Saturday, December 7, 2013

13 வது மாவட்ட செயற்குழு முடிவுகள்

07-12-2013 அன்று சிவகாசியில் நடைபெற்ற 13 வது மாவட்ட செயற்குழுவில் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன .
 மாவட்ட மாநாட்டை அருப்புகோட்டையில் மார்ச் மாதம் 5,6 தேதிகளில்  நடத்துவது.மாநாட்டை அருப்புகோட்டை கிளை சங்கம் ஏற்று நடத்தும் .வரவேற்ப்பு குழு தலைவராக அருப்புகோட்டை வர்த்தக சங்க செயலர் உயர்திரு .M .பாபு என்ற சங்கரநாராயணன் அவர்களும் வரவேற்பு குழு செயலராக அருப்புகோட்டை கிளை தலைவர் தோழர் U .B .உதயகுமார் அவர்களும் இருப்பர் .
2.முதல் நாள் சார்பாளர்கள் மற்றும் மாவட்ட சங்க  நிர்வாகிகள் கலந்து  கொள்ளும் பிரதிநிதிகள் அமர்வாக நடைபெறும் .ஆண்டறிக்கை ,நிதிநிலை அறிக்கை ,அமைப்பு நிலை விவாதம் ,சகோதர சங்க பிரதிநிதிகள் வாழ்த்துரை ஆகியவை  இடம் பெறும் .முதல் நாள் நிகழ்ச்சியை மாநில உதவி செயலர் தோழர் .C .பழனிசாமி அவர்கள் தொடக்கி  வைத்து உரை ஆற்றுவார் . சார்பாளர் கட்டணம் ரூபாய் 50/- என நிர்ணயம் செயப்பட்டுள்ளது .
3.இரண்டாம் நாள் பொது அரங்க நிகழ்வாக நடைபெறும் மாநாட்டை நமது மாநில செயலர் தோழர் S .செல்லப்பா அவர்கள் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துவார் .அன்று நடைபெறும் சேவை கருத்தரங்கில் நமது மாவட்ட பொது மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்வர் .அன்றைய தினம் ரத்த தான முகாம்  ஒன்றை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது .2 வது  நாள் நிகழ்ச்சியில் ஜனநாயக மாதர் சங்க செயலர்  தோழியர் சுகந்தி  மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் தோழர் தமிழ்செல்வன்  அவர்களை   உரை ஆற்ற அழைக்க வேண்டும்.2ஆம்  நாள் நிகழ்ச்சியில் வாழ்த்துரைக்கு சகோதர சங்கம் சார்பாக யாரையும் அனுமதிப்பது இல்லை .இன்றைய கூட்டத்தில் மாநில உதவி செயலர் தோழர் C .பழனிசாமி அவர்கள் பேசும் போது விருதுநகர் மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை  அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் எனவும் ,வேலை கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் எனவும் ,வர உள்ள நமது பொது செயலர் தோழர் அபிமன்யு அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 50 பேராவது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார் .நமது மாநில உதவி செயலர் நமது விருதுநகர் இணைய தளத்தை மிகவும் பாராட்டினார் .தோழர் .மதி கண்ணன் ,TTA அவர்கள் LCM  கூட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கை சமர்பித்தார் .5 pair கேபிள் மற்றும் டிராப் wire பிரச்னை பற்றி தோழர் கருப்பசாமி கூறினார் .P .Ramachandrapuram பவர் பிளான்ட் ,Task Force for  cable work ,சோழபுரம் தண்ணீர் பிரச்னை ,64 DSLAM free  @ சோழபுரம் ,ANRAX கார்டு  ரிப்பேர் அண்ட் சர்வீஸ் போன்ற ராஜபாளையம் பகுதி பிரச்சனைகளை தோழர் முத்துராமலிங்கம் பேசினார் .கல்குறிச்சி old என்ஜின் scrape பற்றி தோழர் சந்திரசேகரன் கூறினார்.மாவட்ட உதவி செயலர் தோழர் .M .முத்துசாமி பேசும்  போது நான் இவ்வளவு உயர்வான சம்பளம் வாங்குவதற்கு பி எஸ் என் எல் ஊழியர் சங்கமே காரணம் என்பதை தெளிவாக கூறினார்.மாவட்ட் மகாநாட்டிற்கு அனைத்து கிளை மற்றும் மாவட்ட் சங்க நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக  உறுதி அளித்து உள்ளனர் தோழியர் பகவதி அவர்கள் தன்னால் முடிந்த அளவு நன்கொடை வாங்கித்தருவேன் என்று கூறியதை அனைவரும்  கரவொலி செய்து வரவேற்றனர் .மாவட்ட செயற்குழு நடத்த தன இல்லத்தில் இடம் கொடுத்து சிறப்பான உணவையும் வழங்கி நமது மாவட்ட தலைவர் A .சமுத்திரகனி அவர்கள் அனைவர் நெஞ்சத்திலும்   இடம் பெற்றார் .மேலும் மாவட்ட மகாநாட்டிற்கு தன் பங்காக ரூபாய் 5000/- வழங்கினார் .ஓய்வூதியர் சங்கம் சார்பாக கலந்து கொண்ட தோழர் M .பெருமாள்சாமி  அவர்கள் தன பங்களிப்பாக ரூபாய் 1000/-வழங்கினார் .தோழர் ராஜ்மோகன் அவர்கள் பேசும் போது கேபிள் கட் பிரச்சனையை அவர் கையாண்ட விசயத்தை கூறினார் .எந்த exchange இல் பிரச்னை  என்றாலும் நான் வர தயாராய் இருக்கிறேன் என்று அவர் கூறியது பெருமைக்குரிய விசயமாக இருந்தது.ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி பேசும் போது ஒப்பந்த ஊழியர் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி பற்றியும் அவரகள் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசினார்.ஜனவரி 7 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு  விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ் பிடித்து 50 பேர் கலந்து கொள்வது என்று ஏகமானதாக முடிவு செய்யப்பட்டது .மாவட்ட பொருளர் தோழர் S .வெங்கடப்பன் நன்றி கூறி செயற்குழுவை முடித்து வைத்தார் .
மாவட்ட தலைவரின் தலைமை உரை 
செயற்குழுவின் ஒரு பகுதி 
மாவட்ட செயலர்  அறிக்கை தாக்கல் 
சமுத்திரகனி ரூபாய் 5000 நன்கொடையை  மாவட்ட செயலரிடம் அளித்தல் 

மாநில உதவி செயலர் பழனிச்சாமி அவர்களின் சிறப்புரை 
மதிகண்ணன் லோக்கல் கவுன்சில் விசயமாக  அறிக்கை தாக்கல் 
தோழர் பெருமாள்சாமி அவர்களின் உரை 
ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட செயலர் தோழர் முனியசாமி 
தோழர் பெருமாள்சாமி அவர்கள் ரூபாய் 1000 நன்கொடை அளித்தல் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...