Thursday, February 27, 2014

மாவட்ட செயற்குழு

 புகைப்படங்கள்
          2014 பிப்ரவரி 25 ஆம் நாள் காலை BSNLEU விருதுநகர் மாவட்டச் சங்கப் பொறுப்பாளர்களையும் கிளைச் செயலர்களையும் அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து மாவட்ட மாநாட்டிற்கான திட்டமிடலுக்குகாகவும் செயல்பாட்டறிக்கையை இறுதிப்படுத்துவதற்காகவும் கணக்கு வழக்குகளை நேர்செய்வதற்காகவும் கூட்டப்பட்ட மாவட்ட செயற்குழு தலைவர் சமுத்திரக்கனியின் தலைமையில் மாவட்டச் செயலர் தோழர் ரவீந்திரனின் தொடக்க உரையுடன் தொடங்கியது. முதலில் கிளைகள் வாரியாக கணக்கு வழக்குகள் பொருளாளர் வெங்கடப்பன் அவர்களால் நேர் செய்யப்பட்டன. மாநாட்டு வரவேற்புக் குழுவின் செயலர் தோழர் உதயகுமார் மற்றும் அருப்புக்கோட்டை கிளைச் செயலர் தோழர் ஜெயக்குமார் இருவரும் இதுவரையில் மாநாடு தொடர்பாக அருப்புக்கோட்டையில் நடந்த சாதக பாதக விஷயங்கள், பணிகள் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டு மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதில் அருப்புகோட்டை கிளை முழு முனைப்புடன் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.அனைத்துக் கிளைச் செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் முனியசாமியும் தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். 2 நாள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை  செயலர்களும் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திய சூழலில் செயற்குழு இனிதே முடிவுற்றது.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...