Monday, May 25, 2015

கிளை செயலர்கள் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடும் தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் வரும் 30-05-2015 அன்று மதியம் 2.30 மணி அளவில் நடை பெற உள்ளது .அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் ,சென்னை RGB மற்றும் JCM உறுப்பினர்களும் தவறாது பங்கேற்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது . 
நமது தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 03-06-2015 அன்று சென்னையில் நடைபெற உள்ளது .மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனைகள் எதுவும் இருப்பின் மாவட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்கவும் .ஒப்பந்த ஊழியர்களுக்கு  ஏப்ரல் மாத ஊதியத்தை நிர்வாகமே வழக்கிட மாவட்ட பொது மேலாளர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் .ERP யில் அதற்கான பணிகள் நாளை தொடங்க உள்ளன .எந்த ஊழியர்க்கும் வங்கி கணக்கு எண் தவறாக இருந்தால் உடனடியாக மாவட்ட செயலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .இட மாறுதல் விசயத்தில் நிர்வாகம் மாறுதல் கொள்கைக்கு புறம்பாக தவறான  உத்தரவு வெளியிட்டால் உடனடியாக போராட்டத்தை   நமது சங்கம் நடத்திடும் .
                       

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...