Monday, March 17, 2014

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடு

                     ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடு 15-03-2014 அன்று கிளை தலைவர் தோழர் .L .தங்கதுரை தலைமையில் தொலை பேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது . தோழர் .பாண்டி அவர்கள் சங்க கொடியை ஏற்றி வைக்க அஞ்சலி தீர்மானத்தை தோழர் தங்கவேலு வாசிக்க கிளை செயலர் தோழர் வெங்கடசாமி வரவேற்பு உரை நிகழ்த்த மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மகாநாட்டை முறையாக தொடக்கி வைத்தார் .வெற்றிகரமாக நடைபெற்ற மாவட்ட மகாநாட்டின் மணம் மாறாத சூழ்நிலையில் நாம் மாவட்டத்தில் நடத்தவுள்ள இயக்கங்களின் முக்கியத்துவம் பற்றியும் , வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய பங்களிப்பை பற்றியும் ,ஊழியர் பிரச்சனைகளை கையாள்வதில் கிளை சங்கத்தின் முயற்சி அதிகப்படுத்தவேண்டிய கட்டாயத்தையும் மாவட்ட செயலர் எடுத்துரைத்தார் .சிறப்புரையாக பேசிய மாநில அமைப்பு செயலர் தோழர் செலவின் சத்யராஜ் ஒன்றாக இருந்த தபால் மற்றும் தொலை பேசி துறை பிரிக்கப்பட்டு அதன் பின் தொலைபேசி துறை கம்பெனி ஆக மாற்றிய அரசின் தனியார் மய முயற்சியை சரின்  கமிட்டி , மற்றும் சாம் பித்ரோடா   கமிட்டி பரிந்துரைகளை உதாரணம் காட்டி பேசினார் . ராஜ்காட் மத்திய செயற்குழுவின் முடிவுகளை அமலாக்க வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் . மாவட்ட தலைவர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது ஸ்தல மட்ட பிரச்சனைகளை  தீர்க்க நாம் நடத்த உள்ள போராட்டங்களை வலிமையுடன் நடத்த வேண்டிய அவசியத்தை கூறினார் . தோழர் அய்யாசாமி ,AIBDPA , தோழர் முனியசாமி ,ஒப்பந்த ஊழியர் சங்கம் , தோழர் C .வெங்கடேஷ் ,மாவட்ட உதவி செயலர் வாழ்த்துரை வழங்கினர் .மாவட்ட உதவி செயலர் இளைய தோழர் அஷ்ரப்தீன் , TTA அவர்கள் தன் கன்னி உரையை நிகழ்த்தினார் . கிளையின் மூத்த தோழர் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மகாநாட்டுடன் இணைந்து நடைபெற்றது .தோழரை வாழ்த்தி தோழர்கள் ரவீந்திரன்,புளுகாண்டி , தங்கதுரை ,அய்யாசாமி ,பெருமாள்சாமி ,ஜெயபாண்டியன் ,  சிவஞானம்  ஆகியோர் பேசினர் ..நிர்வாகிகளாக தோழர்கள் கந்தசாமி, சமுத்திரம் ,ராஜாராம் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளர் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டனர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...