முதன்மை பொதுமேலாளர் அலுவலக கிளை மற்றும் ஒப்பந்த ஊழியர் விருதுநகர் கிளை சங்கம் சார்பாக உலகமகளிர் தின சிறப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .நடைபெற்ற கூட்டத்திற்கு GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன் விருதுநகர் OD கிளை செயலர் தோழர் மாரிமுத்து தலைமை தாங்கினர் .மாவட்ட செயலர் ரவீந்திரன் தனது உரையில் ஆதிகால பொதுவுடமை சமுதாயத்தில் பெண்கள் வகித்த முன்னணி பங்கு ,மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பெண்களின் போராட்டம் ,தற்போது BSNL ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை விரிவாக பேசி நம்முன் இருக்கின்ற ஜனநாயக கடமையை உரிய முறையில் பொதுத்துறைகளை காக்க கூடிய இயக்கங்களுக்கு ஆதரிக்க செய்வது தான் இந்த மகளிர் தின சபதமாக கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார் .தோழர்கள் மாரிமுத்து மற்றும் இளமாறன் அவர்கள் வாழ்த்தி பேசினார்கள் .








No comments:
Post a Comment