ஏர்-இந்தியா நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் அரசுக்கு நிறைய சவால்கள் உள்ளன. விமானப் போக்குவரத்து வர்த்தகம் என்பது கடுமையான போட்டிகள் நிறைந்த ஒன்று என்பதை அந்நிறுவனத்தின் நிர்வாகமும், ஊழியர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.திட்டமிட்டபடி, இந்த வருடத்தில் ஏர் இந்தியாவுக்கு அளிக்கப்படும் ரூ 32,000 கோடியைத் தவிர மேற்கொண்டு அந்நிறுவனத்திற்கு அரசின் நிதி உதவி கிட்டாது. அவர்களே சமாளிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்த வர்த்தகத்தின் லாபங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. மற்றபடி, இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. முன்பு நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தே," என்று அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார் . இதே கருத்தை நமக்கும் நம் அமைச்சரும் கூறுவார் என எதிர்பார்க்கலாம் .
நன்றி :-ONE INDIA

No comments:
Post a Comment