Saturday, February 22, 2014

தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலருடனான சந்திப்பு

          இம்மாதம் 18ஆம் நாள் நமது பொதுச்செயலர் தோழர் அபிமன்யு மற்றும் AIBSNLEA பொதுச்செயலர் திரு பிரகலாத் ராய் இருவரும் தொலைத் தொடர்பு துறையின் கூடுதல் செயலர் திருமதி ரீட்டா டியோட்டியா அவர்களை BSNL - MTNL ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக சந்தித்தார்கள். பிரதம மந்திரிக்கு Forum சமர்ப்பித்த நினைவுக் குறிப்பின் (memorandum) உள்ளடக்கத்தை இரண்டு தலைவர்களும் விரிவாக எடுத்துரைத்தார்கள். பெரும் பொருளாதார கடன் நெருக்கடியில் இருக்கக்கூடிய MTNL உடன் BSNL இணைக்கப்படக்கூடாது என்ற ஊழியர்களின் மனநிலையை அவர்கள் எடுத்துரைத்தார்கள். தலைவர்களின் கருத்துகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என கூடுதல் செயலர் உறுதியளித்துள்ளார்.
(குறிப்பு: விஷயத்தின் அவசரம் கருதி FORUMன் பிற தலைவர்கள் டெல்லியில் இல்லாத சூழலில் தலைவர்கள் இருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்)

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...