Saturday, January 4, 2014

கிளை செயலர்கள் கூட்டம்

         இன்று (04-01-2014) நமது சங்க கிளை செயலர்கள் கூட்டம் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . தோழர் M .முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார் .மாவட்ட மகாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் ஒப்புதல் பெறப்பட்டது .மாவட்ட மகாநாட்டின் பொது அரங்க நிகழ்ச்சி நடைபெறும் மார்ச் 6 ஆம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் பெருவாரியாக  கலந்து கொள்ள முடிவு செய்யபட்டுள்ளது 07-01-2014 அன்று நடைபெற உள்ள கருத்தரங்கம் மற்றும் நமது பொது செயலர் தோழர் .P .அபிமன்யு அவர்களின் பாராட்டு விழாவிற்கு 50 தோழர்கள் கலந்து கொள்வது என்பது உறுதி செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு பஸ் சிவகாசி பழைய தொலைபேசி நிலையத்தில் இருந்து இரவு 1000 மணிக்கு கிளம்பும்.ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தோழர்கள் உரிய நேரத்தில் சிவகாசிக்கு வந்து விட வேண்டும் .விருதுநகர் , சாத்தூர் மற்றும் அருப்புகோட்டை தோழர்கள் 1100 மணி அளவில் GM அலுவலக வளாகத்திற்கு வந்து விட வேண்டும் . பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நமது மாவட்ட செயற்குழு நடைபெறும் .அக் கூட்டத்தில் கிளை செயலர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கோட்டாவை மாவட்ட சங்கத்திடம் செலுத்தி விட வேண்டும், தோழர் வெங்கடப்பன் நன்றி கூற கிளை செயலர் கூட்டம் இனிதே முடிவுற்றது .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...