Tuesday, January 8, 2013

விரிவடைந்த மாநில செயற்குழுமற்றும் சேவை கருத்தரங்கம்

          நமது BSNLEU சங்கத்தின்  தமிழ் மாநில விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் மற்றும் சேவைக் கருத்தரங்கம் வருகின்ற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சி மாநகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரோஷன் மஹாலில் மாநிலத்தலைவர் தோழர் K.மாரிமுத்து தலைமையில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள  விரிவடைந்த செயற்குழு கூட்டத்தை நமது அனைத்திந்திய பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு தொடக்கி வைக்க உள்ளார். அனைத்துக் கிளைச்செயலர்கள் மற்றும் முன்னணித் தோழர்களும் அவசியம் கலந்துகொள்ள தோழமையுடன் மாவட்டச்சங்கம் கேட்டுக் கொள்கிறது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு சிறு விடுப்பு உண்டு.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...