Thursday, March 20, 2014

பிரமாண்டமான உண்ணாவிரத போராட்டம்

              முறைகேடான மாறுதல் உத்தரவு பிறப்பித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இன்று 20/03/2014 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் விருதுநகர் GM அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மிகவும் எழுச்சியான முறையில் ஒட்டு மொத்த ஊழியர்களும் கலந்து கொண்ட பிரமாண்டமான போராட்டமாக இது திகழ்ந்தது. மாவட்டம் முழுவதிலுமிருந்து 200க்கும் மேற்பட்ட தோழர்கள், தோழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டங்களிலேயே இந்த உண்ணாவிரத போராட்டம் ஒரு வித்தியாசமான பதிவாக பதிவானது. தனி நபரையோ, தனிப்பட்ட சங்கத்தையோ எதிர்த்து போராடாது மாவட்ட நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோத போக்கை கண்டித்தும்,முதன்மை சங்கத்தை கலந்து ஆலோசிக்காது போடபட்ட முறைகேடான மாறுதல் உத்தரவை மாற்றி அமைக்க கோரியும் நடைபெற்ற போராட்டம். நமது மாநில செயலர் தோழர் S.செல்லப்பா, மாநில உதவி செயலர் தோழர் முருகையா ஆகியோரின் தலையீட்டின் அடிப்படையில் மாநில நிர்வாகத்தோடு பேசி, மாநில நிர்வாகம் நமது பொது மேலாளரிடம் பேசி மாறுதல் உத்தரவு மாற்றப்பட்டு, DGM (ADMN) அவர்கள் நமது போராட்ட குழுவிடம் தெரிவித்தபின் நமது உண்ணாவிரத போராட்டம் மாவட்ட பொருளாளர் வெங்கடப்பன் நன்றி கூற முடித்து கொள்ளப்பட்டது. பெரும் திரளாக பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், அணி திரட்டிய கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், தீர்வுக்கு வழிகாட்டிய மாநில செயலர் தோழர் செல்லப்பா, மாநில உதவி செயலர் தோழர் முருகையா ஆகியோர்க்கும், வாழ்த்துரை வழங்கிய திரு. ராதாகிருஷ்ணன், AIBSNLEA, தோழர் அய்யாசாமி, AIBDPA, தோழர் பெருமாள்சாமி ஆகியோருக்கும் மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெர்வித்து கொள்கிறது. அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளை பேச வாய்ப்பு அளித்து பயிற்சி பட்டறையாக உண்ணாவிரத போராட்டத்தை மாற்றியது சிறப்பு அம்சமாய் திகழ்ந்தது.









No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...