Thursday, September 18, 2014

7வது அனைத்திந்திய மகாநாடு

       நமது 7வது அனைத்திந்திய மகாநாடு வரும் நவம்பர் 6,7,8,9 தேதிகளில் கொல்கொத்தா  நகரில் நடைபெற உள்ளது .அகில இந்திய பகுதி பணம் செலுத்திய அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மத்திய  சங்கம் தெரிவித்து உள்ளது . கூடுதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்து உள்ளது .ஏற்கனவே ராஜ்கோட் மத்திய செயற்குழுவில் எடுக்கப்பட்ட இம்  முடிவை மாவட்ட சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என மத்திய சங்கம் கேட்டு கொண்டு உள்ளது . நவம்பர் 8 ஆம் தேதி “Revival of BSNL” தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும் என்றும் அதில் பங்கேற்க நமது CMD அவர்களை அழைக்க இன்று  நமது பொது செயலர் தோழர் அபிமன்யு மற்றும்  உதவி பொது செயலர் தோழர்  சுவோபன் சக்கரவர்த்தி ஆகியோர் இன்று CMD திரு A .N .ராய் அவர்களை சந்தித்தனர் .CMD அவர்கள் நமது அழைப்பை ஏற்று கொண்டு உள்ளார் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...