Wednesday, September 2, 2015

விருதுநகர் மாவட்ட வேலைநிறுத்த காட்சிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் பணி புரியும்  421 ஊழியர்களில் 252 பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர் .106 பேர் விடுப்பில் சென்றுள்ளனர் .62 பேர் பணி செய்துள்ளனர் .அதிகாரிகளில் 2 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர் .30 பேர் விடுப்பில் சென்றுள்ளனர் .74 பேர் பணியில் இருந்துள்ளனர் .வேலை நிறுத்தம் செய்த அதிகாரிகள் தோழர்கள் ராதாகிருஷ்ணன் ,Sr .AO , மற்றும் தோழர் M சுப்ரமணியன் SDE அவர்களுக்கு நமது மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறது . ராஜபாளயம் வாடிக்கையாளர் சேவை மையம் தவிர்த்து அனைத்து CSC களும் மூடப்பட்டன .வழக்கம் போல் அருப்புகோட்டை பகுதியில் பெரும் அளவில் பணிக்கு சென்றதை நமது சகோதர சங்கம் உரிய முறையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஒப்பந்த ஊழியர்கள் 100% வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது சிறப்பு மிக்கது ஆகும் .மாவட்டம் முழுவதும் போராட்ட விளக்க கூட்டத்தில் முழுமையாக பங்கேற்ற NFTE மாவட்ட செயலருக்கு நமது நன்றி .அதே போல் போராட்ட களத்தில் உறுதுணையாக இருந்த சேவா BSNL ,FNTO , SNATTA மற்றும்  விடுப்பில் செல்ல வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்று விடுப்பில் சென்ற அதிகாரிகளையும் BSNLEU சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...