Saturday, December 29, 2012

மாவட்ட பொது மேலாளர் அலுவலக கிளை மாநாடு



          மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகக் கிளைமாநாடு மற்றும் தோழர் L.சங்கையா அவர்களின் பணிஒய்வுப் பாராட்டுவிழா 29-12-2012 அன்று சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. தோழர் M.பெருமாள்சாமி, மாவட்ட துணைச்செயலர் சங்கக்கொடி  ஏற்ற, தோழர் M.S.இளமாறன், கிளை செயலர் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்டச்செயலர். தோழர் S.ரவீந்திரன் துவக்க உரை ஆற்ற, தோழர் C.பழனிசாமி, மாநில உதவிச்செயலர், தோழர் M.முருகையா, மாநில உதவிச்செயலர் ஆகியோர் சிறப்புரை  ஆற்றினர். திரு T.ராதாகிருஷ்ணன், AIBSNLEA, தோழர் T.ஜெபக்குமார், TEPU, தோழர் M.அய்யாசாமி, தோழர் A.சமுத்திரகனி, மாவட்ட தலைவர், தோழர் M.முத்துசாமி, மாவட்ட உதவிச்செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் L.சங்கையா ஏற்புரை நிகழ்த்தினார். கிளைச்சங்க புதிய நிர்வாகிகளாக தோழர் A.மாரிமுத்து, தோழர் M.S.இளமாறன், தோழர் சித்திரவேல் ஆகியோர் முறையே  தலைவர், செயலர் மற்றும் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...