Monday, August 10, 2015

கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL வசம் இருக்கும் 65000 டவர்களை நிர்வகிக்க ஒரு தனி நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவையும் நியமித்திருக்கிறது. BSNL டவர்களை தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்துகின்ற ஏற்பாட்டினை செய்து தரவே இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்படுகிறது. Deloitte Committeeன் நாசகரப் பரிந்துரைகளில் இதுவும் ஒன்று.
இந்த புதிய நிறுவனம் உதயமாகும் பொழுது BSNLன் துணை நிறுவனமாக இருக்கும். பின்னர் அது ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. துணை நிறுவனம், பின் கூட்டு நிறுவனம் என்பது எதில் போய் முடியும் என்பதற்கு VSNL ஒரு உதாரணம். இன்று VSNL இல்லை, அது டாடாவின் தனி நிறுவனமாக மாறி இருக்கிறது. அதே நிலையை நோக்கித்தான் இன்று டவர் நிறுவனம் உதயமாக இருக்கிறது. ரூ.25000 கோடி சொத்து மதிப்பு உள்ள 65000 டவர்களை BSNL இடம் இருந்து பறிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது.

இதைக் கண்டித்து 12.08.2015 அன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு FORUM அறைகூவல் விட்டிருக்கிறது.
நமது நிறுவனத்தின் சொத்துக்களை,
நமது கண் முன்னே பறிக்க நாம் அனுமதிக்கலாமா?


12.08.2015 அன்று காலை 1100 மணிக்கு
பொது மேலாளர் அலுவலகம் முன்
FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS சார்பாக ஆர்ப்பாட்டம்
நிறுவனத்தைக் காக்க வெகுண்டெழுந்து வாரீர்!

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...