Thursday, September 19, 2013

பேட்டி

இன்று( 19-09-2013)மாவட்ட சங்கம் நமது மாவட்ட பொதுமேலாளர் அவர்களை சந்தித்து பேட்டி கண்டது .கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன .
1.அனாமலி விசயமாக மாநில நிர்வாகம் கேட்ட விபரங்களை மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுப்பாமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம் .
2.செக்யூரிட்டி பகுதியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்க படாததை சுட்டி காட்டும் போது  நிதி ஒதுக்கீடு வராததால் இந்த நிலைமை என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது .நாம்   இதை மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு   செல்வோம் .
3.தவறுதல் ஆன அடையாள அட்டை வழங்குவதில் உள்ள தாமதத்தை நிர்வாகத்திடம் கூறியுள்ளோம் .
4.தேவையின் அடிப்படையில் சில பகுதிகளில் டெலிகாம் மெக்கானிக் நியமனம் செய்யபட வேண்டும் என கோரி உள்ளோம் .
5ஸ்ரீவில்லிபுத்தூர் குருப்ஸ் பகுதியில்  நடுநிலையான  போக்கு அமலாக  வேண்டும் எனவும்,தொழில் அமைதி பராமரிக்கபட வேண்டும் எனவும்  வலியுறுத்தி உள்ளோம் .
6. ரோடு அகலபடுத்தும் போது நெடுஞ்சாலை துறையால் நமது கேபிள்கள் சேதமாவது  தொடர்வதை தடுத்து நிறுத்த  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் .
இன்றைய பேட்டியில் மாவட்ட செயலருடன் , தோழர் ஜெயக்குமார்(அருப்புகோட்டை)மற்றும் சிங்காரவேல் (விருதுநகர் )கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...