Friday, February 15, 2013

பெருந்திரள் தர்ணா











            15-02-2013 அன்று அனைத்து சங்கங்கள் சார்பாக 78.2 % IDA  இணைப்பு தொடரபாக தேசம் தழுவிய அளவில் நடைபெற்ற தர்ணாவின்  ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் திரு P.கோவிந்தராஜன், SNEA,  மாவட்ட உதவி செயலர் தலைமையில் தர்ணா போராட்டம்   மாவட்ட தொலை தொடர்பு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. போராட்டத்தை AIBSNLEA மாநில பொறுப்பாளர் திரு T.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்து 78.2% IDA விசயமாக DOT திட்டமிட்டு காலதாமதம் செய்வதை  விரிவாக  எடுத்துரைத்தார். BSNLEU மாவட்ட செயலர் தோழர் S .ரவீந்திரன் இன்றைய அரசாங்கத்தின் மோசமான கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தை வலியுரிதினார்.

            TEPU சங்க மாவட்ட செயலர் தோழர் த.ஜெபக்குமார், BSNLEU  மாவட்ட தலைவர் தோழர் A. சமுத்திரகனி, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் A.கண்ணன், AIBDPA  மாவட்ட செயலர் தோழர் M.அய்யாசாமி ஆகியோர் வரும் பிபரவரி மாதம்  20,21 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றி விரிவாக  பேசினார்கள்.

            தோழர் M.S.இளமாறன் கோஷங்கள் எழுப்ப தர்ணா சிறப்பாக நிறைவு பெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் NFTE சங்கம் தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை.  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...