Saturday, April 26, 2014

ஏப்ரல் 26 - பெ.சுந்தரம் பிள்ளை நினைவுநாள்



              1855ல் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்து, தத்துவப் பேராசியராயாய் பணியாற்றியவர். தன்னுடைய 36 ஆம் வயதில் (1891ல்) மனோன்மணீயம் என்ற நாடகநூலை எழுதி வெளியிட்டார். இந்நாடகநூல் எழுதப்பெற்று 80 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நூலில் உள்ள ‘நீராருங் கடலுடுத்த...’ என்ற பாடல் சிற்சில திருத்தங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்தாக 1970ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இன்று மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையின் நினைவு நாள்.

திருத்தப்பட்ட பாடல் வடிவம்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

1 comment:

  1. புதிய தகவல்கள் பாராட்டுகிறேன்

    ReplyDelete

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...