Thursday, July 3, 2014

ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுக்குழு கூட்டம்

          இன்று மாலை 530 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் தோழர் கந்தசாமி அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது  தோழர் .சமுத்திரம் ஆய்படு  பொருளை சமர்ப்பித்து பொது குழுவை தொடங்கி வைத்தார் .ஒப்பந்த ஊழியர் பிரச்சனையில் நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் செய்த சாதனைகளை மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஆகியோர்  விரிவாக பேசி சங்கத்தில் கட்டுப்பாடு அவசியம் என  எடுத்துரைத்தனர். மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மாநில செயற்குழு முடிவுகளையும் , BSNL மற்றும் MTNL இணைப்பு அபாயம் பற்றியும் , டவர் தனி நிறுவனம் அமைக்கும் அரசின் போக்கையும் கூறினார்.மாவட்ட உதவி செயலர் தோழர்  வெங்கடேஷ் மற்றும் மாவட்ட துணை தலைவர் கண்ணன்  அவர்கள் ஒப்பந்த ஊழியர்கள்  ஒற்றுமையுடனும் ,கட்டுப்பாட்டுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை மிக அழகாக உதாரணங்களுடன் கூறினர் . தோழர் தங்கதுரை நடைபெற்ற நிகழ்சிகளை கூறினார் .மாநில மகாநாட்டு நன்கொடையை இம் மாதம் வசூல் செய்ய அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செயல்பட மாவட்ட சங்கம் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்களை கேட்டு கொண்டது . தோழர் A சண்முககுமார் ,TTA , மாவட்ட உதவி செயலர் தோழர் அஷ்ரப் தீன் சங்க வளர்சிக்கான நடவடிக்கைகளில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...