Wednesday, August 21, 2013

முதல் நாள் தர்ணா

         இந்தியா முழுவதும் BSNL ஊழியர் சங்கத்தின் தலைமையின் கீழ் தேங்கி கிடக்கும் 30 அம்ச ஊழியர் பிரச்னைகளுக்காக 3 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் 21-08-2013 முதல் 23-08-2013 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று  21-08-2013  மாவட்ட தொலை தொடர்பு அலுவலகம முன்பாக BSNLEU மாவட்ட தலைவர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமை தாங்க மாவட்ட செயலர் S.ரவீந்திரன் தர்ணா போராட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார். தர்ணா போராட்டத்தை வாழ்த்தி JCTU நகர செயலர் தேனி வசந்தன், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் M.அய்யாசாமி, அதிகாரிகள் சங்க மாநில பொறுப்பாளர் டி.ராதாகிருஷ்ணன் மாவட்ட உதவி செயலர் M.பெருமாள்சாமி, அருப்புகோட்டை கிளை செயலர் R.ஜெயக்குமார், மாவட்ட உதவி தலைவர் P.புளுகாண்டி ஆகியோர் பேசினர். முதல் நாள் தர்ணாவில் 48 பேர்  கலந்து கொண்டனர். மாவட்ட செயலர்  நன்றி கூறி முதல் நாள் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்தார்.

முதல் நாள் தர்ணா புகை படங்கள்










No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...