மாவட்ட மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்ச்சியாக பிரதிநிதிகள் அமர்வு தோழர் R .ஜெயக்குமார் தலைமையில் 30/05/2018 அன்று காலை 10 மணிக்கு துவங்கியது .மாநில உதவி செயலர் தோழர் M .முருகையா முறையாக துவக்கி வைத்தார் .மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை விவாதத்திற்கு பின் மாவட்ட மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டது .நிதி நிலை அறிக்கையை மாவட்ட பொருளர் தோழர் சந்திரசேகரன் சமர்ப்பிக்க ,மாவட்ட மாநாடு முறையாக அதை ஏற்றுக்கொண்டது .CITU சங்கம் சார்பாக அதன் மாநில செயலர் தோழியர் மஹாலக்ஷ்மி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .இந்த மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தின் மூத்த தோழர் முத்தையா அவர்கள் மாநில உதவி செயலர் தோழர் முருகையா அவர்களால் கவுரவிக்கபட்டார் . மாவட்ட பொருளாளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .














No comments:
Post a Comment