Sunday, December 18, 2016

விடை கொடுத்தோம் அன்பு தோழனுக்கு


சென்னையில் சாலை விபத்தில் காலமான நமது அன்பு தோழர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்தோம் நேற்று காலையில் .மாவட்ட செயலருடன் ,கிளை செயலர்கள் முத்துசாமி ,மதி கண்ணன் ,மாரிமுத்து ,சமுத்திரம் அவர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகள்  சந்திரசேகரன் ,ராஜு ,அனவ்ரதம் ,அஷ்ரப்தீன் ,I .முருகன் ,தியாகராஜன் ,காதர் ,வெங்கடசாமி அவர்களும் , இராஜை கிளையின் ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களும், SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார், மாநில  சங்க நிர்வாகி கோவிந்தராஜ், மாவட்ட உதவிச் செயலர் தோழர் வெங்கடேஷ் உட்பட பெரும் எண்ணிக்கையில் மறைந்த தோழருக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செய்தனர் .மாவட்ட சங்கம் ஒரு நல்ல தொழிற்சங்கவாதியை இழந்தது மட்டும் அல்ல ஒரு திறமை மிக்க தொழில் நுட்ப ஊழியரை மாவட்ட நிர்வாகமும் இழந்து  விட்டது .சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நமது தோழருக்கு நமது தமிழ் மாநில  செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் SNEA மாநில  செயலர் ராஜசேகர்  அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...