Saturday, July 27, 2013

5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம்னா... உணவு பாதுகாப்பு மசோதா எதுக்கு?

          மத்திய திட்டக் குழு கிராமப் புற, நகர்ப்புற ஏழைகளுக்கான வரையறையை முன்வைத்து புள்ளி விவரங்களை வெளியிட்டதுதான் போதும்.. எத்தனை களேபர சர்ச்சைகள் சர்ச்சைகள். கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ. 33.33க்கு மேலும் வருவாய் ஈட்டுவோர் ஏழைகள் அல்ல என்கிறது மத்திய திட்டக் குழு. இதை வைத்துதான் மாநிலங்களின் வறுமை நிலைமை பற்றி திட்டக்குழு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் விவாதம் நடத்தி வருகின்றன. இதில் உச்சமாக மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா ரூ1க்கே வயிராற சாப்பிட முடியும் என்றார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ரசூத்தோ ரூ.5க்கே முழுமையாக சாப்பிட முடியும் என்று கூறினார். பாலிவுட் நடிகர் ராஜ்பப்பரும் தமது பங்குக்கு ரூ. 12க்கே நன்றாக சாப்பிட முடியும் என்றார். இப்போது அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
மேலும் செய்தி படிக்க : CLICK HERE

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...