Saturday, December 6, 2014

மத்திய சங்க செய்திகள்

        05-12-2014 அன்று நடைபெற்ற போரம் கூட்டத்தில் நமது பி எஸ் என் எல் நிறுவன புத்தாக்கத்திற்கு ஆதரவாக பொது மக்களிடம் ஆதரவு கோரி 1 கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை வரும் 11-12-2014 அன்று நடைபெற உள்ள கோரிக்கை தினம் மற்றும் ஆர்பாட்டம் அன்று தொடங்கி 25-02-2014 அன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி அன்று மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களிடம் சமர்பிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது அதே போல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு  17-03-2015 தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது .காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவில் ஊழியர்களை திரட்டி கருத்தரங்கம் நடத்தபடவேண்டும் என போரம் முடிவு செய்துள்ளது
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டியில் நமது BSNLEU சங்கம் சார்பாக தோழர்கள் அபிமன்யு ,பொது செயலர் ,தோழர் பல்பீர் சிங், தலைவர் ,தோழர் அனிமேஷ் மித்ரா,துணை தலைவர் ஆகியோர் இடம் பெறுவர்.
கேடர் பெயர் மாற்றத்திற்கான கமிட்டி கூட்டம் வரும் 09-12-2014 அன்று நடைபெறும்.
PLI கமிட்டி கூட்டம் 10-12-2014 அன்று நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...