Wednesday, April 30, 2014

ஏப்ரல் 30 ஹிட்லர் தற்கொலையும் அதன் தொடர்ச்சியான மே முதல் நாளும்

கோயபல்சும் ஹிட்லரும்
குடும்பத்தாருடன் கோயபல்ஸ்
          பெர்லினை சோவியத் படைகள் சுற்றிவளைத்திருந்த சூழ்நிலையில் திருமணம் செய்து கொண்டு உயில் எழுதிய ஹிட்லர் 1945 ஏப்ரல் 30ல் இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இருவருடைய உடலையும் வெளியில் யாருக்கும் தெரியாதவகையில் ஹிட்லரின் கொ.ப.செ. கோயபல்ஸ் எரித்துவிட்டார். பருத்தி வீரன் ஸ்டைலில் காணாப் பிணமாக்கி விட்டார்.
          பெர்லினில் 1945 மே1ல் வெற்றியின் அடையாளமாக சோவியத் கொடியேற்றப்பட்டது. ஜெர்மன் வானொலி ஹிட்லர் இறந்ததாக அறிவித்தது. இதே நாளில் உலகம் முழுவதிற்கும் இன்றுவரையில் தன் பொய்களால் போற்றப்படும் கோயபல்ஸ் தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.
          ஏறக்குறைய முசோலினி மற்றும் ஹிட்லரின் மரனத்துடன் இரண்டாம் உலகப்போர் ஒரு முடிவிற்கு வந்து விட்டது. முத்து துறைமுகத் தாக்குதலுக்கான பழிதீர்த்தல் என்றபெயரில் நடத்தப்பெற்ற அமெரிக்காவின் ஜப்பான் மீதான அணுகுண்டு தாக்குதல் என்பது அத்துமீறல்தான்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...