Wednesday, April 10, 2013

மாநிலச் செயலரின் தேர்தல் செய்தி

          பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஐந்து உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்களில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது ஆறாவது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் ஏப்ரல் 16, 2013 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 18 சங்கங்கள் போட்டியிட்டாலும், பிரதான போட்டி என்பது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கும்,என்எப்டிஇ (பிஎஸ்என்எல்) சங்கத்திற்கும் இடையேதான்.

          பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிஎஸ்என்எல்-இல் உள்ள டிஇபியு, எஸ்இடபிள்யுஏ, பிஎஸ்என் எல்எப்என்டிஓபிஇஏ, பிஎஸ்என்எல் எம்எஸ் மற்றும் என்எப்டிபிஇ ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்து ‘செல்போன்’ சின்னத்தில் போட்டியிடுகிறது. என்எப்டி சங்கம், எஸ்என்ஏடிடிஏ, பிஎஸ்என்எல் இஎஸ், பிஎஸ்என்எல் பிஇடபிள்யுஏ, ஏஐபி சிடிஇஎஸ் மற்றும் பிஎஸ்என்எல்இசி ஆகிய சங்கங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

          இந்த தேர்தலில் இந்திய நாடு முழுவதும் பிஎஸ்என்எல்-ல் பணி புரியும் 2,04,796 ஊழியர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 1,15,000. (இதில் கூட்டணி சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை). என்எப்டிஇ சங்கத்தின் உறுப்பினர் எண் ணிக்கை 45,000க்கும் குறைவுதான். எனவே ஏப்ரல் 16 அன்று நடைபெற உள்ள 6-வது சங்க அங்கீகார தேர்தலிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கம்பீரமாக வெற்றி பெற்று தொடர்ந்து ஐந்தாவது முறையாக தொடர் வெற்றி என்ற சாதனையை படைக்க உள்ளது. வெற்றி நிச்சயம்.

          ஜனநாயகத்தின் பாதுகாவலன் : பிஎஸ்என்எல்-ல் ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கமான பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், விகிதாச்சார அடிப்படையில் சங்க அங்கீ காரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகத்திடம் வைத்து போராடி வந்தது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பிஎஸ்என்எல் நிறுவனம், புதிய அங்கீகார விதிகளை உருவாக்கி உள்ளது. கடந்த ஐந்து சங்க அங்கீகார தேர்தல்களிலும் அதிக வாக்குகளை பெறும் ஒரே சங் கத்திற்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடைபெற உள்ள ஆறாவது சங்க அங்கீகார தேர்தலில், 50 சதவிகிதத்திற்கும் மேல் ஒரு சங்கம் வாக்குகளைப் பெற்றது என்றால்/ ஒரே சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். 50 சதவிகித வாக்குகளை யாரும் பெறவில்லை என்றால், 35 சதமான வாக்குகளை பெறும் சங்கம் முதன்மை சங்கமாகவும், அடுத்து 15 சதமான வாக்குகளை பெறும் சங்கம் இரண்டாவது அங்கீகார சங்கமாகவும் அங்கீகரிக்கப்படுவார்கள். 2 சதவிகித வாக்குகளை பெறும் சங்கங்களுக்கு சில தொழிற்சங்க சலுகைகள் வழங்கப்படும்.

          ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் தான்’ என்று என்எப்டிஇ சங்கம் முதலில் முழங்கியது. இரண்டாவது தேர்தலில் தோற்கும்வரை இதைத்தான் பறைசாற்றியது. தேர்தலில் தோற்றவுடன், ‘இரண்டாவது சங்கத் திற்கும் அங்கீகாரம் கொடு’ என்று நிர்வாகத்திடம் மன்றாட ஆரம்பித்தது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்தான் முதலில் இருந்தே, தொடர்ந்து விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழங்கவேண்டும் என கொள்கை அடிப்படையில் நின்று போராடி வெற்றியும் பெற்றுள்ளது. எனவே ஜனநாயகத்தின் பாதுகாவலன் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம்தான்.

          பிஎஸ்என்எல்-ன் பாதுகாவலன் : கார்ப்பரேட் நிறுவனங்களின், தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இந்திய அரசாங்கம் இயங்குகிறது. இவர்களின் கட்ட ளைக்கு அடிபணிந்து பொதுத்துறை நிறுவ னங்களை இந்திய ஆட்சியாளர்கள் சூறையாடுகின்றனர். ’புதிய தாராளமய பொருளாதார கொள்கை’ என்ற பெயரில் இந்திய ஆட்சியாளர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கின்றனர். தனியாரை ஊக்குவித்து, பொதுத்துறைகளை நஷ்டமாக்கி பின் தனியாரை கேந்திர பங்குதாரராக  மாற்றி அவர்களுக்கு இந்த பொதுத் துறைகளை விற்கும் புதிய யுக்தியை கடைப்பிடிக்கின்றனர். இரண்டரை லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட பிஎஸ்என்எல் என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏற்படுவதற்கு அரசின் இந்த கொள்கைகள்தான் காரணம். அரசின் அனைத்து தொலை தொடர்பு கொள்கைகளும், என்டிபி 1995, என்டிபி 1999, என்டிபி 2005 மற்றும் என்டிபி 2012 ஆகிய அனைத்துமே தனியார் நிறுவனங்கள் கொழுக் கவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடையுமே செய்துள்ளன. இப்படிப்பட்ட அரசின் கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் பிப்ரவரி 2013 வரை நடை பெற்ற அனைத்து 15 தேசிய பொது வேலை நிறுத்தங்களிலும் பங்கேற்ற பெருமை பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த காலங்களில் என்எப்டிஇ சங்கம் இது போன்ற போராட்டங்களில் ஒதுங்கி நிற்கும். தலமட்டங்களுக்கேற்ப முடிவு செய்யுங்கள் என்று என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை உபதேசம் செய்யும். தொடர்ந்து நாம் வேலை நிறுத்தங்களில் பங்கேற்றதால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக சமீபத்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க என்எப்டிஇ சங்கத்தின் அகில இந்திய தலைமை அறிவிப்பாவது வெளியிட்டது. மெல்ல பிஎஸ்என்எல் மடியும் என்று மனப்பால் குடித்த ஆட்சியாளர்களின் மனக்கோட்டை தகரும் வண்ணம், பிஎஸ்என்எல்-ஐ உயிரைக் கொடுத்தும் காத்திடுவோம் என ஊழியர்களையும், அதிகாரிகளையும், உடலை சிலிர்ப்பி, நெஞ்சுயர்த்தி நின்று போராட்ட களத்தில் போராடச்செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தான். இப்படிப்பட்ட வரலாறு ஏதாவது என்எப்டிஇ சங்கத்திற்கு உண்டா? இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில், ‘அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை எதிர்க்க முடியாது’ என்பதே என்எப்டிஇ சங்கத்தின் கொள்கை முழக்கமாகும். உதாரணமாக தொலை தொடர்புத்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். என் எப்டிஇ சங்கம் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக நின்று தொலை தொடர்புத் துறையை கார்ப்பரேஷனாக மாற்ற வேண்டும் என்று செப்டம்பர் 2000ல் வேலை நிறுத்தம் செய்தது.

          கார்ப்பரேஷன் என்பது தனியார்மயத்தின் முதல்படி என்று ஊழியர்களிடம் விளக்கி கார்ப்பரேஷன் கூடாது என்று வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியது பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தலைமை. ஆனால் ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாக என்எப்டிஇ சங்கம் செயல்பட்டதால் பிஎஸ்என்எல் நிறுவனத்தை அரசால் எளிதாக உருவாக்க முடிந்தது. “பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஐம்பது சதவிகித பங்குகள் விற்கப்பட்டால், ஊழியர்களை மூன்று மாதம் ஊதியம் கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என கார்ப்பரேஷனாக மாற்றும்போது உடன்பாடு போட்டது அன்றைக்கு அங்கீகாரம் பெற்றிருந்த என்எப்டிஇ தலைமை. இதுஎன்எப்டிஇ-யால் மறைக்கவும் முடியாது. ஊழியர்களால் மன்னிக்கவும் முடியாது.

          பாஜக - ஐ.மு.கூட்டணி வித்தியாசம் ஏதும் இல்லை : முந்தைய பாஜக ஆட்சியில் ஜக்மோகன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தார். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அமைச்சரை சந்தித்து ‘இந்திய அரசாங்கத்திற்கு லைசென்ஸ் முறையில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ளது, வருவாய் பங்கீடு முறையில் கட்டணம் செலுத்துகிறோம்’ என்று மகஜர் கொடுத்தனர். “கட்டண முறையை மாற்றினால் அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்படும். பிஎஸ்என்எல் நஷ்டம் அடையும்” என்பதால் ஜக்மோகன் மறுத்தார். தனியார் கம்பெனிகள் பாரத பிரதமர் வாஜ்பாயை பார்த்தனர். பாரத பிரதமர் தனியார் கம்பெனிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். இந்திய அரசுக்கு 50,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. அதோடு தொலைத் தொடர்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து ஜக்மோகன் தூக்கியடிக் கப்பட்டார். தனியார்களின் செல்வாக்கு புரிகிறதா? ஐ.மு.கூட்டணிஅரசாங்கத்தின்நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி இருந்த போது, வோடோ போன்நிறுவனம்2007ஆம்ஆண்டு7,000கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்ற வரு மான வரித்துறை (ஐnஉடிஅந கூயஒ) குறிப்பினை ஏற் றார். 4,000 கோடி அபராதத்துடன், 11,000 கோடி ரூபாய்களை கட்ட வேண்டும் என வோடா போன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தார். வோடாபோன் 11,000 கோடியை கட்ட மறுத்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்றமோ ‘முன்தேதி யிட்டு வரிபிடித்தம் செய்ய வருமானவரித் துறையின் சட்டங்களில் இடம் இல்லை’ என்று கூறியது. பிரணாப்முகர்ஜி நாடாளு மன்றத்தில் வருமான வரி சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கூறினார். வோ டோபோன், பிரதமரை சந்தித்து முறையிட்டது. காங்கிரஸ் கட்சியும் சமயம் பார்த்து தனியார் கம்பெனிகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் சிதம்பரத்தை நிதி அமைச்சராகவும், கபில் சிபலை தொலை தொடர்புத்துறை அமைச்சராகவும் மாற்றியது. பின்பு ’பார்த்த சாரதி ஷோம்’ தலைமையில் ஒரு கமிட்டி போட்டு வோடோபோன் நிறுவனம் 11,000 கோடி ரூபாய்களை கட்டாமல் பார்த்துக் கொண்டனர். பன்னாட்டு பகாசுர கம்பெனி களின் பலம் புரிகிறதா?ஆனால் பிஎஸ்என்எல் என்ற பொதுத் துறை நிறுவனத்திலிருந்து பிடபிள்யுஏ ஸ்பெக்ட்ரம் கட்டணம் என்றும் லைசென்ஸ் கட்டணம் என்ற வகையிலும், 18,500 கோடி ரூபாய்களை இந்திய அரசாங்கம் எடுத்துக் கொண்டது. பிஎஸ்என்எல் நிறுவனம் கையிருப்பு இல்லாமல் தவிக்கிறது. இதையெல்லாம் எதிர்த்து தான் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அதிகாரிகளையும் ஊழியர்களையும் ஒன்று படுத்தி “FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS OF EXECUTIVES / NON EXECUTIVES” என்ற அமைப்பின் மூலமாக தொடர்ந்து போராடி வருகிறது.

          காப்பர் கேபிளை காத்தோம் : பிஎஸ்என்எல்-ன் மார்க்கெட் ஷேர் செல்போன் சேவையில் 11 சதவீதமாகவும், ப்ராட் பேண்ட் சேவையில் 65ஆகவும் இருக்கிறது என்று சமீபத்தில் தொலை தொடர்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ப்ராட்பேண்ட் சேவைக்கு மிகவும் அத்தியாவசிய தேவையான கேபிள்களை தனியாருக்கு தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் அதிகாரிகளின் சங்கங்களையும் ஊழியர்களையும் இணைத்துக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுத்தது. அதனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி கேபிளை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிட்டு தோழர் நம்பூதிரியிடம் ஒப்பந்தம் போட்டது. இதன் காரண மாகத்தான் இன்று ப்ராட் பேண்ட் சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்தை வகிக்கிறது.

          பங்கு விற்பனை : பிஎஸ்என்எல்-ன் பங்குகள் விற்பனை செய்வதை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடுமையாக எதிர்த்து போராடி தடுத்து வருகிறது. ஆனால் என்எப்டிஇ சங்கம் ‘50 சதவீதப் பங்குகள் விற்றாலும் பரவாயில்லை. பென்சன் வேண்டும்’ என்றே பிரச்சாரம் செய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட எட்டு ஆண்டுகளில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு சதவிகித பங்கினைக்கூட விற்க விடாமல் தடுத்த பெருமை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்திற்கு மட்டுமே உண்டு.

          விருப்ப ஓய்வுத் திட்டம் : முதல் சங்க அங்கீகார தேர்தலுக்கு பின் னர் பிஎஸ்என்எல்-ல் உள்ள 50,000 ஊழியர் களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பலாம் என்கின்ற நிர்வாகத்தின் முன்மொழிவினை என்எப்டிஇ சங்கம் ஏற்றுக்கொண்டது. அதனை நியாயபடுத்தும் வகையில், இது விருப்ப ஓய்வு திட்டம் கிடையாது. விருப்ப மாற்றியமைக்கும் திட்டம் என்று வியாக்கியானம் பேசியது. ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் இரண்டாவது சங்க அங்கீகாரத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கடுமையான எதிர்ப்பின் மூலம் அதனை முறியடித்துள்ளது. அதேபோல 2012ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் நியமித்த சாம் பிட்ரோடா கமிட்டியும், ஒரு லட்சம் ஊழியர்களை வீட் டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தது. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலமாக அரசின் முயற்சிகளை எல்லாம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து முறியடித்து வந்துள்ளது.

          என்எப்டிஇ சங்கம் 25 ஆண்டு காலத்திற்கு முன்பு போட்ட பதவி உயர்வு திட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மாற்றி புதிய பதவி உயர்வு திட்டத்தை புகுத்தியது. 98 சதவிகித ஊழியர்களுக்கு பல பத்தாயிரக் கணக்கான ரூபாய்கள் நிலுவைத் தொகையாகவும் பெற்றுத் தந்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்தான். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொடர்ந்து அரசு பென்சன் வழங்கப்படுவதை உறுதி செய்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம். அது மட்டுமல்லாமல் ஐடிஏ ஊதிய விகிதத் தில் பென்சன் மாற்றம் செய்ய முடியாது என்று இருந்ததை மாற்றி அமைத்தது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.

          ஒப்பந்த ஊழியர்கள் : பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர். இவர்களை நிர்வாகம் சுரண்டுவதைத் தடுக்க ஒப்பந்த ஊழியருக்கான அகில இந்திய/ மாநில அமைப்புகளை உருவாக்கி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத் தில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியர்களை திரட்டி மாநில சங்கம் அமைத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக போராடி வருகிறது. அதன் விளைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி ஊதியம் பெற்றுத் தந்துள்ளோம். அவர்களுக்கான சட்ட சலுகைகள் அமலாக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் நிரந்தரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

          ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக இந்திய நாட்டில் பல நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களுக்கெதிரான கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வரும் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அங்கம் வகிப்பதோடு, அவர்களுக்கு ஆதரவாக பல இயக்கங்களையும் நடத்தி வருகிறோம். தர்மபுரியில் தாக்குதலுக்கு உள்ளான தலித் மக்களுக்கு வழக்கு நிதியாகவும் ஒரு லட்ச ரூபாயினை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழங்கியும் உள்ளது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.

          பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க தொடர்ந்து போராடுவது... 
ஊழியர் நலனில் அக்கறை....
சமுதாயப் பார்வையோடு செயல்படுவது......
தேசத்தை பாதுகாக்கும் போராட்டத் தில் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து போராடுவது.....
என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வாக்குறுதி அளிக்கிறது.
50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் வெற்றி பெறப்போவது நிச்சயம்.
இன்னமும் அதிகமான வாக்குகளை பெற்று பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென பிஎஸ்என்எல் ஊழியர்களை தோழ மையுடன் மாநிலச் சங்கத்திற்காகக்  கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...