நெஞ்சம் நெகிழ்ந்த நினைவஞ்சலி

விருதுநகர் மாவட்ட BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சார்பாக தோழர் முருகையா பட திறப்பு நிகழ்ச்சி இன்று 28/03/2019 இன்று விருதுநகர் முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் மாலை 3 மணிக்கு மாவட்ட தலைவர் R.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட உதவி செயலர் தோழர் A.கண்ணன் அஞ்சலி உரை நிகழ்த்தி அவருடன் பணி செய்த நினைவுகளை பகிர்ந்தார் .அவர் அஞ்சலி உரை நிகழ்த்தியவுடன் அனைவரும் மறைந்த வர்க்க போராளி தோழர் முருகையா அவர்களுக்கு கனத்த இதயத்துடன் மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் தோழர் முருகையா அவர்களின் திரு உருவ படத்தை மாநில அமைப்பு செயலர் தோழர் A .சமுத்திரக்கனி திறந்து வைத்து உரை நிகழ்த்தினார் .மறைந்த தலைவர்க்கு அஞ்சலி செலுத்தி தோழர்கள் ரவீந்திரன் , இளமாறன் ,வெள்ளை பிள்ளையார் ,முத்துச்சாமி ,தோழர் காதர் மொய்தீன் ,ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் T .ராதாகிருஷ்ணன் ,ஒப்பந்த ஊழியர் சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SDE,விருதுநகர் SNEA சங்கம் சார்பாக தோழர் காளியப்பன் ,AGM,விருதுநகர் ,தோழர் முருகையா அவர்களின் புதல்வன் திரு ,பாரதிராஜா ஆகியோர் பேசினர் .மாவட்ட பொருளாளர் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியறிதலை கூற நிகழ்வு முடிவுற்றது .





















No comments:
Post a Comment