Monday, March 30, 2015

செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு : நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என தகவல்

செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. 2ஜி, 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுத்த நிறுவனங்கள், 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு உடனடியாக செலுத்தவேண்டி உள்ளது. இந்தத் தொகையை நாளை மறுநாளுக்குள் செலுத்தும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் கோடி ரூபாயை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தவேண்டும். எனவே, கடன் சுமையை குறைக்க செல்ஃபோன் கட்டணத்தை உயர்த்த தனியார் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமிடத்திற்கு 5 முதல் 10 பைசா வரை கட்டண உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. 
                        நன்றி :-ஜெயா  நியூஸ் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...