Wednesday, March 19, 2014

தொடரும் கொடுமைகள்

          ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் இயங்கி வந்த கே.பி.ஆர்.மில்லில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இறங்கி, மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர 9 பேர் ஆபத்தான முறையில் பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

          
இச்சம்பவம் தொடர்பாக அத்தொழிற்சாலையின் தனி அலுவலர் ரமணன், ஆலை மேலாளர் ரங்கராஜன் மற்றும் சுத்திகரிப்பு நிலைய மேலாளர் நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
          
சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


விஷவாயுவால் உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளர்கள்….

          
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விஷவாயு தாக்கி கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட இறப்புகளின் விபரம் :
          
தூத்துக்குடியில், கடந்த ஆண்டு (2013) மார்ச் மாதம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியாகினர்.
          
அதற்கு அடுத்த மாதமான ஏப்ரலில் சென்னை பெரும்பாக்கத்தில் கழிவறைத்தொட்டியை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்.
          
இதே மாதத்தில், ஆயிரம் விளக்கு பகுதியில் உணவகம் ஒன்றின் 40 அடி கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர் பலியானார்.
          
2013, ஏப்ரல் 27ஆம் தேதி, திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சலையில் பாதாள சாக்கடை திட்டப்பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் உட்பட 3 பேர் விஷவாயு தாக்கி மரணமடைந்தனர்.
          
கடந்தாண்டு மே மாதம் 28 ஆம் தேதி தஞ்சாவூரில் வடக்கு வாசல் பகுதியில் ஆழ்துளைகிணறு உள்ளே இறங்கிய 2 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தனர்.

          
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் துப்புரவு தொழிலாளர்கள் 10 பேர் மரணமடைந்தனர்.
          
இதே ஆண்டு செப்டம்பர், 7 ஆம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது திருக்கழுகுன்றம் வடிகால் வாரியத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
          
செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி புழல் அருகே வீட்டு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
          
2013-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவேங்கடபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட 2தொழிலாளர்கள் விஷவாயு தாக்குதலுக்கு பலியாகினர்.
          
நவம்பர் 7ஆம் தேதி சென்னை அம்பத்தூர் பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பணியின் போது விஷவாயு தாக்கியதில் ஆந்திராவை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
          
இந்த ஆண்டு (2014) பிப்ரவரி 16ஆம் தேதி திருவொற்றியூரில் பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உயிரிழந்தார்.

          
பாதுகாப்பற்ற முறையில் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கியதால், விஷவாயு தாக்கியதில் 21 ஆம் நூற்றாண்டு தொடங்கியது முதல், கடந்த 15 ஆண்டுகளில் 800 பேர் உயிரிழந்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

தரவுகள் : Puthiyathalaimurai TV

The Hindu

New Indian Express










          
போதும் இந்தத் தொல்லை என பொங்கி வரும் கூட்டம், நிலை மாறும் வழி காணும் வகை செய்திட வேண்டும். நாம் நமது ஜனநாயகக் கடமையாற்ற உள்ள நேரத்தில் அடித்தள, பாட்டாளி மக்களுக்கான சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படுவோம். நமக்காகத் திட்டமிட வேண்டும். அதை நாம்தான் திட்டமிட வேண்டும்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...