![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdSMr9r1BJQMfPMD_z6j3SXM2GD7TSdLO6GK26OzEbe3m7Rtn1ghN6Cu7gb4PZRhypyn76U3iCWzwNjKVD3iv3sLlrF983hMxWeMXDmLD95om_r380Cd7tyL-enTtIqTOpN-Ktqgub0ew/s1600/Musolini+2.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtXCq73EUbgT3w5G_xJzgqv2gQp2d4R1Kgbhbo_2upt_JeS1kuNOcvAe6yf_iFY1G-_M4KcawKbhhO7RJlMxoNxI0Q-JYR03TzCfD8oz92GS6FZmlRRqJxU6C8jjypmhA66s_qa0Y6Ud0/s1600/benito-mussolini1.jpeg)
பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி என்ற முழுப்பெயர் கொண்ட முசோலினி இத்தாலி நாட்டுக்கு 1922க்குப்பின் தலைமை வகித்தவர். இத்தாலிய அரசை பாசிச அரசாக மாற்றி ஏகபோக சர்வாதிகார ஆட்சியை முசோலினி நடத்தினார். அரச கட்டமைப்புகளையும், தனியார் நிறுவனங்களையும், ஊடகங்களையும், திறனாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வன்முறை, பரப்புரை, ஏகபோக அணுகுமுறை ஊடாக பாசிச அரசை உருவாக்கிப் பேணினார். ஹிட்லருடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் போது நேச நாடுகளுக்கு எதிராகப் போரிட்டார். சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப்போரில் நுழைந்ததன் வழியாக நாசிப்படைகளின் கூட்டு தோல்வியைத் தழுவியது.
ஏப்ரல் 1945 ஏப்ல் 28ல், முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் (உள்நாட்டு
எதிர்ப்புப் படையாகச் செயல்பட்டவர்கள்) அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன் கீழேயிருந்து அங்குவாழ் மக்கள் அவர்களின் உடல்கள் மீது கற்களைக்கொண்டு அடித்து தங்கள் ஆத்திரத்தை தீர்த்துகோண்டனர். பலரும் வசைவு மொழிகொண்டு பதவியிழந்த தலைவரின் அட்டூழியங்களை கேலியும் கிண்டலுமாக பேசினர். முசோலினியின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் ஏறக்குறைய அதன்
முடிவை நெருங்கியிருந்தது.
No comments:
Post a Comment