Saturday, January 12, 2013

ஆபத்தான அறிகுறி

எங்கே போகிறது தமிழகம்

        

          முதலிடம் நோக்கி தமிழகம் முன்னேறி வரு வதாக ஆண்ட, ஆள்கிற ஆட்சியாளர்கள் அடிக் கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது உண்டு. எந்த விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறுகிறதோ என்னவோ ஒரு விஷயத்தில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. குடிப்பழக்கம் எனும் விஷயத் தில் பிற மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முன்னேறுவதாக அதிர்ச்சி தகவல்கள் கூறுகின்றன.ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமி ழகம் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் கூறு கின்றன. நாள்தோறும் 50 கோடி ரூபாய் அளவு க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை யாகிறதாம்.கடந்த 2011 - 12 மார்ச் மாதம் வரை 23 ஆயி ரத்து 505 கோடியே 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளதாகவும் இதன் மூலம் அரசுக்கு 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2013ம் ஆண்டு மார்ச் நிதியாண்டின் முடிவில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் விற்பனை இருக்குமென் றும் இதன்மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி வரு வாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புள்ளிவிபரம் குறித்து தமிழக அரசு பெருமிதப்பட்டுக் கொள்ளமுடியாது. மதுபான விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் உயர்கிறது என்றால், கோடிக்கணக்கான குடும்பங்களில் வருமானம் சிதைகிறது. அந்த குடும்பங்கள் வீதிக்கு வருகிறது என்றே பொருள். உதாரணத் திற்கு மதுரை மாவட்டத்தில் மகளிர் காவல் நிலையங்களுக்கு 2000 குடும்ப தகராறு வழக்கு கள் வந்துள்ளன. இவற்றில் 75 சதவீதத் தகராறு காரணம் கணவர்களின் மதுப்பழக்கமாக இருந் துள்ளது.அண்மையில் நடந்த கொடூரமான பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்ட கயவர்கள் மதுபான மயக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்படுவோரும், மதுபோதையில் இருந்துள்ளது நிருபணமாகியுள்ளது. சமூக குற் றங்களுக்கு மதுப்பழக்கம் என்பது அடிப்படை யாக உள்ளது என்பது தெளிவு. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் இடமாற்றம் செய் யப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல கல்வி நிலையங்கள் அருகிலுள்ள கடைகளும் அகற்றப்படவேண்டும்.அண்மைக்காலமாக பதின் பருவத்திலேயே மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வருவ தாகவும், மது அருந்திவிட்டு பள்ளி வகுப்ப றைக்கு வரும் மாணவர்கள் கூட இருக்கிறார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித் துள்ளனர்.விசேஷ நாட்களில் இவ்வளவு மது விற்றாக வேண்டும் என்று அரசே இலக்கு தீர்மானிப்பதும் அதற்கேற்ப மதுபானக்கடைகளை அலங்க ரிக்க உத்தரவிடுவதும் வெட்ககேடானதாகும்.இதற்கு மாறாக மதுப்பழக்கம் குடும்பம் மற்றும் சமூகத்தை சீரழித்துவிடும் என்ற விழிப்பு ணர்வு பிரச்சாரம் அதிகரிக்கப்பட வேண்டும். மதுப்பாட்டிலில் மட்டும் அந்த வாசகங்கள் இடம் பெற்றால் போதாது. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்வதும் மறுபுறத்தில் மதுபான விற்பனை அதி கரித்துக் கொண்டே செல்வதும் நல்ல அறிகுறி அல்ல.
நன்றி :- தீக்கதிர் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...