியசாமி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகிகளும் இச் செயற்குழுவில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் . அருப்புகோட்டை மற்றும் விருதுநகர் பகுதியை சேர்ந்த ஒரு சிலரை  தவிர அனைத்து கிளை  சங்க நிர்வாகிகளும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் செயற்குழுவில் பங்கேற்றனர் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் சமர்ப்பித்த அறிக்கையின் மீது அனைவரும் விவாதத்தில் பங்கேற்றனர் சிறப்புரையாக நமது மாநில உதவி செயலரும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் முருகையா கலந்து கொண்டார் . கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக செய்து புதிய இலக்கான 30,000/- கையெழுத்துக்களை பொது மக்களிடம் பெற்று வரும் 28-03-15 குள் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க அவர் வலியுறுத்தினார் .ஒப்பந்த ஊழியர் சங்க சந்தா வசூலை வரும் 25-03-2015 குள் முடித்து மாநில மட்டத்துக்கு அனுப்ப வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .
செயற்குழு முடிவுகள் 
1.தீண்டாமை ஒழிப்பு முன்னணி  மாவட்ட மகாநாட்டு நிதி யாக ரூபாய் 20,000/ ஐ கிளை வாரியாக கீழ்கண்டவாறு வசூல் செய்து மாவட்ட சங்கத்திடம் வரும் ஏப்ரல்  மாதம் 20 ம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் .
1. GM (O ) கிளை , விருதுநகர் -------- 3000
2. SDOP கிளை ,விருதுநகர்------------- 3000
3. SDOP  கிளை சிவகாசி ---------------- 3000
4.OCB  கிளை , சிவகாசி ----------------- 3000
5.சாத்தூர் கிளை --------------------------- 2000
6.அருப்புகோட்டை கிளை ----------- 2000
7. ராஜபாளையம் கிளை -------------- 2000
8.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை ------------ 2000  
2. ஒப்பந்த ஊழியர் மாவட்ட மகாநாட்டை வரும் ஜூலை மாதம் நடத்துவது .அதற்கு முன்பாக அச் சங்கத்தின் மாவட்ட செயற்குழுவை விரைவில் நடத்துவது .
3. ஒப்பந்த ஊழியர் சம்பள  பிரச்சனைக்கு Labour Enforcement officer அவர்களுக்கு innovative நிறுவனம் Labour Enforcement officer  க்கு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றாததை நினைவூட்டி கடிதம் எழுதுவது .
4. மாவட்ட சங்க நிதியாக வரும் ஜூன் மாதம் உறுப்பினர்கள் அனைவரிடமும் ரூபாய் 100/- வசூல் செய்வது .
5.ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாட்டை குடும்ப விழாவாக வரும் மே மாதம் நடத்துவது  . 
6. லாங் ஸ்டே மாறுதலில் மாறுதல் கொள்கை அடிப்படையில் நிர்வாகம் அமல்படுத்த வலியுறுத்தி நமது சங்கம்  உறுதியாக இருப்பது .
7. 4 வருடம் பணி முடித்த அனைத்து கேடருக்கும் செக்சன்  மாறுதல்களை  வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அமல்படுத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது . 
8. கிளை கூட்டங்கள் நடத்தாத கிளைகள் உடனடியாக கிளை பொது குழுவை கூட்டுவது .
9. அனைத்து  கிளைகளிலும் நாளை சங்க கொடியை ஏற்றி  கொண்டாடுவது .
                     செயற்குழுவை சிறப்பாக நடத்திட உதவிகரமாகஇருந்த  ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை தோழர்கள் தோழர் சமுத்திரம் மற்றும் தங்கதுரை தலைமையை  மாவட்ட சங்கம் முழு மனதாக பாராட்டுகிறது .







No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...