Friday, December 19, 2014

மாவட்ட செயற்குழு

          விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் 18-12-2014 அன்று மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் M.முத்துசாமி அஞ்சலி  உரை நிகழ்த்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் தன் தலைமையுரையில் சேவையை மேம்படுத்த மாவட்ட  நிர்வாகம் செய்யவேண்டிய பணிகளையும் அதை விரைவுபடுத்துவதற்கு நமது சங்கம் செய்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மாவட்ட செயலர் தனது உரையில் மாநில செயற்குழுவில் நமது  பொது செயலர் சுட்டி காட்டிய விசயங்களையும், மாவட்ட செயற்குழு எடுத்த முடிவுகளையும் விரிவாக  கூறினார். மாவட்ட செயலரின் எடுத்துரைத்த கருத்துக்கள் மீது ஒரு செழுமையான விவாதம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை  மிகவும் சக்தியாக கிளைகள் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

          ஜனவரி மாதம் 24 ஆம் தேதி விருதுநகர் GM அலுவலக கிளை மகாநாட்டை ஒட்டி BSNL புத்தாக்கம் விசயமாக "மாவட்டம் தழுவிய கருத்தரங்கம்" நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அக்கருத்தரங்கில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயலர் தோழர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொள்வர். அதில் கலந்து கொள்ள அனைத்து சங்கங்களையும்  அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொள்ள அனைத்து கிளைகளுக்கும் கீழ் கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
1.சிவகாசி               ------- 40 தோழர்கள்
2.ராஜபாளையம் ------- 20 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ----15 தோழர்கள்
4.அருப்புகோட்டை  ---12 தோழர்கள்
5.சாத்தூர்         ------------- 5 தோழர்கள்
6. விருதுநகர்              ----60 தோழர்கள்
7.ஒப்பந்த ஊழியர் சங்கம் ---70 தோழர்கள்

          அதே போல் மாநில அளவில் நடைபெறும் கடலூர் கருத்தரங்கில் பங்கு பெற கீழ் கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது .
1.சிவகாசி                 ------- 5 தோழர்கள்
2.ராஜபாளையம்  ------- 2 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர்  ----4 தோழர்கள்
4.அருப்புகோட்டை   ---4 தோழர்கள்
5.சாத்தூர்        ------------- 2 தோழர்கள்
6. விருதுநகர்              ----5 தோழர்கள்

          பிப்ரவரி 25 இல் நடைபெறும் டெல்லி பேரணியில் கலந்துகொள்ள கீழ்கண்டவாறு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
1.சிவகாசி               ------- 4 தோழர்கள்
2.ராஜபாளையம் ------- 2 தோழர்கள்
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ----3 தோழர்கள்
4.அருப்புகோட்டை   ---2 தோழர்கள்
5.சாத்தூர்        ------------- 1 தோழர்
6. விருதுநகர்              ----4 தோழர்கள்

          லோக்கல் கவுன்சில் விவாதிக்கப் பட்ட பிரச்சனைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரி ஒரு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்த ஊழியர் சம்பள பிரச்னை மாநில செயற்குழுவில் நமது மாவட்ட செயலர் சுட்டி காட்டி உள்ளார். ஒரு ஒன்று பட்ட போராட்டத்தை மாநில சங்க வழிகாட்டலின்படி நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.




 












No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...