Thursday, December 18, 2014

தமிழ் மாநில செயற்குழு

17-12-2014 அன்று நமது தமிழ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில தலைவர் தோழர் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது .நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு சங்க கொடியை ஏற்றி வைத்தார் .நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் விவாத குறிப்பை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார் .விவாதத்தில் அனைத்து மாவட்ட செயலர்களும் , புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .நமது பொது செயலர் தோழர் அபிமன்யு சிறப்புரை நிகழ்த்தினார் .மீண்டும் பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் அபிமன்யு அவர்களுக்கு மாநில சங்கம் சார்பாக நினைவு பரிசை மாநில சங்க நிர்வாகி தோழர் சுவாமி குருநாதன் வழங்கினார் .புதிய துணை பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் செல்லப்பா அவர்களுக்கு மாநில சங்க நிர்வாகி தோழியர் மல்லிகா நினைவு பரிசை வழங்கினார் .
1.ஒரு  கோடி கையெழுத்து இயக்கத்தை  ஜனவரி மாதம்  நிறைவு செய்து மாநில அளவில் ஆன கருத்தரங்கம் நடைபெறும் சமயத்தில் அகில இந்திய FORUM தலைவர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நமது பணிகளை நிறைவு செய்யக் வேண்டும் .
2.மாநில அளவில் ஆன கருத்தரங்கம் வரும் ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் .
3.பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரணியில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த படசம் 5 ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும் .
4.BSNL வளர்சிக்கான மாவட்ட அளவில் ஆன கருத்தரங்குகளை உடனடியாக நடத்திட வேண்டும் .
5.மத ஒற்றுமையை வலியுறுத்தி மாநில அளவில் ஆன கருத்தரங்கம் ஏப்ரல் முதல் வாரத்தில் மதுரையில் நடைபெறும் .மதுரை மாவட்ட சங்கம் அதற்கான தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளது .
6.தொழிற் சங்க வளர்சிக்கான மண்டல வாரியான கருத்தரங்குகளை மே, ஜூன் மாதங்களில் நடத்துவது .
7. நவம்பர் 27 இல் நடைபெற்ற  வேலை நிறுத்தம் பற்றிய ஆய்வில் 90.70% அளவில்  நீலகிரி மாவட்டம் மிக சிறப்பாக நடத்தியுள்ளதை மாநில சங்கம் பாராட்டியது . அதே போல் தர்மபுரி மாவட்டத்திலும் 85 % அதிகமான தோழர்கள் பங்கேற்றதை மாநில சங்கம் பாராட்டியது .வேலை நிறுத்த பலவீனங்களை  களைவது பற்றி தோழர்கள் கருத்துக்களை பாத்து செய்தனர் .  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...