Thursday, October 27, 2016

2 வது மாவட்ட செயற்குழு கூட்டம்

     இன்று நமது BSNLEU சங்கத்தின் 2 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் L .தங்கதுரை தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேச அனைவரும்  1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்

பின்னர் மாவட்ட செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது விவாதம் நடைபெற்றது .வரும் நவம்பர் 10 போராட்டத்திற்கு 2 பேருந்துகளில் ஊழியர்களை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது .வரும் நவம்பர் மாதம் 17,18,19 தேதிகளில்   ரோடு ஷோ நடத்துவது .பெரும் எண்ணிக்கையில் நமது ஊழியர்களை ஈடுபடுத்துவது .ரோடு  ஷோகளில் விற்கப்படும் சிமகள் கடும் காலதாமதத்திற்கு பிறகு activation செய்யப்படுவது வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அனைவரும் சுட்டி காட்டினார்கள் .அனைத்து கிளை செயலர்களும் மாநில ,மாவட்ட சங்க செய்திகளை உடனடியாக சங்க பலகையில் போட  வேண்டும் .விருதுநகர் ,சிவகாசி தவிர்த்து அனைத்து  கிளைகளும் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் .பிரைமரி மற்றும் பில்லர் பிரச்சனைகள் சரி செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை அனைத்து பகுதியிலும் வந்துள்ளன .கேடர் பெயர் மாற்றத்திற்கு பிறகு அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ,வரும் 5 மாதங்களில் outdoor பகுதியில் அதிகம் பேர் பணி ஒய்வு பெற உள்ளதை ஒட்டி அலுவலக பணியில் இருந்து  TT  களை விடுவிக்க வேண்டும் , AO (drawal ) பகுதியில் ஊழியர் பிரச்சனைகள் அலைக்கழிக்கப்படுவதை பல தோழர்கள் சுட்டி காட்டி உள்ளனர் ஆவியூர் BSNL site இல் CALL DROP ஆவது, RR நகர், கலெக்டர் EXCHANGE பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் தண்ணீர் பிரச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் மைக்ரோ வேவ் குடியிருப்பில் சிண்டெக்ஸ் மாற்ற வேண்டிய பிரச்சனைகள்  பிராட் பேண்ட் மற்றும் 3G யில் உள்ள ஸ்பீட் பிரச்சனை, Outdoor பகுதியில் அதிகம் உள்ள JE களை அதிகம் தேவைப்படும் பகுதிகளுக்கு மாற்றுவது, N.சுப்பையாபுரம் BTS,  M.ரெட்டியாபட்டி  BTS, பெத்தூரெட்டியபட்டிBTS, சிவகாசியில் கவிதா நகர் காந்தி ரோடு,தெய்வானை நகர் பகுதிகளில் கேபிள் போடுவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு கடப்பாரை, மண்வெட்டி ஆகியவற்றை நிர்வாகம் வழங்குவது ,ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டு உள்ளதை சரி செய்ய கடிதம் கொடுப்பது, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ரிங்கை சரி செயவது என்று சேவையை வளப்படுத்தக்கூடிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன .மாவட்ட சங்கம் இதை முழுமையாக தொகுத்து நிர்வாகத்திற்கு கடிதம் வழங்கும் .லோக்கல் கவுன்சில் மற்றும் ஒர்க் கமிட்டி கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று இன்று நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்து உள்ளோம் .தேவைப்படும் இடங்களில் ஊழியர்களை நிரப்புவதில் நிர்வாகம் காலதாமதம் செய்தால் ஒரு எழுச்சிமிகு போராட்டத்தை நிர்வாகத்திற்கு எதிராக நடத்துவது என்ற முடிவோடு மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூற செயற்குழு நிறைவு பெற்றது . மதிய உணவுக்கான செலவை தன் தாயார் நினைவு தினத்தை ஒட்டி முழுமையாக ஏற்று கொண்ட மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் அவர்களுக்கு மாவட்ட சங்கம் தன நன்றியை தெரிவித்து கொள்கிறது .




















No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...