விருதுநகர் மாவட்டத்தில் Forum சார்பாக அகில இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக 3 ஆம் நாள் தர்ணா போராட்டம் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் R.முனியசாமி தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிறப்புரையாக CITU செயலர் தோழர் அசோகன் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். கடந்த இரண்டு நாட்களைவிட இன்று தர்ணாவில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். AIBSNLEA சங்கத்தை சேர்ந்த கணக்கு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். ஒப்பந்த ஊழியர்கள் இன்று பெருமளவில் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.
![](https://scontent-a-atl.xx.fbcdn.net/hphotos-xap1/v/l/t1.0-9/10906141_588415354624783_2593335016308799328_n.jpg?oh=c0b4df03ee81a729037ab22d1d58a723&oe=556C0FAE)
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/10922647_588415677958084_9108875637048726379_n.jpg?oh=f32efad8a54c789558bc9aa0762e3f9d&oe=55253086&__gda__=1428478554_72f72ffde55f8e4dcc71daf061086510)
![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/10922501_588415447958107_4869279633072988309_n.jpg?oh=9e5244a04fdaa38cdc068a833c067abf&oe=556F3903&__gda__=1429889589_83190940f82efbefae724a185d13c3e1)
![](https://scontent-b-atl.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10917100_588415554624763_7820652776230316740_n.jpg?oh=bde917274e6cbc1a02d4f9994a0042be&oe=5535F004)
No comments:
Post a Comment