Saturday, March 29, 2014

மாவட்ட செயற்குழு

       29-03-2014 அன்று முதல்  மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மறைந்த இடதுசாரி சிந்தனையாளர் தோழர் சிவசங்கரன் மற்றும் நெய்வேலியில் தொழில் பாதுகாப்பு படையால் சுட்டு கொல்லப்பட்ட ஒப்பந்த ஊழியர் ராஜ்குமார் மறைவிற்கு அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆய்படு பொருளாக வர உள்ள சொசைட்டி தேர்தல்,மக்களவை தேர்தலில் நமது பங்களிப்பு, லாங் ஸ்டே மாறுதல் ஆகியவை விவாதிக்கப்பட்டன.மாவட்ட மகாநாட்டு கணக்கு வழக்கு அருப்புகோட்டை கிளை செயலாளர் தோழர் ஜெயகுமார் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. கூடுதல் செலவை ஈடுகட்ட அருப்புகோட்டை கிளைக்கு மாவட்ட சங்கத்தால் ரூபாய் 7000/- வழங்கப்பட்டது.விவாதத்தில் அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நல்ல ஆலோசனைகளை வழங்கினர்.மக்களவை தேர்தலில் போட்டியிடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலர் தோழர் சாமுவேல் ராஜ் அவர்கள் நமது செயற்குழுவில் கலந்து கொண்டு பொது துறையை பாதுகாக்க தேர்தலில் நம்முடைய பங்களிப்பு எங்ஙனம் இருக்க வேண்டும் என விரிவாக விளக்கினார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பில் நமது சங்கம் ஒரு அங்கம் என்பதால் நமது சங்கம் சார்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்புக்கு ரூபாய் 75,000/- நிதியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.31-08-14 அன்று ஓய்வு பெறும்  ஒப்பந்த  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ அவர்கள் பணி ஓய்வு நாள் அன்று ஒரு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சிவகாசியில் நடத்த செயற்குழுவில் முடிவு எடுக்கபட்டது .மதியம் 2 மணி அளவில் மாவட்ட பொது மேலாளர் அவர்களை மாவட்ட சங்கம் பேட்டி கண்டது.5 pair கேபிள் பற்றாக்குறை ,மதுரை ரோடு பகுதியில் 200 pair போட வேண்டிய அவசியம் , கேபிள் டாஸ்க் போர்ஸ் உருவாக்க வேண்டிய  அவசியம் , அருப்புகோட்டை க்ரூப்ஸ் பகுதிக்கு JTO போடவேண்டிய அவசியம் , சிவகாசி நெட் வொர்க் பகுதியில் டீஸல் பற்றாகுறை , சிவகாசி எக்ஸ்டெர்னல் பகுதிக்கு கூடுதல் SDE நியமனம் ஆகியவை விவாதிக்கப்  பட்டன .தேர்தல் நிதியாக அனைத்து கிளைகளுக்கும் தலா ரூபாய் 8000/- நிர்ணயம் செய்யப்பட்டது .GM அலுவலக கிளைக்கு மட்டும் ரூபாய் 14,000/- நிர்ணயம் செய்யப்பட்டது. செயற்குழுவை வாழ்த்தி ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் R .முனியசாமி , ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் M .அய்யாசாமி ஆகியோர் பேசினர். தோழர் வெங்கடப்பன் நன்றியுரை கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...