Sunday, February 23, 2014

ஒரு சின்ன புள்ளி விவரம் பார்ப்போமா ?

                      2012 ம் ஆண்டு ராஜ்ஜிய சபையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கையில் , தெரிவிக்கப் பட்ட செய்தி , குஜராத்தில் , 41 % குழந்தைகள் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் . 55.3% சதவிகிதம் பெண்கள் ரத்த சோகையினால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் தான் ..... மீன் பிடிப்பதையும் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதையும் நமக்கு அப்பறம் சொல்லிக் கொடுக்கட்டும் , அதே காலக் கட்டத்தில் ,தமிழகத்தில் மேற்சொன்ன குறைபாடுகள் கொண்ட மக்கள் குஜராத்தை காட்டிலும் குறைவு என்பது கூடுதல் தகவல் .... மக்களை ஆரோகியமாக வைக்க வேண்டும் என்றால் , முதலில் கர்பிணிகள் , குழந்தைகள் போன்றவர்களுக்கு ஊட்டச் சத்துக்கள் அவசியம் , மலிவு விலையில் உணவு அவசியம் . நதியின் மீது சோலார் தட்டுக்களை அப்பறம் அமைக்கலாம் , முதலில் மக்கள் தட்டில் சோறை போடுங்கப்பா

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...