Saturday, December 28, 2013

சாத்தூர் கிளை மாநாடு

          சாத்தூர் கிளை மாநாடு 28-12-2013 அன்று தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் கனகாம்பரம் கிளை தலைவர் தலைமையில் சீரும் சிறப்புமாய் நடைபெற்றது. பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை தோழர் கனகாம்பரம் ஏற்றி வைக்க, ஒப்பந்த ஊழியர் சங்க கொடியை ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி ஏற்றி வைத்தார்.
          தோழியர் ஜெயஜோதி அஞ்சலி தீர்மானம் வாசிக்க,கிளை செயலர் தோழர் காதர்  மொய்தீன் வரவேற்புரை நல்க மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் மகாநாட்டை தொடக்கி வைத்து உரை ஆற்றினார்.
          மாவட்ட அமைப்பு செயலர் தோழர் கண்ணன், மாவட்ட உதவி செயலர்கள் தோழர் வெங்கடேஷ், தோழர் முத்துசாமி, ராஜை கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம், விருதை கிளை செயலர் தோழர் சிங்காரவேலு, சிவகாசி கிளை செயலர் தோழர் ராஜு, தோழர் கருப்பசாமி மற்றும் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி, மூத்த தோழர் பெருமாள்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
          சிறப்புரையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்களும் பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் அவர்களும் சிறப்புரை நிகழ்த்தினர். BSNLEU சாத்தூர் கிளையின் புதிய  நிர்வாகிகளாக தோழர்கள் கனகாம்பரம், காதர் மொய்தீன், கலைஅரசன் ஆகியோர் முறையே தலைவர்,செயலர், பொருளராக ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பல்வேறு கிளைகளில் இருந்தும் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...